இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 11 : முதல் வாசகம் சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10

 பிப்ரவரி 11 :  முதல் வாசகம்

சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10


அந்நாள்களில்

ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை.

சேபாவின் அரசி, சாலமோனுக்கு இருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார். அவர் அரசரை நோக்கிக் கூறியது:

“உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ, இங்குள்ளவற்றுள் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.

உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.”

அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 11th : Gospel It is what comes out of a man that makes him unclean A reading from the Holy Gospel according to St.Mark 7:14-23

 February 11th :  Gospel 

It is what comes out of a man that makes him unclean

A reading from the Holy Gospel according to St.Mark 7:14-23 

At that time: Jesus called the people to him again and said to them, “Hear me, all of you, and understand: There is nothing outside a person that by going into him can defile him, but the things that come out of a person are what defile him.” And when he had entered the house and left the people, his disciples asked him about the parable. And he said to them, “Then are you also without understanding? Do you not see that whatever goes into a person from outside cannot defile him, since it enters, not his heart but his stomach, and is expelled?” (Thus he declared all foods clean.) And he said, “What comes out of a person is what defiles him. For from within, out of the heart of man, come evil thoughts, sexual immorality, theft, murder, adultery, coveting, wickedness, deceit, sensuality, envy, slander, pride, foolishness. All these evil things come from within, and they defile a person.”

The Gospel of the Lord.

February 11th : Responsorial Psalm Psalm 37:5–6, 30–31, 39–40 (R. 30a)

 February 11th :  Responsorial Psalm

Psalm 37:5–6, 30–31, 39–40 (R. 30a)

Response :  The mouth of the just man utters wisdom.

Commit your way to the Lord; trust in him, and he will act, and make your uprightness shine like the light, the justice of your cause like the noon-day sun. 

R.:  The mouth of the just man utters wisdom.

The mouth of the just man utters wisdom, and his tongue tells forth what is just. The law of his God is in his heart; his steps shall be saved from stumbling. 

R.:  The mouth of the just man utters wisdom.

But from the Lord comes the salvation of the just, their stronghold in time of distress. The Lord helps them and rescues them, rescues and saves them from the wicked: because they take refuge in him. 

R.:  The mouth of the just man utters wisdom.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Your word, O Lord, is truth; sanctify us in the truth.

R. Alleluia.

February 11th : First reading The Queen of Sheba saw all the wisdom of Solomon A Reading from the first book of Kings 10:1-10.

 February 11th :  First reading 

The Queen of Sheba saw all the wisdom of Solomon

A Reading from the first book of Kings 10:1-10.

In those days: When the queen of Sheba heard of the fame of Solomon concerning the name of the Lord, she came to test him with hard questions. She came to Jerusalem with a very great retinue, with camels bearing spices, and very much gold and precious stones. And when she came to Solomon, she told him all that was on her mind. And Solomon answered all her questions; there was nothing hidden from the king that he could not explain to her. And when the queen of Sheba had seen all the wisdom of Solomon, the house that he had built, the food of his table, the seating of his officials, and the attendance of his servants, their clothing, his cupbearers, and his burnt offerings that he offered at the house of the Lord, there was no more breath in her. And she said to the king, “The report was true that I heard in my own land of your words and of your wisdom, but I did not believe the reports until I came and my own eyes had seen it. And behold, the half was not told me. Your wisdom and prosperity surpass the report that I heard. Happy are your men! Happy are your servants, who continually stand before you and hear your wisdom! Blessed be the Lord your God, who has delighted in you and set you on the throne of Israel! Because the Lord loved Israel for ever, he has made you king, that you may execute justice and righteousness.” Then she gave the king one hundred and twenty talents of gold, and a very great quantity of spices and precious stones. Never again came such an abundance of spices as these that the queen of Sheba gave to King Solomon.

The Word of the Lord.


திங்கள், 9 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 10 : நற்செய்தி வாசகம்நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

பிப்ரவரி 10 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது ‘கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
-

பிப்ரவரி 10 : பதிலுரைப் பாடல்திபா 84: 2-3. 4,9. 10. 11 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

பிப்ரவரி 10 :  பதிலுரைப் பாடல்

திபா 84: 2-3. 4,9. 10. 11 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
9
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! - பல்லவி

10
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. - பல்லவி

11
ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 4a, 36a
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா.

