இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 27 டிசம்பர், 2023

டிசம்பர் 28 : நற்செய்தி வாசகம்ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

டிசம்பர் 28 :  நற்செய்தி வாசகம்

ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 28 : பதிலுரைப் பாடல்திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

டிசம்பர் 28 :  பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.
2
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். - பல்லவி

4
அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். - பல்லவி

7b
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

December 28th : Gospel The massacre of the innocentsA reading from the Holy Gospel according to St.Matthew 2:13-18

December 28th :  Gospel 

The massacre of the innocents

A reading from the Holy Gospel according to St.Matthew 2:13-18 
After the wise men had left, the angel of the Lord appeared to Joseph in a dream and said, ‘Get up, take the child and his mother with you, and escape into Egypt, and stay there until I tell you, because Herod intends to search for the child and do away with him.’ So Joseph got up and, taking the child and his mother with him, left that night for Egypt, where he stayed until Herod was dead. This was to fulfil what the Lord had spoken through the prophet:
I called my son out of Egypt.
Herod was furious when he realised that he had been outwitted by the wise men, and in Bethlehem and its surrounding district he had all the male children killed who were two years old or under, reckoning by the date he had been careful to ask the wise men. It was then that the words spoken through the prophet Jeremiah were fulfilled:
A voice was heard in Ramah,
sobbing and loudly lamenting:
it was Rachel weeping for her children,
refusing to be comforted because they were no more.

The Word of the Lord.

டிசம்பர் 28 : புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழாமுதல் வாசகம்இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2

டிசம்பர் 28 :  புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா

முதல் வாசகம்

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2
சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 28th : Responsorial PsalmPsalm 123(124):2-5,7-8 Our life, like a bird, has escaped from the snare of the fowler.

December 28th : Responsorial Psalm

Psalm 123(124):2-5,7-8 

Our life, like a bird, has escaped from the snare of the fowler.
If the Lord had not been on our side
  when men rose up against us,
then would they have swallowed us alive
  when their anger was kindled.

Our life, like a bird, has escaped from the snare of the fowler.

Then would the waters have engulfed us,
  the torrent gone over us;
over our head would have swept
  the raging waters.

Our life, like a bird, has escaped from the snare of the fowler.

Indeed the snare has been broken
  and we have escaped.
Our help is in the name of the Lord,
  who made heaven and earth.

Our life, like a bird, has escaped from the snare of the fowler.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!

We praise you, O God,
we acknowledge you to be the Lord;
the noble army of martyrs praise you, O Lord.
Alleluia!

December 28th : First reading The blood of Jesus Christ purifies us all from sin1 John 1:5-2:2

December 28th :  First reading 

The blood of Jesus Christ purifies us all from sin

1 John 1:5-2:2 
This is what we have heard from Jesus Christ,
and the message that we are announcing to you:
God is light; there is no darkness in him at all.
If we say that we are in union with God
while we are living in darkness,
we are lying because we are not living the truth.
But if we live our lives in the light,
as he is in the light,
we are in union with one another,
and the blood of Jesus, his Son,
purifies us from all sin.
If we say we have no sin in us,
we are deceiving ourselves
and refusing to admit the truth;
but if we acknowledge our sins,
then God who is faithful and just
will forgive our sins and purify us
from everything that is wrong.
To say that we have never sinned
is to call God a liar
and to show that his word is not in us.
I am writing this, my children,
to stop you sinning;
but if anyone should sin,
we have our advocate with the Father,
Jesus Christ, who is just;
he is the sacrifice that takes our sins away,
and not only ours,
but the whole world’s.

The Word of the Lord.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

டிசம்பர் 27 : நற்செய்தி வாசகம்மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

டிசம்பர் 27 :  நற்செய்தி வாசகம்

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8
வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 27 : பதிலுரைப் பாடல்திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

டிசம்பர் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

11
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

டிசம்பர் 27 : புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழாமுதல் வாசகம்நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

டிசம்பர் 27 :  புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4
சகோதரர் சகோதரிகளே,

தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‘நிலைவாழ்வு’ பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 27th : Gospel The other disciple saw, and he believedA reading from the Holy Gospel according to St.John 20:2-8

December 27th :  Gospel 

The other disciple saw, and he believed

A reading from the Holy Gospel according to St.John 20:2-8 
On the first day of the week Mary of Magdala came running to Simon Peter and the other disciple, the one Jesus loved. ‘They have taken the Lord out of the tomb’ she said ‘and we don’t know where they have put him.’
  So Peter set out with the other disciple to go to the tomb. They ran together, but the other disciple, running faster than Peter, reached the tomb first; he bent down and saw the linen cloths lying on the ground, but did not go in. Simon Peter who was following now came up, went right into the tomb, saw the linen cloths on the ground, and also the cloth that had been over his head; this was not with the linen cloths but rolled up in a place by itself. Then the other disciple who had reached the tomb first also went in; he saw and he believed.

The Word of the Lord.