இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 9 ஜூலை, 2026

ஜூலை 10 : முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ' என்று இனிச் சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

 ஜூலை 10 : முதல் வாசகம்

எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ' என்று இனிச் சொல்லமாட்டோம்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறுவது:
இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே! ‘ என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்” எனச் சொல்லுங்கள்.
அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்து விட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம்போல் இருக்கும்; லெபனோனைப் போல் அவன் நறுமணம் பரப்புவான்.
அவர்கள் திரும்பி வந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமை போல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு

July 10th : Gospel The Spirit of your Father will be speaking in you A Reading from the holy Gospel according to St.Matthew 10:16-23

 July 10th : Gospel

The Spirit of your Father will be speaking in you
A Reading from the holy Gospel according to St.Matthew 10:16-23
At the time: Jesus said to his disciples, “Behold, I am sending you out as sheep in the midst of wolves, so be wise as serpents and innocent as doves. Beware of men, for they will deliver you over to councils and flog you in their synagogues, and you will be dragged before governors and kings for my sake, to bear witness before them and the Gentiles. When they deliver you over, do not be anxious how you are to speak, or what you are to say, for what you are to say will be given to you in that hour. For it is not you who speak, but the Spirit of your Father speaking through you. Brother will deliver brother over to death, and the father his child, and children will rise against parents and have them put to death, and you will be hated by all for my name’s sake. But the one who endures to the end will be saved. When they persecute you in one town, flee to the next, for truly, I say to you, you will not have gone through all the towns of Israel before the Son of Man comes.”
The Gospel of the Lord

July 10th : Responsorial Psalm Psalm 51:3–4, 8–9, 12–13, 14 and 17 (R. 17b)

 July 10th : Responsorial Psalm

Psalm 51:3–4, 8–9, 12–13, 14 and 17 (R. 17b)
Response : My mouth shall proclaim your praise.
Have mercy on me, O God, according to your merciful love; according to your great compassion, blot out my transgressions. Wash me completely from my iniquity, and cleanse me from my sin.
R.: My mouth shall proclaim your praise.
Yes, you delight in sincerity of heart; in secret you teach me wisdom. Cleanse me with hyssop, and I shall be pure; wash me, and I shall be whiter than snow.
R.: My mouth shall proclaim your praise.
Create a pure heart for me, O God; renew a steadfast spirit within me. Do not cast me away from your presence; take not your holy spirit from me.
R.: My mouth shall proclaim your praise.
Restore in me the joy of your salvation; sustain in me a willing spirit. O Lord, open my lips and my mouth shall proclaim your praise.
R.: My mouth shall proclaim your praise.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. When the Spirit of truth comes, he will guide you into all the truth and bring to your remembrance all that I have said to you.
R. Alleluia.

July 10th : First reading A Reading from the book of the Prophet Hosea 14: 2-10 A call to conversion and promise of safety

 July 10th : First reading

A Reading from the book of the Prophet Hosea 14: 2-10
A call to conversion and promise of safety
Thus says the Lord; Return, O Israel, to the Lord your God for you have stumbled because of your iniquity. Take with you words and return to the Lord; say to him, “Take away all iniquity; accept what is good, and we will pay with bulls the vows of our lips. Assyria shall not save us, we will not ride on horses; and we will say no more, ‘Our God’, to the work of our hands. In you the orphan finds mercy.” I will heal their apostasy; I will love them freely, for my anger has turned from them. I will be like the dew to Israel; he shall blossom like the lily; he shall take root like the trees of Lebanon; his shoots shall spread out; his beauty shall be like the olive, and his fragrance like Lebanon. They shall return and dwell beneath my shadow; they shall flourish like the corn; they shall blossom like the vine; their fame shall be like the wine of Lebanon. O Ephraim, what have I to do with idols? It is I who answer and look after you. I am like an evergreen cypress; from me comes your fruit. Whoever is wise, let him understand these things; whoever is discerning, let him know them; for the ways of the Lord are right, and the upright walk in them, but transgressors stumble in them.
The Word of the Lord.

புதன், 8 ஜூலை, 2026

ஜூலை 9 : நற்செய்தி வாசகம் கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

 ஜூலை 9 : நற்செய்தி வாசகம்

கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 9 : பதிலுரைப் பாடல் திபா 80: 1ac-2b. 14-15 (பல்லவி: 3b)

 ஜூலை 9 : பதிலுரைப் பாடல்

திபா 80: 1ac-2b. 14-15 (பல்லவி: 3b)
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

1ac
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி
14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா

ஜூலை 9 : முதல் வாசகம் என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது. இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8c-9

 ஜூலை 9 : முதல் வாசகம்

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8c-9

ஆண்டவர் கூறியது:
இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.
ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.
என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு

July 9th : Gospel You received without charge: give without charge A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-15

 July 9th : Gospel

You received without charge: give without charge
A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-15
At that time: Jesus said to his apostles, “Proclaim as you go, saying, ‘The kingdom of heaven is at hand.’ Heal the sick, raise the dead, cleanse lepers, cast out demons. You received without paying; give without pay. Acquire no gold or silver or copper for your belts, no bag for your journey, or two tunics or sandals or a staff, for the labourer deserves his food. And whatever town or village you enter, find out who is worthy in it and stay there until you depart. As you enter the house, greet it. And if the house is worthy, let your peace come upon it, but if it is not worthy, let your peace return to you. And if anyone will not receive you or listen to your words, shake off the dust from your feet when you leave that house or town. Truly, I say to you, it will be more bearable on the day of judgment for the land of Sodom and Gomorrah than for that town.”
The Gospel of the Lord

July 9th : Responsorial Psalm Psalm 80 : 2ac and 3b, 15–16 (R. 4b)

 July 9th : Responsorial Psalm

Psalm 80 : 2ac and 3b, 15–16 (R. 4b)
Response : Let your face shine on us, Lord, and we shall be saved.
O shepherd of Israel, hear us, enthroned on the cherubim, shine forth. Rouse up your might and come to save us.
R.: Let your face shine on us, Lord, and we shall be saved.
God of hosts, turn again, we implore; look down from heaven and see. Visit this vine and protect it, the vine your right hand has planted. the son of man you have claimed for yourself.
R.: Let your face shine on us, Lord, and we shall be saved.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. The kingdom of God is at hand; repent and believe in the gospel.
R. Alleluia.

July 9th : First Reading I am the Holy One in your midst and have no wish to destroy A Reading from the Book of the Prophet Hosea 11:1-4, 8c-9

 July 9th : First Reading

I am the Holy One in your midst and have no wish to destroy
A Reading from the Book of the Prophet Hosea 11:1-4, 8c-9
Thus says the Lord: When Israel was a child I loved him, and out of Egypt I called my son. The more they were called, the more they went away; they kept sacrificing to the Baals and burning offerings to idols. Yet it was I who taught Ephraim to walk; I took them up by their arms, but they did not know that I healed them. I led them with cords of kindness, with the bands of love, and I became to them as one who eases the yoke on their jaws, and I bent down to them and fed them. My heart recoils within me; my compassion grows warm and tender. I will not execute my burning anger; I will not again destroy Ephraim; for I am God and not a man, the Holy One in your midst, and I will not come in wrath.
The Word of the Lord.