இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

ஆகஸ்ட் 11 :  நற்செய்தி வாசகம்

அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!

ஆகஸ்ட் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)

பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். - பல்லவி

5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை.
8
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17
அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12

ஆகஸ்ட் 11 :  முதல் வாசகம்

மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12
அந்நாள்களில்

மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்திய தரைக் கடல் வரையிலும் காட்டினார்; மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப் பரப்பையும் காட்டினார். அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'.

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவி கொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.

ஆண்டவர் நேருக்குநேர் சந்தித்த மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. ஏனெனில், எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார். இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Gospel of Jesus Christ according to Saint Matthew 18, 15-20

GOSPEL 

"If he listens to you, you have won your brother" 

Alleluia. Alleluia.
In Christ, God was reconciling the world with him:
he put the word of reconciliation in our mouths.
Alleluia. (cf. 2 Cor 5:19) 
Gospel of Jesus Christ according to Saint Matthew 18, 15-20 
At that time,
Jesus was saying to his disciples:
    “If your brother has sinned against you,
go and reproach him alone.
If he listens to you, you've won over your brother.
    If he does not listen to you,
take one or two more people with you
so that the whole affair is settled
on the word of two or three witnesses.
    If he refuses to listen to them,
tell the assembly of the Church;
if he still refuses to listen to the Church,
consider him a pagan and a tax collector.
    Amen, I say to you,
whatever you bind on earth
will be bound in heaven,
and whatever you loose on earth
will be loosed in heaven. 

    And likewise, amen, I tell you,
if any two of you on earth
agree to ask for anything,
they will get it from my Father who is in heaven.
    Indeed, when two or three are gathered in my name,
I am there, in the midst of them. " 

            - Let us acclaim the Word of God.

RESPONSORIAL Respons: Blessed be God, for he gives life to our soul. Psalm 65 (66), 1-3a, 5.8, 16-17 (Ps 65, 20a.9a)

RESPONSORIAL 

Respons: Blessed be God, for he gives life to our soul.  

Psalm 65 (66), 1-3a, 5.8, 16-17 (Ps 65, 20a.9a) 
Cheer on God, all the earth;
celebrate the glory of his name,
glorify him by celebrating his praise.
Say to God: “How dreadful are your actions! " 

Come and see the mighty deeds of God,
his dreadful deeds for the sons of men.
Peoples, bless our God!
Ring out his praise. 

Come, listen, all you who fear God:
I will tell you what he has done for my soul;
when I uttered my cry,
my mouth was already praising him. 


FIRST LECTURE “Moses died there, according to the word of the Lord. A prophet like Moses no longer arose in Israel ” Reading the book of Deuteronomy 34, 1-12

11 August 2021, General Week 19 - Wednesday 

The readings displayed below are from the Roman calendar. For this day, there are specific readings for: Luxembourg 

MASS READINGS 

FIRST LECTURE 

“Moses died there, according to the word of the Lord. A prophet like Moses no longer arose in Israel ” 

Reading the book of Deuteronomy 34, 1-12 

In those days
    Moses ascended from the steppes of Moab to Mount Nebo,
on a peak which is opposite Jericho.
The Lord showed him all the land:
Gilead as far as Dan,
    all Naphtali, the land of Ephraim and Manasseh,
all the land of Judah as far as the Mediterranean,
    the Negev, the region of the Jordan,
the valley of Jericho city ​​of Palms, to Soar.
    The Lord said to him:
“This land which you see,
I have sworn to Abraham, Isaac and Jacob
to give to their descendants.
I will show it to you, but you will not enter it. " 

    Moses the servant of the Lord
died there in the land of Moab,
according to the word of the Lord.
    They buried him in the valley opposite Beth-peor,
in the land of Moab.
But even today,
no one knows where his tomb is.
    Moses was 120 years old when he died;
his eyesight had not diminished, his vitality had not diminished.
    The children of Israel mourned for Moses in the steppes of Moab
thirty days.
It was then that the days of mourning for Moses ended.
    Joshua son of Nun was filled with the spirit of wisdom,
because Moses had laid his hands on him.
The children of Israel obeyed him,
they did as the Lord commanded Moses. 

    There no longer arose in Israel a prophet like Moses,
whom the Lord met face to face.
    What signs and wonders
the Lord had sent him to do in Egypt
before Pharaoh, all his servants, and all his land!
    With what a mighty hand, what a dreadful power,
Moses had acted in the eyes of all Israel! 

            - Word of the Lord. 


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

ஆகஸ்ட்  10  : நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 10 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.

ஆகஸ்ட்  10  : பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! 

என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 10 : புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழாமுதல் வாசகம்முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

ஆகஸ்ட்  10 :  புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா

முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10
சகோதரர் சகோதரிகளே,

குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 10th : Gospel If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvest.A Reading from the Holy Gospel according to St.John 12:24-26

August 10th : Gospel 

If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvest.

A Reading from the Holy Gospel according to St.John 12:24-26 
Jesus said to his disciples:
‘I tell you, most solemnly,
unless a wheat grain falls on the ground and dies,
it remains only a single grain;
but if it dies,
it yields a rich harvest.
Anyone who loves his life loses it;
anyone who hates his life in this world
will keep it for the eternal life.
If a man serves me, he must follow me,
wherever I am, my servant will be there too.
If anyone serves me, my Father will honour him.’

The Word of the Lord.