இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம்கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

செப்டம்பர் 29  :  நற்செய்தி வாசகம்

கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51
அக்காலத்தில்

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 29 : பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

செப்டம்பர் 29  :  பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி
2b
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

4
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5
ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 103: 21

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

முதல் வாசகம்பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

செப்டம்பர் 29  :  தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா

முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 29th : Gospel You will see heaven laid open, and the Son of Man.A Reading from the Holy Gospel according to St.John 1: 47-51

September 29th :   Gospel 

You will see heaven laid open, and the Son of Man.

A Reading from the Holy Gospel according to St.John 1: 47-51 
When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

September 29th : Responsorial PsalmPsalm 137(138):1-5 In the presence of the angels I will bless you, O Lord.

September 29th :  Responsorial Psalm

Psalm 137(138):1-5 

In the presence of the angels I will bless you, O Lord.
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

In the presence of the angels I will bless you, O Lord.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

In the presence of the angels I will bless you, O Lord.

All earth’s kings shall thank you
  when they hear the words of your mouth.
They shall sing of the Lord’s ways:
  ‘How great is the glory of the Lord!’

In the presence of the angels I will bless you, O Lord.

Gospel Acclamation Ps102:21

Alleluia, alleluia!
Give thanks to the Lord, all his hosts,
his servants who do his will.
Alleluia!

September 29th : First ReadingHis robe was white as snow.A Reading from the Book of Daniel 7: 9-10,13-14.

September 29th :  First Reading

His robe was white as snow.

A Reading from  the Book of Daniel 7: 9-10,13-14.
As I watched:
Thrones were set in place
and one of great age took his seat.
His robe was white as snow,
the hair of his head as pure as wool.
His throne was a blaze of flames,
its wheels were a burning fire.
A stream of fire poured out,
issuing from his presence.
A thousand thousand waited on him,
ten thousand times ten thousand stood before him.
A court was held
and the books were opened.
I gazed into the visions of the night.
And I saw, coming on the clouds of heaven,
one like a son of man.
He came to the one of great age
and was led into his presence.
On him was conferred sovereignty,
glory and kingship,
and men of all peoples, nations and languages became his servants.
His sovereignty is an eternal sovereignty
which shall never pass away,
nor will his empire ever be destroyed.

The Word of the Lord.

திங்கள், 27 செப்டம்பர், 2021

செப்டம்பர் 28 : நற்செய்தி வாசகம்இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56.

செப்டம்பர் 28 :   நற்செய்தி வாசகம்

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56.
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

செப்டம்பர் 28 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.

செப்டம்பர் 28 : பதிலுரைப் பாடல்

திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)

பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! 

மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 28 : முதல் வாசகம்வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

செப்டம்பர் 28 :  முதல் வாசகம்

வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 28th : Gospel Jesus sets out for Jerusalem.A Reading from the Holy Gospel according to St. Luke 9: 51-56

September 28th :  Gospel 

Jesus sets out for Jerusalem.

A Reading from the Holy Gospel according to St. Luke 9: 51-56 
As the time drew near for him to be taken up to heaven, Jesus resolutely took the road for Jerusalem and sent messengers ahead of him. These set out, and they went into a Samaritan village to make preparations for him, but the people would not receive him because he was making for Jerusalem. Seeing this, the disciples James and John said, ‘Lord, do you want us to call down fire from heaven to burn them up?’ But he turned and rebuked them, and they went off to another village.

The Word of the Lord.