இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

April 20th : Gospel Do not work for food that cannot last, but for food that endures to eternal lifeA Reading from the Holy Gospel according to St.John 6:22-29

April 20th :   Gospel 

Do not work for food that cannot last, but for food that endures to eternal life

A Reading from the Holy Gospel according to St.John 6:22-29

After five thousand men had eaten their fill, the disciples of Jesus saw him walking on the sea. On the next day the crowd that remained on the other side of the lake saw that there had been only one boat there, and that Jesus had not entered the boat with his disciples, but that his disciples had gone away alone. Other boats from Tiberias came near the place where they had eaten the bread after the Lord had given thanks. So when the crowd saw that Jesus was not there, nor his disciples, they themselves got into the boats and went to Capernaum, seeking Jesus. When they found him on the other side of the lake, they said to him, “Rabbi, when did you come here?” Jesus answered them, “Truly, truly, I say to you, you are seeking me, not because you saw signs, but because you ate your fill of the loaves. Do not work for the food that perishes, but for the food that endures to eternal life, which the Son of Man will give to you. For on him God the Father has set his seal.” Then they said to him, “What must we do, to be doing the works of God?” Jesus answered them, “This is the work of God, that you believe in him whom he has sent.”

The Gospel of the Lord.

April 20th : Responsorial PsalmPsalm 119:23–24, 26–27, 29–30 (R. 1b)Response : Blessed are those who walk in the law of the Lord.

April 20th : Responsorial Psalm

Psalm 119:23–24, 26–27, 29–30 (R. 1b)

Response :  Blessed are those who walk in the law of the Lord.

Though princes sit plotting against me, your servant ponders your statutes. See, your decrees are my delight; your statutes are my counsellors. 

R.:  Blessed are those who walk in the law of the Lord.

I declared my ways and you answered me; teach me your statutes. Make me grasp the way of your precepts, and I will ponder your wonders. 

R.:  Blessed are those who walk in the law of the Lord.

Keep me from the way of falsehood; grant me mercy by your law. I have chosen the way of faithfulness; your decrees I have upheld. 

R.:  Blessed are those who walk in the law of the Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Man shall not live by bread alone, but by every word that comes from the mouth of God.

R. Alleluia.

April 20th : First Reading They could not get the better of Stephen because the Spirit prompted what he saidA Reading from the Acts of Apostles 6: 8-15

April 20th :  First Reading 

They could not get the better of Stephen because the Spirit prompted what he said

A Reading from the Acts of Apostles  6: 8-15 

In those days: Stephen, full of grace and power, was doing great wonders and signs among the people. Then some of those who belonged to the synagogue of the Freedmen (as it was called), and of the Cyrenians, and of the Alexandrians, and of those from Cilicia and Asia, rose up and disputed with Stephen. But they could not withstand the wisdom and the Spirit with which he was speaking. Then they secretly instigated men who said, “We have heard him speak blasphemous words against Moses and God.” And they stirred up the people and the elders and the scribes, and they came upon him and seized him and brought him before the Council, and they set up false witnesses who said, “This man never ceases to speak words against this holy place and the law, for we have heard him say that this Jesus of Nazareth will destroy this place and will change the customs that Moses delivered to us.” And gazing at him, all who sat in the Council saw that his face was like the face of an angel.

The Word of the Lord.

சனி, 18 ஏப்ரல், 2026

ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

ஏப்ரல் 19 :  நற்செய்தி வாசகம்

இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 19 : இரண்டாம் வாசகம்உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21

ஏப்ரல் 19 :  இரண்டாம் வாசகம்

உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21
அன்பார்ந்தவர்களே,

நீங்கள் ‘தந்தையே’ என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a)பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.

ஏப்ரல் 19 :  பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a)

பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.

