இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 18 ஏப்ரல், 2026

April 19th : Responsorial PsalmPsalm 16:1–2a and 5, 7–8, 9–10, 11 (R. 11a)Response : Lord, you will show me the path of life.

April 19th :  Responsorial Psalm

Psalm 16:1–2a and 5, 7–8, 9–10, 11 (R. 11a)

Response : Lord, you will show me the path of life.

Preserve me, O God, for in you I take refuge. I say to the Lord, “You are my Lord. O Lord, it is you who are my portion and cup; you yourself who secure my lot. 

R.: Lord, you will show me the path of life.

I will bless the Lord who gives me counsel, who even at night directs my heart. I keep the Lord before me always; with him at my right hand, I shall not be moved. 

R.: Lord, you will show me the path of life.

And so, my heart rejoices, my soul is glad; even my flesh shall rest in hope. For you will not abandon my soul to hell, nor let your holy one see corruption.  

R.: Lord, you will show me the path of life.

You will show me the path of life, the fullness of joy in your presence, at your right hand, bliss forever. 

R.: Lord, you will show me the path of life.

April 19th : First Reading God raised this man Jesus to life, and all of us are witnesses to this.A Reading from the Acts of Apostles 2:14, 22-33

April 19th :  First Reading 

God raised this man Jesus to life, and all of us are witnesses to this.

A Reading from the Acts of Apostles 2:14, 22-33

Peter, standing with the eleven, lifted up his voice and addressed them: “Men of Judea and all who dwell in Jerusalem, let this be known to you, and give ear to my words. “Jesus of Nazareth, a man attested to you by God with mighty works and wonders and signs that God did through him in your midst, as you yourselves know— this Jesus, delivered up according to the definite plan and foreknowledge of God, you crucified and killed by the hands of lawless men. God raised him up, loosing the pangs of death, because it was not possible for him to be held by it. For David says concerning him, ‘I saw the Lord always before me, for he is at my right hand that I may not be shaken; therefore my heart was glad, and my tongue rejoiced; my flesh also will dwell in hope. For you will not abandon my soul to Hades, or let your Holy One see corruption. You have made known to me the paths of life; you will make me full of gladness with your presence.’ Brothers, I may say to you with confidence about the patriarch David that he both died and was buried, and his tomb is with us to this day. Being therefore a prophet, and knowing that God had sworn with an oath to him that he would set one of his descendants on his throne, he foresaw and spoke about the resurrection of the Christ, that he was not abandoned to Hades, nor did his flesh see corruption. This Jesus God raised up, and of that we all are witnesses. Being therefore exalted at the right hand of God, and having received from the Father the promise of the Holy Spirit, he has poured out this that you yourselves are seeing and hearing.”

The Word of the Lord.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

திருச்சபையின் அருள் அடையாளங்கள்7 | 7 Sacraments | Tamil Catholic பாடல்

https://youtu.be/ic75G1MQl5A?si=bwm3tGQGW6voPWkv

ஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

ஏப்ரல் 18 :  நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.

அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள். இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!அல்லது: அல்லேலூயா.

ஏப்ரல் 18 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

அல்லது: அல்லேலூயா.
1
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி

4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா

ஏப்ரல் 18 : முதல் வாசகம்நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

ஏப்ரல் 18 :  முதல் வாசகம்

நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7
அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 18th : Gospel They saw Jesus walking on the lakeA Reading from the Holy Gospel according to St.John 6:16-21

April 18th :  Gospel 

They saw Jesus walking on the lake

A Reading from the Holy Gospel according to St.John 6:16-21 

When evening came, the disciples of Jesus went down to the lake, got into a boat, and started across the lake to Capernaum. It was now dark, and Jesus had not yet come to them. The lake became rough because a strong wind was blowing. When they had rowed about three or four miles, they saw Jesus walking on the lake and coming near the boat, and they were frightened. But he said to them, “It is I; do not be afraid.” Then they were glad to take him into the boat, and immediately the boat was at the land to which they were going.

The Gospel of the Lord.

April 18th : Responsorial PsalmPsalm 33:1–2, 4–5, 18–19 (R. 22)Response : May your merciful love be upon us, as we hope in you, O Lord.

April 18th : Responsorial Psalm

Psalm 33:1–2, 4–5, 18–19 (R. 22)

Response :  May your merciful love be upon us, as we hope in you, O Lord.

Ring out your joy to the Lord, O you just; for praise is fitting for the upright. Give thanks to the Lord upon the harp; with a ten-stringed lute sing him songs. 

R.:  May your merciful love be upon us, as we hope in you, O Lord.

For the word of the Lord is faithful, and all his works to be trusted. The Lord loves justice and right, and his merciful love fills the earth. 

R.:  May your merciful love be upon us, as we hope in you, O Lord.

Yes, the Lord’s eyes are on those who fear him, who hope in his merciful love, to rescue their souls from death, to keep them alive in famine. 

R.:  May your merciful love be upon us, as we hope in you, O Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Christ is risen, who made all things; he has shown mercy on all people.

R. Alleluia.

April 18th : First Reading They elected seven men full of the Holy SpiritA Reading from the Acts of Apostles 6:1-7

April 18th :  First Reading 

They elected seven men full of the Holy Spirit

A Reading from the Acts of Apostles 6:1-7 

In these days when the disciples were increasing in number, a complaint by the Hellenists arose against the Hebrews because their widows were being neglected in the daily distribution. And the twelve summoned the full number of the disciples and said, “It is not right that we should give up preaching the word of God to serve tables. Therefore, brothers, pick out from among you seven men of good repute, full of the Spirit and of wisdom, whom we will appoint to this duty. But we will devote ourselves to prayer and to the ministry of the word.” And what they said pleased the whole gathering, and they chose Stephen, a man full of faith and of the Holy Spirit, and Philip, and Prochorus, and Nicanor, and Timon, and Parmenas, and Nicolaus, a proselyte of Antioch. These they set before the apostles, and they prayed and laid their hands on them. And the word of God continued to increase, and the number of the disciples multiplied greatly in Jerusalem, and a great many of the priests became obedient to the faith.

The Word of the Lord.

வியாழன், 16 ஏப்ரல், 2026

ஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம் அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

 ஏப்ரல் 17 :  நற்செய்தி வாசகம்

அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15


அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.

இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.