இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 14 ஜனவரி, 2026

January 15th : Gospel The leprosy left the man at once, and he was cured A reading from the Holy Gospel according to St.Mark 1:40-45

 January 15th :  Gospel  

The leprosy left the man at once, and he was cured

A reading from the Holy Gospel according to St.Mark 1:40-45

At that time: A leper came to Jesus, imploring him, and kneeling said to him, “If you will, you can make me clean.” Moved with pity, he stretched out his hand and touched him, and said to him, “I will; be clean.” And immediately the leprosy left him, and he was made clean. And Jesus sternly charged him and sent him away at once, and said to him, “See that you say nothing to anyone, but go, show yourself to the priest, and offer for your cleansing what Moses commanded, for a proof to them.” But he went out and began to talk freely about it, and to spread the news, so that Jesus could no longer openly enter a town, but was out in desolate places, and people were coming to him from every quarter.

The Gospel of the Lord.


January 15th : Responsorial Psalm Psalm 44:10–11, 14–15, 24–25 (R. 27b) Response : Redeem us, O Lord, with your merciful love!

 January 15th : Responsorial Psalm

Psalm 44:10–11, 14–15, 24–25 (R. 27b)

Response : Redeem us, O Lord, with your merciful love!

Yet now you have rejected us, disgraced us; you no longer go forth with our armies. You make us retreat from the foe; those who hate us plunder us at will. 

R.: Redeem us, O Lord, with your merciful love!

You make us the taunt of our neighbours, the mockery and scorn of those around us. Among the nations you make us a byword; among the peoples they shake their heads. 

R.: Redeem us, O Lord, with your merciful love!

Awake, O Lord! Why do you sleep? Arise! Do not reject us forever. Why do you hide your face, and forget our oppression and misery? 

R.: Redeem us, O Lord, with your merciful love!

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Jesus was proclaiming the gospel of the kingdom and healing every disease and every affliction among the people.

R. Alleluia.

January 15th : First reading Israel is defeated and the ark of God is captured A Reading from the First Book of Samuel 4:1-11

 January 15th :  First reading 

Israel is defeated and the ark of God is captured

A Reading from the First Book of Samuel 4:1-11 

It happened that in those days, Israel went out to battle against the Philistines. They encamped at Ebenezer, and the Philistines encamped at Aphek. The Philistines drew up in line against Israel, and when the battle spread, Israel was defeated before the Philistines, who killed about four thousand men on the field of battle. And when the people came to the camp, the elders of Israel said, “Why has the Lord defeated us today before the Philistines? Let us bring the ark of the covenant of the Lord here from Shiloh, that it may come among us and save us from the power of our enemies.” So the people sent to Shiloh and brought from there the ark of the covenant of the Lord of hosts, who is enthroned on the cherubim. And the two sons of Eli, Hophni and Phinehas, were there with the ark of the covenant of God. As soon as the ark of the covenant of the Lord came into the camp, all Israel gave a mighty shout, so that the earth resounded. And when the Philistines heard the noise of the shouting, they said, “What does this great shouting in the camp of the Hebrews mean?” And when they learned that the ark of the Lord had come to the camp, the Philistines were afraid, for they said, “A god has come into the camp.” And they said, “Woe to us! For nothing like this has happened before. Woe to us! Who can deliver us from the power of these mighty gods? These are the gods who struck the Egyptians with every sort of plague in the wilderness. Take courage, and be men, O Philistines, lest you become slaves to the Hebrews as they have been to you; be men and fight.” So the Philistines fought, and Israel was defeated, and they fled, every man to his home. And there was a very great slaughter, for thirty thousand foot soldiers of Israel fell. And the ark of God was captured, and the two sons of Eli, Hophni and Phinehas, died.

The Word of the Lord.

செவ்வாய், 13 ஜனவரி, 2026

சனவரி 14 : நற்செய்தி வாசகம் இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

 சனவரி 14 :  நற்செய்தி வாசகம்

இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39


இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.

சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 14 : பதிலுரைப் பாடல் திபா 40: 1,4. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a.8a) பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!

 சனவரி 14 :  பதிலுரைப் பாடல்

திபா 40: 1,4. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a.8a)


பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!

1

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.

4

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர். - பல்லவி

6

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.

7a

எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;

8

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9

என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! 

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

சனவரி 14 : முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20

 சனவரி 14 :  முதல் வாசகம்

ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20


அந்நாள்களில்

சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான்.

