இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

சனவரி 15 : பதிலுரைப் பாடல்திபா 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: 23b)பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.

சனவரி 15 :  பதிலுரைப் பாடல்

திபா 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. - பல்லவி

16bc
என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். - பல்லவி

21
இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23
நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

சனவரி 15 : முதல் வாசகம்கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

சனவரி 15 :  முதல் வாசகம்

கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23
அந்நாள்களில்

சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார். சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, ‘நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு’ என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?”

அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.

அப்போது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 15th : Gospel 'Why do your disciples not fast?'A reading from the Holy Gospel according to St.Mark 2:18-22

January 15th :  Gospel 

'Why do your disciples not fast?'

A reading from the Holy Gospel according to St.Mark 2:18-22 
One day when John’s disciples and the Pharisees were fasting, some people came to Jesus and said to him, ‘Why is it that John’s disciples and the disciples of the Pharisees fast, but your disciples do not?’ Jesus replied, ‘Surely the bridegroom’s attendants would never think of fasting while the bridegroom is still with them? As long as they have the bridegroom with them, they could not think of fasting. But the time will come for the bridegroom to be taken away from them, and then, on that day, they will fast. No one sews a piece of unshrunken cloth on an old cloak; if he does, the patch pulls away from it, the new from the old, and the tear gets worse. And nobody puts new wine into old wineskins; if he does, the wine will burst the skins, and the wine is lost and the skins too. No! New wine, fresh skins!’

The Word of the Lord.

January 15th : Responsorial PsalmPsalm 49(50):8-9,16-17,21,23 I will show God’s salvation to the upright.

January 15th :  Responsorial Psalm

Psalm 49(50):8-9,16-17,21,23 

I will show God’s salvation to the upright.
‘I find no fault with your sacrifices,
  your offerings are always before me.
I do not ask more bullocks from your farms,
  nor goats from among your herds.

I will show God’s salvation to the upright.

‘But how can you recite my commandments
  and take my covenant on your lips,
you who despise my law
  and throw my words to the winds,

I will show God’s salvation to the upright.

‘You do this, and should I keep silence?
  Do you think that I am like you?
A sacrifice of thanksgiving honours me
  and I will show God’s salvation to the upright.’

I will show God’s salvation to the upright.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

January 15th : First reading Saul disobeys the Lord and the Lord rejects him1 Samuel 15:16-23

January 15th :  First reading 

Saul disobeys the Lord and the Lord rejects him

1 Samuel 15:16-23
Samuel said to Saul, ‘Stop! Let me tell you what the Lord said to me last night.’ Saul said, ‘Tell me.’ Samuel continued, ‘Small as you may be in your own eyes, are you not head of the tribes of Israel? The Lord has anointed you king over Israel. The Lord sent you on a mission and said to you, “Go, put these sinners, the Amalekites, under the ban and make war on them until they are exterminated.” Why then did you not obey the voice of the Lord? Why did you fall on the booty and do what is displeasing to the Lord?’ Saul replied to Samuel, ‘But I did obey the voice of the Lord. I went on the mission which the Lord gave me; I brought back Agag king of the Amalekites; I put the Amalekites under the ban. From the booty the people took the best sheep and oxen of what was under the ban to sacrifice them to the Lord your God in Gilgal.’ But Samuel replied:
‘Is the pleasure of the Lord in holocausts and sacrifices
or in obedience to the voice of the Lord?
Yes, obedience is better than sacrifice,
submissiveness better than the fat of rams.
Rebellion is a sin of sorcery,
presumption a crime of teraphim.
‘Since you have rejected the word of the Lord, he has rejected you as king.’

The Word of the Lord.

சனி, 13 ஜனவரி, 2024

சனவரி 14 : நற்செய்தி வாசகம்இயேசு தங்கியிருந்த இடத்தைச் சீடர் பார்த்தார்கள்; அவரோடு தங்கினார்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

சனவரி 14 :  நற்செய்தி வாசகம்

இயேசு தங்கியிருந்த இடத்தைச் சீடர் பார்த்தார்கள்; அவரோடு தங்கினார்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 14 : இரண்டாம் வாசகம்உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13c-15a, 17-20

சனவரி 14 :  இரண்டாம் வாசகம்

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13c-15a, 17-20
சகோதரர் சகோதரிகளே,

உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்.

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.

எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 41, 17b
அல்லேலூயா, அல்லேலூயா! 

மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா.

சனவரி 14 : பதிலுரைப் பாடல்திபா 40: 2,3. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a)பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

சனவரி 14 :  பதிலுரைப் பாடல்

திபா 40: 2,3. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a)

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
2
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

சனவரி 14 : முதல் வாசகம்ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 3b-10, 19

சனவரி 14 :  முதல் வாசகம்

ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 3b-10, 19
அந்நாள்களில்

கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான்.

ஆண்டவர் மீண்டும் ‘சாமுவேல்’ என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்” என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் முறையாக ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்து கொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான்.

அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான்.

சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 14th : Gospel 'We have found the Messiah'A reading from the Holy Gospel according to St.John 1:35-42

January 14th :  Gospel 

'We have found the Messiah'

A reading from the Holy Gospel according to St.John 1:35-42 
As John stood with two of his disciples, Jesus passed, and John stared hard at him and said, ‘Look, there is the lamb of God.’ Hearing this, the two disciples followed Jesus. Jesus turned round, saw them following and said, ‘What do you want?’ They answered, ‘Rabbi,’ – which means Teacher – ‘where do you live?’ ‘Come and see’ he replied; so they went and saw where he lived, and stayed with him the rest of that day. It was about the tenth hour.
  One of these two who became followers of Jesus after hearing what John had said was Andrew, the brother of Simon Peter. Early next morning, Andrew met his brother and said to him, ‘We have found the Messiah’ – which means the Christ – and he took Simon to Jesus. Jesus looked hard at him and said, ‘You are Simon son of John; you are to be called Cephas’ – meaning Rock.

The Word of the Lord.