இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 12 ஜனவரி, 2026

January 13th : Gospel Unlike the scribes, he taught them with authority A reading from the Holy Gospel according to St.Mark 1:21-28.

 January 13th :  Gospel 

Unlike the scribes, he taught them with authority

A reading from the Holy Gospel according to St.Mark 1:21-28.

In the city of Capernaum, On the Sabbath Jesus entered the synagogue and was teaching. And they were astonished at his teaching, for he taught them as one who had authority, and not as the scribes. And immediately there was in their synagogue a man with an unclean spirit. And he cried out, “What have you to do with us, Jesus of Nazareth? Have you come to destroy us? I know who you are—the Holy One of God.” But Jesus rebuked him, saying, “Be silent, and come out of him!” And the unclean spirit, convulsing him and crying out with a loud voice, came out of him. And they were all amazed, so that they questioned among themselves, saying, “What is this? A new teaching with authority! He commands even the unclean spirits, and they obey him.” And at once his fame spread everywhere throughout all the surrounding region of Galilee.

The Gospel of the Lord.


January 13th : Responsorial Psalm 1 Samuel 2:1, 4–5, 6–7, 8abcd (R. see 1a) Response : My heart exults in the Lord, my Saviour.

 January 13th : Responsorial Psalm

1 Samuel 2:1, 4–5, 6–7, 8abcd (R. see 1a)

Response : My heart exults in the Lord, my Saviour.

“My heart exults in the Lord; my horn is exalted in the Lord. My mouth derides my enemies, because I rejoice in your salvation. 

R.: My heart exults in the Lord, my Saviour.

The bows of the mighty are broken, but the feeble bind on strength. Those who were full have hired themselves out for bread, but those who were hungry have ceased to hunger. The barren has borne seven, but she who has many children is forlorn. 

R.: My heart exults in the Lord, my Saviour.

The Lord kills and brings to life; he brings down to Sheol and raises up. The Lord makes poor and makes rich; he brings low and he exalts. 

R.: My heart exults in the Lord, my Saviour.

He raises up the poor from the dust; he lifts the needy from the ash heap to make them sit with princes and inherit a seat of honour. 

R.: My heart exults in the Lord, my Saviour.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Accept the word of God, not as the word of men, but as what it really is, the word of God.

R. Alleluia.

January 13th : First reading The Lord is mindful of Hannah and she gives birth to Samuel A Reading from the First Book of Samuel 1:9-20

 January 13th :  First reading 

The Lord is mindful of Hannah and she gives birth to Samuel

A Reading from the First Book of Samuel 1:9-20 

In those days: After they had eaten and drunk in Shiloh, Hannah rose. Now Eli the priest was sitting on the seat beside the doorpost of the temple of the Lord. She was deeply distressed and prayed to the Lord and wept bitterly. And she vowed a vow and said, “O Lord of hosts, if you will indeed look on the affliction of your servant and remember me and not forget your servant, but will give to your servant a son, then I will give him to the Lord all the days of his life, and no razor shall touch his head.” As she continued praying before the Lord, Eli observed her mouth. Hannah was speaking in her heart; only her lips moved, and her voice was not heard. Therefore Eli took her to be a drunken woman. And Eli said to her, “How long will you go on being drunk? Put your wine away from you.” But Hannah answered, “No, my lord, I am a woman troubled in spirit. I have drunk neither wine nor strong drink, but I have been pouring out my soul before the Lord. Do not regard your servant as a worthless woman, for all along I have been speaking out of my great anxiety and vexation.” Then Eli answered, “Go in peace, and the God of Israel grant your petition that you have made to him.” And she said, “Let your servant find favour in your eyes.” Then the woman went on her way and ate, and her face was no longer sad. They rose early in the morning and worshipped before the Lord; then they went back to their house at Ramah. And Elkanah knew Hannah his wife, and the Lord remembered her. And in due time Hannah conceived and bore a son, and she called his name Samuel, for she said, “I have asked for him from the Lord.”