அப்பொழுது ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான்.

ஆண்டவர் மீண்டும் ‘சாமுவேல்’ என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்” என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் முறையாக ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான்.

அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான்.

சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்று, தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 14th : Gospel He cast out devils and cured many who were suffering from disease A reading from the Holy Gospel according to St.Mark 1:29-39

 January 14th :  Gospel  

He cast out devils and cured many who were suffering from disease

A reading from the Holy Gospel according to St.Mark 1:29-39

At that time: Jesus left the synagogue and entered the house of Simon and Andrew, with James and John. Now Simon’s mother-in-law lay ill with a fever, and immediately they told him about her. And he came and took her by the hand and lifted her up, and the fever left her, and she began to serve them. That evening at sunset they brought to him all who were sick or oppressed by demons. And the whole city was gathered together at the door. And he healed many who were sick with various diseases, and cast out many demons. And he would not permit the demons to speak, because they knew him. And rising very early in the morning, while it was still dark, he departed and went out to a desolate place, and there he prayed. And Simon and those who were with him searched for him, and they found him and said to him, “Everyone is looking for you.” And he said to them, “Let us go on to the next towns, that I may preach there also, for that is what I came for.” And he went throughout all Galilee, preaching in their synagogues and casting out demons.

The Gospel of the Lord.


anuary 14th : Responsorial Psalm Psalm 40:2 and 5, 7–8a, 8b–9, 10 (R. see 8a, 9a) Response : See, I have come, Lord, to do your will.

 January 14th : Responsorial  Psalm

Psalm 40:2 and 5, 7–8a, 8b–9, 10 (R. see 8a, 9a)

Response : See, I have come, Lord, to do your will.

I waited, I waited for the Lord, and he stooped down to me; he heard my cry. Blessed the man who has placed his trust in the Lord, and has not gone over to the proud who follow false gods. 

R.: See, I have come, Lord, to do your will.

You delight not in sacrifice and offerings, but in an open ear. You do not ask for holocaust and victim. Then I said, “See, I have come.” 

R.: See, I have come, Lord, to do your will.

In the scroll of the book it stands written of me: “I delight to do your will, O my God; your instruction lies deep within me.” 

R.: See, I have come, Lord, to do your will.

Your justice I have proclaimed in the great assembly. My lips I have not sealed; you know it, O Lord. 

R.: See, I have come, Lord, to do your will.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. My sheep hear my voice, says the Lord; and I know them, and they follow me.

R. Alleluia.

January 14th : First reading 'Speak, Lord, your servant is listening' A Reading from the First Book of Samuel 3:1-10,19-20

 January 14th :  First reading

'Speak, Lord, your servant is listening'

A Reading from the First Book of Samuel 3:1-10,19-20 

In those days: The boy Samuel was ministering to the Lord in the presence of Eli. And the word of the Lord was rare in those days; there was no frequent vision. At that time Eli, whose eyesight had begun to grow dim; so that he could not see, was lying down in his own place. The lamp of God had not yet gone out, and Samuel was lying down in the temple of the Lord, where the ark of God was. Then the Lord called Samuel, and he said, “Here I am!” and ran to Eli and said, “Here I am, for you called me.” But he said, “I did not call; lie down again.” So he went and lay down. And the Lord called again, “Samuel!” And Samuel arose and went to Eli and said, “Here I am, for you called me.” But he said, “I did not call, my son; lie down again.” Now Samuel did not yet know the Lord, and the word of the Lord had not yet been revealed to him. And the Lord called Samuel again the third time. And he arose and went to Eli and said, “Here I am, for you called me.” Then Eli perceived that the Lord was calling the boy. Therefore Eli said to Samuel, “Go, lie down, and if he calls you, you shall say, ‘Speak, Lord, for your servant hears.’” So Samuel went and lay down in his place. And the Lord came and stood, calling as at other times, “Samuel! Samuel!” And Samuel said, “Speak, for your servant hears.” And Samuel grew, and the Lord was with him and let none of his words fall to the ground. And all Israel from Dan to Beersheba knew that Samuel was established as a prophet of the Lord.

The Word of the Lord.


திங்கள், 12 ஜனவரி, 2026

சனவரி 13 : நற்செய்தி வாசகம் இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

 சனவரி 13 :  நற்செய்தி வாசகம்

இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28


இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது. “வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.

அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.