இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

February 9th : First reading The Ark of the Covenant is brought into the Temple A Reading from the first book of Kings 8:1-7,9-13

 February 9th :  First reading

The Ark of the Covenant is brought into the Temple

A Reading from the first book of Kings 8:1-7,9-13 

In those days: Solomon assembled the elders of Israel and all the heads of the tribes, the leaders of the fathers’ houses of the people of Israel, before King Solomon in Jerusalem, to bring up the ark of the covenant of the Lord out of the city of David, which is Sion. And all the men of Israel assembled to King Solomon at the feast in the month Ethanim, which is the seventh month. And all the elders of Israel came, and the priests took up the ark. And they brought up the ark of the Lord, the tent of meeting, and all the holy vessels that were in the tent; the priests and the Levites brought them up. And King Solomon and all the congregation of Israel, who had assembled before him, were with him before the ark, sacrificing so many sheep and oxen that they could not be counted or numbered. Then the priests brought the ark of the covenant of the Lord to its place in the inner sanctuary of the house, in the Most Holy Place, underneath the wings of the cherubim. For the cherubim spread out their wings over the place of the ark, so that the cherubim overshadowed the ark and its poles. There was nothing in the ark except the two tablets of stone that Moses put there at Horeb, where the Lord made a covenant with the people of Israel, when they came out of the land of Egypt. And when the priests came out of the Holy Place, a cloud filled the house of the Lord, so that the priests could not stand to minister because of the cloud, for the glory of the Lord filled the house of the Lord. Then Solomon said, “The Lord has said that he would dwell in thick darkness. I have indeed built you an exalted house, a place for you to dwell in for ever.”

The Word of the Lord.

சனி, 7 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 8. : நற்செய்தி வாசகம் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

 பிப்ரவரி 8. :  நற்செய்தி வாசகம்

உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 8 : இரண்டாம் வாசகம் கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

 பிப்ரவரி 8 :  இரண்டாம் வாசகம்

கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5


சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! 

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

பிப்ரவரி 8 : பதிலுரைப் பாடல் திபா 112: 4-5. 6-7. 8a,9 (பல்லவி: 4a)

 பிப்ரவரி 8 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 4-5. 6-7. 8a,9 (பல்லவி: 4a)


பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.

4

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.

5

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். - பல்லவி

6

எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7

தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். - பல்லவி

8a

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;

9

அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

பிப்ரவரி 8 : முதல் வாசகம் உன் ஒளி விடியல் போல் எழும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10

 பிப்ரவரி 8 :  முதல் வாசகம்

உன் ஒளி விடியல் போல் எழும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10


ஆண்டவர் கூறுவது:

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 8th : Gospel Your light must shine in the sight of men A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

 February 8th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 

At that time: Jesus said to his disciples, “You are the salt of the earth, but if salt has lost its taste, how shall its saltiness be restored? It is no longer good for anything except to be thrown out and trampled under people’s feet. You are the light of the world. A city set on a hill cannot be hidden. Nor do people light a lamp and put it under a basket, but on a stand, and it gives light to all in the house. In the same way, let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven.”

The Gospel of the Lord..

February 8th : Second Reading The only knowledge I claimed was of the crucified Christ A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:1-5

 February 8th :  Second Reading

The only knowledge I claimed was of the crucified Christ

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:1-5 

When I came to you, brothers I did not come proclaiming to you the testimony of God with lofty speech or wisdom. For I decided to know nothing among you except Jesus Christ and him crucified. And I was with you in weakness and in fear and much trembling, and my speech and my message were not in plausible words of wisdom, but in demonstration of the Spirit and of power, so that your faith might not rest in the wisdom of men but in the power of God.

The Word of the Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia. 

R. Alleluia.

V. I am the light of the world, says the Lord; whoever follows me will have the light of life.

R. Alleluia.

February 8th : Responsorial Psalm Psalm 112:4–5, 6–7, 8a and 9 (R. 4a)

 February 8th : Responsorial Psalm

Psalm 112:4–5, 6–7, 8a and 9 (R. 4a)

Response : A light rises in the darkness for the upright.

A light rises in the darkness for the upright; he is generous, merciful, and just. It goes well for the man who deals generously and lends, who conducts his affairs with justice. 

R.: A light rises in the darkness for the upright.

He will never be moved; forever shall the just be remembered. He has no fear of evil news; with a firm heart, he trusts in the Lord.  

R.: A light rises in the darkness for the upright.

With a steadfast heart he will not fear; Open-handed, he gives to the poor; his justice stands firm forever. His might shall be exalted in glory. 

R.: A light rises in the darkness for the upright.


February 8th : First Reading Then will your light shine like the dawn A Reading from the Book of the prophet Isaiah 58: 7-10

 February 8th :  First Reading 

Then will your light shine like the dawn

A Reading from the Book of the prophet Isaiah 58: 7-10 

Thus says the Lord: Is it not to share your bread with the hungry and bring the homeless poor into your house; when you see the naked, to cover him, and not to hide yourself from your own flesh? Then shall your light break forth like the dawn, and your healing shall spring up speedily; your righteousness shall go before you; the glory of the Lord shall be your rearguard. Then you shall call, and the Lord will answer; you shall cry, and he will say, ‘Here I am.’ If you take away the yoke from your midst, the pointing of the finger, and speaking wickedness, if you pour yourself out for the hungry and satisfy the desire of the afflicted, then shall your light rise in the darkness and your gloom be as the noonday.

The Word of the Lord.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 7 : நற்செய்தி வாசகம் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

 பிப்ரவரி 7 :  நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34


அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.