இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 21 ஜனவரி, 2026

January 22nd : Responsorial Psalm Psalm 56:2–3, 9–10ab, 10c–11, 12–13 (R. 5b) Response : In God I trust; I shall not fear.

 January 22nd :  Responsorial Psalm

Psalm 56:2–3, 9–10ab, 10c–11, 12–13 (R. 5b)

Response : In God I trust; I shall not fear.

Have mercy on me, O God, for people assail me; they fight me all day long and oppress me. My foes assail me all day long: many fight proudly against me. 

R.: In God I trust; I shall not fear.

You have kept an account of my wanderings; you have placed my tears in your flask; are they not recorded in your book? Then my foes will turn back on the day when I call to you. 

R.: In God I trust; I shall not fear.

This I know, that God is on my side. In God, whose word I praise, in the Lord whose word I praise. 

R.: In God I trust; I shall not fear.

In God I trust; I shall not fear. What can man do to me? I am bound by the vows I have made you. O God, I will offer you praise. 

R.: In God I trust; I shall not fear.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Our Saviour Christ Jesus abolished death and brought life and immortality to light through the gospel.

R. Alleluia.

January 22nd : First reading Saul's envy and Jonathan's loyal friendship A Reading from the First Book of Samuel 18: 6-9,19:1-7

 January 22nd : First reading

Saul's envy and Jonathan's loyal friendship
A Reading from the First Book of Samuel 18: 6-9,19:1-7
In those days: When David returned from striking down the Philistine, the women came out of all the cities of Israel, singing and dancing, to meet King Saul, with tambourines, with songs of joy, and with musical instruments. And the women sang to one another as they celebrated, “Saul has struck down his thousands, and David his ten thousands.” And Saul was very angry, and this saying displeased him. He said, “They have ascribed to David ten thousands, and to me they have ascribed thousands, and what more can he have but the kingdom?” And Saul kept an eye on David from that day on. And Saul spoke to Jonathan his son and to all his servants, that they should kill David. But Jonathan, Saul’s son, delighted much in David. And Jonathan told David, “Saul my father seeks to kill you. Therefore be on your guard in the morning. Stay in a secret place and hide yourself. And I will go out and stand beside my father in the field where you are, and I will speak to my father about you. And if I learn anything I will tell you.” And Jonathan spoke well of David to Saul his father and said to him, “Let not the king sin against his servant David, because he has not sinned against you, and because his deeds have brought good to you. For he took his life in his hand and he struck down the Philistine, and the Lord worked a great salvation for all Israel. You saw it, and rejoiced. Why then will you sin against innocent blood by killing David without cause?” And Saul listened to the voice of Jonathan. Saul swore, “As the Lord lives, he shall not be put to death.” And Jonathan called David, and Jonathan reported to him all these things. And Jonathan brought David to Saul, and he was in his presence as before.
The Word of the Lord.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

சனவரி 21 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா? ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

 சனவரி 21 :  நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6


இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.

இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.

உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 21 : பதிலுரைப் பாடல் திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a) பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

 சனவரி 21 :  பதிலுரைப் பாடல்

திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!


1

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! - பல்லவி

2

என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! - பல்லவி

9

இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.

10

அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

சனவரி 21 : முதல் வாசகம் தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

 சனவரி 21 :  முதல் வாசகம்

தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50


அந்நாள்களில்

தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.

மேலும் தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார்.

தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?” என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான்.

அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார்.

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.

இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 21st : Gospel Is it against the law on the sabbath day to save life? A reading from the Holy Gospel according to St.Mark 3:1-6

 January 21st :  Gospel 

Is it against the law on the sabbath day to save life?

A reading from the Holy Gospel according to St.Mark 3:1-6 

At that time: Jesus entered the synagogue, and a man was there with a withered hand. And they watched Jesus, to see whether he would heal him on the Sabbath, so that they might accuse him. And he said to the man with the withered hand, “Come here.” And he said to them, “Is it lawful on the Sabbath to do good or to do harm, to save life or to kill?” But they were silent. And he looked round at them with anger, grieved at their hardness of heart, and said to the man, “Stretch out your hand.” He stretched it out, and his hand was restored. The Pharisees went out, and immediately held counsel with the Herodians against him, how to destroy him.

