இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 8 ஜனவரி, 2026

சனவரி 9 : முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

 சனவரி 9 :  முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13


அன்பார்ந்தவர்களே,

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.

மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.

இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 9th : Gospel 'If you want to, you can cure me'. A Reading from the Holy Gospel according to St. Luke 5: 12-16

 January 9th :  Gospel 

'If you want to, you can cure me'.

A Reading from the Holy Gospel according to St. Luke 5: 12-16 

While Jesus was in one of the cities, there came a man full of leprosy. And when he saw Jesus, he fell on his face and begged him, “Lord, if you will, you can make me clean.” And Jesus stretched out his hand and touched him, saying, “I will; be clean.” And immediately the leprosy left him. And he charged him to tell no one, but “go and show yourself to the priest, and make an offering for your cleansing, as Moses commanded, for a proof to them.” But now even more the report about him went abroad, and great crowds gathered to hear him and to be healed of their infirmities. But he would withdraw to desolate places and pray.

The Gospel of the Lord.

January 9th : Responsorial Psalm Psalm 147:12–13, 14–15, 19–20 (R. 12a)

 January 9th : Responsorial  Psalm

Psalm 147:12–13, 14–15, 19–20 (R. 12a)

Response : O Jerusalem, glorify the Lord!

O Jerusalem, glorify the Lord! O Sion, praise your God! He has strengthened the bars of your gates; he has blessed your children within you. 

R.: O Jerusalem, glorify the Lord!

He established peace on your borders; he gives you your fill of finest wheat. He sends out his word to the earth, and swiftly runs his command. 

R.: O Jerusalem, glorify the Lord!

He reveals his word to Jacob; to Israel, his decrees and judgments. He has not dealt thus with other nations; he has not taught them his judgments. 

R.: O Jerusalem, glorify the Lord!

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Jesus was proclaiming the gospel of the kingdom and healing every disease and every affliction among the people.

R. Alleluia.


January 9th : First reading There are three witnesses: the Spirit and the water and the blood A Reading from the First Letter of St.John 5:5-13

 January 9th :  First reading 

There are three witnesses: the Spirit and the water and the blood

A Reading from the First Letter of St.John 5:5-13

Beloved: Who is it that overcomes the world except the one who believes that Jesus is the Son of God? This is he who came by water and blood—Jesus Christ; not by the water only but by the water and the blood. And the Spirit is the one who testifies, because the Spirit is the truth. For there are three that testify: the Spirit and the water and the blood; and these three agree. If we receive the testimony of men, the testimony of God is greater, for this is the testimony of God that he has borne concerning his Son. Whoever believes in the Son of God has the testimony in himself. Whoever does not believe God has made him a liar, because he has not believed in the testimony that God has borne concerning his Son. And this is the testimony, that God gave us eternal life, and this life is in his Son. Whoever has the Son has life; whoever does not have the Son of God does not have life. I write these things to you who believe in the name of the Son of God, that you may know that you have eternal life.

The Word of the Lord.


புதன், 7 ஜனவரி, 2026

சனவரி 8 : நற்செய்தி வாசகம் இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று. ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22.

 சனவரி 8 :  நற்செய்தி வாசகம்

இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22.


அக்காலத்தில்

இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 8 : பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 14-15bc. 17 (பல்லவி: 11) பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

 சனவரி 8 :  பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 14-15bc. 17 (பல்லவி: 11)


பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

14

அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.

15bc

அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! - பல்லவி

17

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

சனவரி 8 : முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4 அன்பார்ந்தவர்களே,

 சனவரி 8 :  முதல் வாசகம்

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4


அன்பார்ந்தவர்களே,

கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 8th : Gospel 'This text is being fulfilled today, even as you listen'. A Reading from the Holy Gospel according to St.Luke 4: 14-22

 January 8th :  Gospel 

'This text is being fulfilled today, even as you listen'.

A Reading from the Holy Gospel according to St.Luke 4: 14-22 

At that time: Jesus returned in the power of the Spirit to Galilee, and a report about him went out through all the surrounding country. And he taught in their synagogues, being glorified by all. And he came to Nazareth, where he had been brought up. And as was his custom, he went to the synagogue on the Sabbath day, and he stood up to read. And the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written, “The Spirit of the Lord is upon me, because he has anointed me to proclaim good news to the poor. He has sent me to proclaim liberty to the captives and recovering of sight to the blind, to set at liberty those who are oppressed, to proclaim the year of the Lord’s favour.” And he rolled up the scroll and gave it back to the attendant and sat down. And the eyes of all in the synagogue were fixed on him. And he began to say to them, “Today this Scripture has been fulfilled in your hearing.” And all spoke well of him and marvellled at the gracious words that were coming from his mouth.

The Gospel of the Lord.


January 8th : Reslonsorial Psalm Psalm 72:1–2, 14 and 15cd, 17 (R. see 11)

 January 8th : Reslonsorial Psalm

Psalm 72:1–2, 14 and 15cd, 17 (R. see 11)

Response : All nations on earth shall fall prostrate before you, O Lord.

O God, give your judgment to the king, to a king’s son your justice, that he may judge your people in justice, and your poor in right judgment. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

From oppression and violence he redeems their souls; to him their blood is dear. They shall pray for him without ceasing, and bless him all the day. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

May his name endure forever, his name continue like the sun. Every tribe shall be blest in him, all nations shall call him blessed. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. The Lord has anointed me to proclaim good news to the poor, to proclaim liberty to the captives.

R. Alleluia.

January 8th : First Reading Anyone who loves God must also love his brother. A Reading from the First Letter of St.John 4: 19-5:4

 January 8th :  First Reading 

Anyone who loves God must also love his brother.

A Reading from the First Letter of St.John 4: 19-5:4 

Beloved: We love because he first loved us. If anyone says, “I love God”, and hates his brother, he is a liar; for he who does not love his brother whom he has seen cannot love God whom he has not seen. And this commandment we have from him: whoever loves God must also love his brother. Everyone who believes that Jesus is the Christ has been born of God, and everyone who loves the Father loves whoever has been born of him. By this we know that we love the children of God, when we love God and obey his commandments. For this is the love of God, that we keep his commandments. And his commandments are not burdensome. For everyone who has been born of God overcomes the world. And this is the victory that has overcome the world—our faith.

The Word of the Lord.