இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 28 ஜனவரி, 2026

சனவரி 29 : முதல் வாசகம் என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்? சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

 சனவரி 29  :  முதல் வாசகம்

என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29


அந்நாள்களில்

தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!

என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை!

இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 29th : Gospel A lamp is to be put on a lampstand. The amount you measure out is the amount you will be given. A Reading from the Holy Gospel according to St. Mark 4: 21-25

 January 29th :   Gospel 

A lamp is to be put on a lampstand. The amount you measure out is the amount you will be given.

A Reading from the Holy Gospel according to St. Mark 4: 21-25 

At that time: Jesus said to the crowd, “Is a lamp brought in to be put under a basket, or under a bed, and not on a stand? For nothing is hidden except to be made manifest; nor is anything secret except to come to light. If anyone has ears to hear, let him hear.” And he said to them, “Pay attention to what you hear: with the measure you use, it will be measured to you, and still more will be added to you. For to the one who has, more will be given, and from the one who has not, even what he has will be taken away.”

The Gospel of the Lord.

January 29th : Responsorial Psalm Psalm 132:1–2, 3–5, 11, 12, 13–14 (R. Luke 1:32b)

 January 29th : Responsorial Psalm

Psalm 132:1–2, 3–5, 11, 12, 13–14 (R. Luke 1:32b)

Response : The Lord God will give to him the throne of his father David.

O Lord, remember David and all the hardships he endured, the oath he swore to the Lord, his vow to the Strong One of Jacob. 

R.: The Lord God will give to him the throne of his father David.

“I will not enter my house, nor go to the bed where I rest; I will give no sleep to my eyes, to my eyelids I will give no slumber, till I find a place for the Lord, a dwelling for the Strong One of Jacob.” 

R.: The Lord God will give to him the throne of his father David.

The Lord swore an oath to David; he will not go back on his word: “A son, the fruit of your body, will I set upon your throne. 

R.: The Lord God will give to him the throne of his father David.

If your sons hold fast to my covenant, and my laws that I have taught them, their sons, in turn, shall sit on your throne from age to age.” 

R.: The Lord God will give to him the throne of his father David.

For the Lord has chosen Sion; he has desired it for his dwelling: “This is my resting place from age to age; here have I chosen to dwell. 

R.: The Lord God will give to him the throne of his father David.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Your word is a lamp for my feet, and a light for my path.

R. Alleluia.

January 29th : First Reading 'The house of your servant will be blessed for ever' A reading from the second book of Samuel 7: 18-19,24-29

 January 29th : First Reading

'The house of your servant will be blessed for ever'

A reading from the second book of Samuel 7: 18-19,24-29 

After Nathan had spoken to David, King David went in and sat before the Lord, and said, “Who am I, O Lord God, and what is my house, that you have brought me thus far? And yet this was a small thing in your eyes, O Lord God. You have spoken also of your servant’s house for a great while to come, and this is instruction for mankind, O Lord God! And you established for yourself your people Israel to be your people for ever. And you, O Lord, became their God. And now, O Lord God, confirm for ever the word that you have spoken concerning your servant and concerning his house, and do as you have spoken. And your name will be magnified for ever, saying, ‘The Lord of hosts is God over Israel’, and the house of your servant David will be established before you. For you, O Lord of hosts, the God of Israel, have made this revelation to your servant, saying, ‘I will build you a house.’ Therefore your servant has found courage to pray this prayer to you. And now, O Lord God, you are God, and your words are true, and you have promised this good thing to your servant. Now therefore may it please you to bless the house of your servant, so that it may continue for ever before you; for you, O Lord God, have spoken, and with your blessing shall the house of your servant be blessed for ever.”

The Word of the Lord.


செவ்வாய், 27 ஜனவரி, 2026

சனவரி 28 : நற்செய்தி வாசகம் விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

சனவரி 28 : நற்செய்தி வாசகம்
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில்
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.
அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார்.
மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 28 : பதிலுரைப் பாடல் திபா 89: 3-4. 26-27. 28-29 (பல்லவி: 28a)

 சனவரி 28 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 3-4. 26-27. 28-29 (பல்லவி: 28a)

பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.


3

‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4

உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26

‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.

27

நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். - பல்லவி

28

அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

29

அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா

சனவரி 28 : முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17

 சனவரி 28 :  முதல் வாசகம்

உன் வழித்தோன்றலை உனக்குப்பின் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17


அந்நாள்களில்

ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?’ இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?

எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.

அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.

எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 28th : Gospel The parable of the sower A reading from the Holy Gospel according to St.Mark 4:1-20

 January 28th :  Gospel 

The parable of the sower

A reading from the Holy Gospel according to St.Mark 4:1-20 

Jesus began to teach by the lakeside, but such a huge crowd gathered round him that he got into a boat on the lake and sat there. The people were all along the shore, at the water’s edge. He taught them many things in parables, and in the course of his teaching he said to them, ‘Listen! Imagine a sower going out to sow. Now it happened that, as he sowed, some of the seed fell on the edge of the path, and the birds came and ate it up. Some seed fell on rocky ground where it found little soil and sprang up straightaway, because there was no depth of earth; and when the sun came up it was scorched and, not having any roots, it withered away. Some seed fell into thorns, and the thorns grew up and choked it, and it produced no crop. And some seeds fell into rich soil and, growing tall and strong, produced crop; and yielded thirty, sixty, even a hundredfold.’ And he said, ‘Listen, anyone who has ears to hear!’

  When he was alone, the Twelve, together with the others who formed his company, asked what the parables meant. He told them, ‘The secret of the kingdom of God is given to you, but to those who are outside everything comes in parables, so that they may see and see again, but not perceive; may hear and hear again, but not understand; otherwise they might be converted and be forgiven.’

  He said to them, ‘Do you not understand this parable? Then how will you understand any of the parables? What the sower is sowing is the word. Those on the edge of the path where the word is sown are people who have no sooner heard it than Satan comes and carries away the word that was sown in them. Similarly, those who receive the seed on patches of rock are people who, when first they hear the word, welcome it at once with joy. But they have no root in them, they do not last; should some trial come, or some persecution on account of the word, they fall away at once. Then there are others who receive the seed in thorns. These have heard the word, but the worries of this world, the lure of riches and all the other passions come in to choke the word, and so it produces nothing. And there are those who have received the seed in rich soil: they hear the word and accept it and yield a harvest, thirty and sixty and a hundredfold.’

The Word of the Lord.


January 28th : Responsorial Psalm Psalm 88(89):4-5,27-30

 January 28th : Responsorial Psalm

Psalm 88(89):4-5,27-30 

I will keep my love for him always.

I have made a covenant with my chosen one,

  I have sworn to David my servant:

I will establish your dynasty for ever

  and set up your throne through all ages.

I will keep my love for him always.

He will say to me: You are my father,

  my God, the rock who saves me.

And I will make him my first-born,

  the highest of the kings of the earth.

I will keep my love for him always.

I will keep my love for him always;

  with him my covenant shall last.

I will establish his dynasty for ever,

  make his throne endure as the heavens.

I will keep my love for him always.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:

you have the message of eternal life.

Alleluia!


January 28th : First reading 'Your house and sovereignty will stand secure' A Reading from the second book of Samuel 7:4-17 The word of the Lord came to Nathan:

 January 28th :   First reading  

'Your house and sovereignty will stand secure'

A Reading from the second book of Samuel 7:4-17

The word of the Lord came to Nathan:

  ‘Go and tell my servant David, “Thus the Lord speaks: Are you the man to build me a house to dwell in? I have never stayed in a house from the day I brought the Israelites out of Egypt until today, but have always led a wanderer’s life in a tent. In all my journeying with the whole people of Israel, did I say to any one of the judges of Israel, whom I had appointed as shepherds of Israel my people: Why have you not built me a house of cedar?” This is what you must say to my servant David, “The Lord of Hosts says this: I took you from the pasture, from following the sheep, to be leader of my people Israel; I have been with you on all your expeditions; I have cut off all your enemies before you. I will give you fame as great as the fame of the greatest on earth. I will provide a place for my people Israel; I will plant them there and they shall dwell in that place and never be disturbed again; nor shall the wicked continue to oppress them as they did, in the days when I appointed judges over my people Israel; I will give them rest from all their enemies. The Lord will make you great; the Lord will make you a House. And when your days are ended and you are laid to rest with your ancestors, I will preserve the offspring of your body after you and make his sovereignty secure. (It is he who shall build a house for my name, and I will make his royal throne secure for ever.) I will be a father to him and he a son to me; if he does evil, I will punish him with the rod such as men use, with strokes such as mankind gives. Yet I will not withdraw my favour from him, as I withdrew it from your predecessor. Your House and your sovereignty will always stand secure before me and your throne be established for ever.”’

  Nathan related all these words to David and this whole revelation.

The Word of the Lord.