பிப்ரவரி 10 : முதல் வாசகம்“மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.”அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30

பிப்ரவரி 10 :  முதல் வாசகம்

“மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.”

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30
அந்நாள்களில்

சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது:

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.

கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! ‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!

உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 10th : Gospel You get round the commandment of God to preserve your own traditionA Reading from the Holy Gospel according to St.Mark 7:1-13

February 10th : Gospel 

You get round the commandment of God to preserve your own tradition

A Reading from the Holy Gospel according to St.Mark 7:1-13

At that time: When the Pharisees gathered to Jesus, with some of the scribes, who had come from Jerusalem, they saw that some of his disciples ate with hands that were defiled, that is, unwashed. (For the Pharisees and all the Jews do not eat unless they wash their hands properly, holding to the tradition of the elders, and when they come from the market-place, they do not eat unless they wash. And there are many other traditions that they observe, such as the washing of cups and pots and copper vessels and dining couches.) And the Pharisees and the scribes asked him, “Why do your disciples not walk according to the tradition of the elders, but eat with defiled hands?” And he said to them, “Well did Isaiah prophesy of you hypocrites, as it is written, ‘This people honours me with their lips, but their heart is far from me; in vain do they worship me, teaching as doctrines the commandments of men.’ You leave the commandment of God and hold to the tradition of men.” And he said to them, “You have a fine way of rejecting the commandment of God in order to establish your tradition! For Moses said, ‘Honour your father and your mother’; and, ‘Whoever reviles father or mother, must surely die.’ But you say, ‘If a man tells his father or his mother, ‘Whatever you would have gained from me is Corban’ (that is, given to God)— then you no longer permit him to do anything for his father or mother, thus making void the word of God by your tradition that you have handed down. And many such things you do.”

The Gospel of the Lord.

February 10th : Responsorial PsalmPsalm 84:3, 4, 5, and 10, 11 (R. 2)

February 10th :  Responsorial Psalm

Psalm 84:3, 4, 5, and 10, 11 (R. 2)

Response : How lovely is your dwelling place, O Lord of hosts!

My soul is longing and yearning for the courts of the Lord. My heart and my flesh cry out to the living God. 

R.: How lovely is your dwelling place, O Lord of hosts!

Even the sparrow finds a home, and the swallow a nest for herself in which she sets her young, at your altars, O Lord of hosts, my king and my God. 

R.: How lovely is your dwelling place, O Lord of hosts!

Blessed are they who dwell in your house, forever singing your praise. Turn your eyes, O God, our shield; look on the face of your anointed. 

R.: How lovely is your dwelling place, O Lord of hosts!

One day within your courts is better than a thousand elsewhere. The threshold of the house of God I prefer to the dwellings of the wicked. 

R.: How lovely is your dwelling place, O Lord of hosts!

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Bend my heart, O God, to your decrees, grant me mercy by your law.

R. Alleluia.

February 10th : First reading'Listen to the prayer your servant makes in this place'A Reading from the First Book of Kings 8: 22-23,27-30

February 10th :  First reading

'Listen to the prayer your servant makes in this place'

A Reading from the First Book of Kings 8: 22-23,27-30 

In those days: Solomon stood before the altar of the Lord in the presence of all the assembly of Israel, and spread out his hands towards heaven, and said, “O Lord, God of Israel, there is no God like you, in heaven above or on earth beneath, keeping covenant and showing steadfast love to your servants who walk before you with all their heart. “But will God indeed dwell on the earth? Behold, heaven and the highest heaven cannot contain you; how much less this house that I have built! Yet have regard to the prayer of your servant and to his plea, O Lord my God, listening to the cry and to the prayer that your servant prays before you this day, that your eyes may be open night and day towards this house, the place of which you have said, ‘My name shall be there’, that you may listen to the prayer that your servant offers towards this place. And listen to the plea of your servant and of your people Israel, when they pray towards this place. And listen in heaven your dwelling place, and when you hear, forgive.”

The Word of the Lord.