The Word of the Lord.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

சனவரி 12 : நற்செய்தி வாசகம் மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

 சனவரி 12 :   நற்செய்தி வாசகம்

மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20


அக்காலத்தில்

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 12 : பதிலுரைப் பாடல் திபா 116: 12-13. 14,17. 18-19 (பல்லவி: 17a) பல்லவி: ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

 சனவரி 12 :   பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 14,17. 18-19 (பல்லவி: 17a)

பல்லவி: ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.


12

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

13

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

14

இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

17

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

18

இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

19

உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! 

காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

சனவரி 12 : முதல் வாசகம் அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

 சனவரி 12 :  முதல் வாசகம்

அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8


எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.

எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஓப்னியும் பினகாசும் இருந்தனர். எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு. அன்னாவின்மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, “அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ?” என்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 12th : Gospel I will make you into fishers of men. A Reading from the Holy Gospel according to St.Mark 1: 14-20.

 January 12th :  Gospel 

I will make you into fishers of men.

A Reading from the Holy Gospel according to St.Mark 1: 14-20. 

After John was arrested, Jesus came into Galilee, proclaiming the gospel of God, and saying, “The time is fulfilled, and the kingdom of God is at hand; repent and believe in the gospel.” Passing alongside the Sea of Galilee, he saw Simon and Andrew the brother of Simon casting a net into the sea, for they were fishermen. And Jesus said to them, “Follow me, and I will make you become fishers of men.” And immediately they left their nets and followed him. And going on a little farther, he saw James the son of Zebedee and John his brother, who were in their boat mending the nets. And immediately he called them, and they left their father Zebedee in the boat with the hired servants and followed him.

The Gospel of the Lord.

January 12th : Responsorial Psalm Psalm 116:12–13, 14 and 17, 18–19 (R. see 17a)

 January 12th : Responsorial Psalm

Psalm 116:12–13, 14 and 17, 18–19 (R. see 17a)

Response : A thanksgiving sacrifice I make to you, O Lord.

How can I repay the Lord for all his goodness to me? The cup of salvation I will raise; I will call on the name of the Lord. 

R.: A thanksgiving sacrifice I make to you, O Lord.

My vows to the Lord I will fulfil before all his people. A thanksgiving sacrifice I make; I will call on the name of the Lord. 

R.: A thanksgiving sacrifice I make to you, O Lord.

My vows to the Lord I will fulfil before all his people, in the courts of the house of the Lord, in your midst, O Jerusalem. 

R.: A thanksgiving sacrifice I make to you, O Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. The kingdom of God is at hand; repent and believe in the gospel.

R. Alleluia.

January 12th : First Reading Hannah's rival taunts her for being barren. A Reading from the First Book of Samuel 1:1-8

 January 12th :  First Reading 

Hannah's rival taunts her for being barren.

A Reading from the First Book of Samuel 1:1-8

There was a certain man of Ramathaim-zophim of the hill country of Ephraim, whose name was Elkanah the son of Jeroham, son of Elihu, son of Tohu, son of Zuph, an Ephrathite. He had two wives. The name of one was Hannah, and the name of the other, Peninnah. And Peninnah had children, but Hannah had no children. Now this man used to go up year by year from his city to worship and to sacrifice to the Lord of hosts at Shiloh, where the two sons of Eli, Hophni and Phinehas, were priests of the Lord. On the day when Elkanah sacrificed, he would give portions to Peninnah his wife and to all her sons and daughters. But to Hannah he gave a double portion, because he loved her, though the Lord had closed her womb. And her rival used to provoke her grievously to irritate her, because the Lord had closed her womb. So it went on year by year; as often as she went up to the house of the Lord, she used to provoke her. Therefore Hannah wept and would not eat. And Elkanah, her husband, said to her, “Hannah, why do you weep? And why do you not eat? And why is your heart sad? Am I not more to you than ten sons?”

The Word of the Lord.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

சனவரி 11 : நற்செய்தி வாசகம் திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

 சனவரி 11 :  நற்செய்தி வாசகம்

திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17


அக்காலத்தில்

இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.