The Gospel of the Lord.

January 21st : Responsirial Psalm Psalm 144:1, 2, 9–10 (R. 1a) Response : Blest be the Lord, my rock.

 January 21st :  Responsirial Psalm

Psalm 144:1, 2, 9–10 (R. 1a)

Response : Blest be the Lord, my rock.

Blest be the Lord, my rock, who trains my hands for battle, who prepares my fingers for war. 

R.: Blest be the Lord, my rock.

He is my merciful love, my fortress; he is my stronghold, my saviour, my shield in whom I take refuge. He brings peoples under my rule. 

R.: Blest be the Lord, my rock.

To you, O God, will I sing a new song; I will play on the ten-stringed harp to you who give kings their victory, who set David your servant free from the evil sword. 

R.: Blest be the Lord, my rock.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Jesus was proclaiming the gospel of the kingdom and healing every disease and every affliction among the people.

R. Alleluia.

January 21st : First Reading David and Goliath A reading from the first book of Samuel 17: 32-33, 37, 40-51

 January 21st :  First Reading

David and Goliath

A reading from the first book of Samuel 17: 32-33, 37, 40-51 

In those days: David said to Saul, “Let no man’s heart fail because of him. Your servant will go and fight with this Philistine.” And Saul said to David, “You are not able to go against this Philistine to fight with him, for you are but a youth, and he has been a man of war from his youth.” And David said, “The Lord who delivered me from the paw of the lion and from the paw of the bear will deliver me from the hand of this Philistine.” And Saul said to David, “Go, and the Lord be with you!” Then he took his staff in his hand, and chose five smooth stones from the brook and put them in his shepherd’s pouch. His sling was in his hand, and he approached the Philistine. And the Philistine moved forward and came near to David, with his shield bearer in front of him. And when the Philistine looked and saw David, he disdained him, for he was but a youth, ruddy and handsome in appearance. And the Philistine said to David, “Am I a dog, that you come to me with sticks?” And the Philistine cursed David by his gods. The Philistine said to David, “Come to me, and I will give your flesh to the birds of the air and to the beasts of the field.” Then David said to the Philistine, “You come to me with a sword and with a spear and with a javelin, but I come to you in the name of the Lord of hosts, the God of the armies of Israel, whom you have defied. This day the Lord will deliver you into my hand, and I will strike you down and cut off your head. And I will give the dead bodies of the host of the Philistines this day to the birds of the air and to the wild beasts of the earth, that all the earth may know that there is a God in Israel, and that all this assembly may know that the Lord saves not with sword and spear. For the battle is the Lord’s, and he will give you into our hand.” When the Philistine arose and came and drew near to meet David, David ran quickly towards the battle line to meet the Philistine. And David put his hand in his bag and took out a stone and slung it and struck the Philistine on his forehead. The stone sank into his forehead, and he fell on his face to the ground. So David prevailed over the Philistine with a sling and with a stone, and struck the Philistine and killed him. There was no sword in the hand of David. Then David ran and stood over the Philistine and took his sword and drew it out of its sheath, and killed him and cut off his head with it. When the Philistines saw that their champion was dead, they fled.

The Word of the Lord.


திங்கள், 19 ஜனவரி, 2026

சனவரி 20 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று. ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

 சனவரி 20 :  நற்செய்தி வாசகம்

ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 20 : பதிலுரைப் பாடல் திபா 89: 19,20-21. 26-27 (பல்லவி: 20a) பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.

 சனவரி 20 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 19,20-21. 26-27 (பல்லவி: 20a)

பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.


19

முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். - பல்லவி

20

என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21

என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

26

‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.

27

நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தில் மாபெரும் மன்னன் ஆக்குவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.