அல்லது: அல்லேலூயா.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

ஏப்ரல் 19 : முதல் வாசகம்மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33

ஏப்ரல் 19 :  முதல் வாசகம்

மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது:

‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 19th : Gospel They recognised him at the breaking of breadA Reading from the Holy Gospel according to St.Luke 24:13-35

April 19th :   Gospel 

They recognised him at the breaking of bread

A Reading from the Holy Gospel according to St.Luke 24:13-35 

That very day [the first day of the week] two of them were going to a village named Emmaus, about seven miles from Jerusalem, and they were talking with each other about all these things that had happened. While they were talking and discussing together, Jesus himself drew near and went with them. But their eyes were kept from recognizing him. And he said to them, “What is this conversation that you are holding with each other as you walk?” And they stood still, looking sad. Then one of them, named Cleopas, answered him, “Are you the only visitor to Jerusalem who does not know the things that have happened there in these days?” And he said to them, “What things?” And they said to him, “Concerning Jesus of Nazareth, a man who was a prophet mighty in deed and word before God and all the people, and how our chief priests and rulers delivered him up to be condemned to death, and crucified him. But we had hoped that he was the one to redeem Israel. Yes, and besides all this, it is now the third day since these things happened. Moreover, some women of our company amazed us. They were at the tomb early in the morning, and when they did not find his body, they came back saying that they had even seen a vision of angels, who said that he was alive. Some of those who were with us went to the tomb and found it just as the women had said, but him they did not see.” And he said to them, “O foolish ones, and slow of heart to believe all that the prophets have spoken! Was it not necessary that the Christ should suffer these things and enter into his glory?” And beginning with Moses and all the Prophets, he interpreted to them in all the Scriptures the things concerning himself. So they drew near to the village to which they were going. He acted as if he were going farther, but they urged him strongly, saying, “Stay with us, for it is towards evening and the day is now far spent.” So he went in to stay with them. When he was at table with them, he took the bread and blessed and broke it and gave it to them. And their eyes were opened, and they recognized him. And he vanished from their sight. They said to each other, “Did not our hearts burn within us while he talked to us on the road, while he opened to us the Scriptures?” And they rose that same hour and returned to Jerusalem. And they found the eleven and those who were with them gathered together, saying, “The Lord has risen indeed, and has appeared to Simon!” Then they told what had happened on the road, and how he was known to them in the breaking of the bread.

The Gospel of the Lord.

April 19th : Second Reading Your ransom was paid in the precious blood of ChristA Reading from the first letter of St.Peter 1:17-21

April 19th :  Second Reading 

Your ransom was paid in the precious blood of Christ

A Reading from the first letter of St.Peter 1:17-21

Beloved: If you call on him as Father who judges impartially according to each one’s deeds, conduct yourselves with fear throughout the time of your exile, knowing that you were ransomed from the futile ways inherited from your forefathers, not with perishable things such as silver or gold, but with the precious blood of Christ, like that of a lamb without blemish or spot. He was foreknown before the foundation of the world but was made manifest in the last times for the sake of you who through him are believers in God, who raised him from the dead and gave him glory, so that your faith and hope are in God.

The Word of the Lord.

Alleluia
V. Alleluia. 

R. Alleluia.

V. Lord Jesus, open the Scriptures to us; make our hearts burn with love when you speak to us.

R. Alleluia.

April 19th : Responsorial PsalmPsalm 16:1–2a and 5, 7–8, 9–10, 11 (R. 11a)Response : Lord, you will show me the path of life.

April 19th :  Responsorial Psalm

Psalm 16:1–2a and 5, 7–8, 9–10, 11 (R. 11a)

Response : Lord, you will show me the path of life.

Preserve me, O God, for in you I take refuge. I say to the Lord, “You are my Lord. O Lord, it is you who are my portion and cup; you yourself who secure my lot. 

R.: Lord, you will show me the path of life.

I will bless the Lord who gives me counsel, who even at night directs my heart. I keep the Lord before me always; with him at my right hand, I shall not be moved. 

R.: Lord, you will show me the path of life.

And so, my heart rejoices, my soul is glad; even my flesh shall rest in hope. For you will not abandon my soul to hell, nor let your holy one see corruption.  

R.: Lord, you will show me the path of life.

You will show me the path of life, the fullness of joy in your presence, at your right hand, bliss forever. 

R.: Lord, you will show me the path of life.