இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 21st : Gospel Why be envious because I am generous? A Reading from the Holy Gospel according to St. Matthew 20: 1-16

 August 21st : Gospel

Why be envious because I am generous?
A Reading from the Holy Gospel according to St. Matthew 20: 1-16 
Jesus said to his disciples: ‘The kingdom of heaven is like a landowner going out at daybreak to hire workers for his vineyard. He made an agreement with the workers for one denarius a day, and sent them to his vineyard. Going out at about the third hour he saw others standing idle in the market place and said to them, “You go to my vineyard too and I will give you a fair wage.” So they went. At about the sixth hour and again at about the ninth hour, he went out and did the same. Then at about the eleventh hour he went out and found more men standing round, and he said to them, “Why have you been standing here idle all day?” “Because no one has hired us” they answered. He said to them, “You go into my vineyard too.” In the evening, the owner of the vineyard said to his bailiff, “Call the workers and pay them their wages, starting with the last arrivals and ending with the first.” So those who were hired at about the eleventh hour came forward and received one denarius each. When the first came, they expected to get more, but they too received one denarius each. They took it, but grumbled at the landowner. “The men who came last” they said “have done only one hour, and you have treated them the same as us, though we have done a heavy day’s work in all the heat.” He answered one of them and said, “My friend, I am not being unjust to you; did we not agree on one denarius? Take your earnings and go. I choose to pay the last comer as much as I pay you. Have I no right to do what I like with my own? Why be envious because I am generous?” Thus the last will be first, and the first, last.’
The Word of the Lord.

August 21st : Responsorial Psalm Psalm 22(23)

 August 21st : Responsorial Psalm 

Psalm 22(23) 

The Lord is my shepherd: there is nothing I shall want.

The Lord is my shepherd;

  there is nothing I shall want.

Fresh and green are the pastures

  where he gives me repose.

Near restful waters he leads me,

  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;

  he is true to his name.

If I should walk in the valley of darkness

  no evil would I fear.

You are there with your crook and your staff;

  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me

  in the sight of my foes.

My head you have anointed with oil;

  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me

  all the days of my life.

In the Lord’s own house shall I dwell

  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Gospel Acclamation Ps118:135

Alleluia, alleluia!

Let your face shine on your servant,

and teach me your decrees.

Alleluia!


August 21st : First Reading An oracle against bad and selfish shepherds A Reading from the Book of Ezekiel 34: 1-11

 August 21st : First Reading

An oracle against bad and selfish shepherds
A Reading from the Book of Ezekiel 34: 1-11
The word of the Lord was addressed to me as follows: ‘Son of man, prophesy against the shepherds of Israel; prophesy and say to them:
‘“Shepherds, the Lord says this: Trouble for the shepherds of Israel who feed themselves! Shepherds ought to feed their flock, yet you have fed on milk, you have dressed yourselves in wool, you have sacrificed the fattest sheep, but failed to feed the flock. You have failed to make weak sheep strong, or to care for the sick ones, or bandage the wounded ones. You have failed to bring back strays or look for the lost. On the contrary, you have ruled them cruelly and violently. For lack of a shepherd they have scattered, to become the prey of any wild animal; they have scattered far. My flock is straying this way and that, on mountains and on high hills; my flock has been scattered all over the country; no one bothers about them and no one looks for them.
‘“Well then, shepherds, hear the word of the Lord. As I live, I swear it – it is the Lord who speaks – since my flock has been looted and for lack of a shepherd is now the prey of any wild animal, since my shepherds have stopped bothering about my flock, since my shepherds feed themselves rather than my flock, in view of all this, shepherds, hear the word of the Lord. The Lord says this: I am going to call the shepherds to account. I am going to take my flock back from them and I shall not allow them to feed my flock. In this way the shepherds will stop feeding themselves. I shall rescue my sheep from their mouths; they will not prey on them any more.”
‘For the Lord says this: “I am going to look after my flock myself and keep all of it in view.”’
The Word of the Lord.

ஆகஸ்ட் 21 : நற்செய்தி வாசகம் நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

 ஆகஸ்ட் 21 : நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில்
இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 21 : பதிலுரைப் பாடல் திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

 ஆகஸ்ட் 21 : பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 21 : முதல் வாசகம் அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

 ஆகஸ்ட் 21 :  முதல் வாசகம்

அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11


அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள்.

எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


திங்கள், 19 ஆகஸ்ட், 2024

August 20th : Gospel It is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of heaven A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 23-30

 August 20th : Gospel

It is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of heaven

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 23-30 


Jesus said to his disciples, ‘I tell you solemnly, it will be hard for a rich man to enter the kingdom of heaven. Yes, I tell you again, it is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of heaven.’ When the disciples heard this they were astonished. ‘Who can be saved, then?’ they said. Jesus gazed at them. ‘For men’ he told them ‘this is impossible; for God everything is possible.’

  Then Peter spoke. ‘What about us?’ he said to him ‘We have left everything and followed you. What are we to have, then?’ Jesus said to him, ‘I tell you solemnly, when all is made new and the Son of Man sits on his throne of glory, you will yourselves sit on twelve thrones to judge the twelve tribes of Israel. And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will be repaid a hundred times over, and also inherit eternal life.

  ‘Many who are first will be last, and the last, first.’

The Word of the Lord.

August 20th : Responsorial Psalm Deuteronomy 32:26-28,30,35-36

 August 20th : Responsorial Psalm

Deuteronomy 32:26-28,30,35-36 






It is the Lord who deals death and life.

I should crush them to dust, said the Lord.

I should wipe out their memory among men,

did I not fear the boasting of the enemy.

But let not their foes be mistaken!

It is the Lord who deals death and life.

Let them not say: Our own power wins the victory,

the Lord plays no part in this.

What a nation of short sight it is;

in them there is no understanding.

It is the Lord who deals death and life.

How else could one man rout a thousand,

how could two put ten thousand to flight,

were it not that their Rock has sold them,

that the Lord has delivered them up?

It is the Lord who deals death and life.

For it is close, the day of their ruin;

their doom comes at speed.

For the Lord will see his people righted,

he will take pity on his servants.

It is the Lord who deals death and life.

Gospel Acclamation Ps24:4,5

Alleluia, alleluia!

Teach me your paths, my God,

make me walk in your truth.

Alleluia!

August 20th : First Reading Against the arrogance of the king of Tyre A Reading from the Book of Ezekiel 28: 1-10

 August 20th : First Reading 

Against the arrogance of the king of Tyre

A Reading from the Book of Ezekiel 28: 1-10 




The word of the Lord was addressed to me as follows, ‘Son of man, tell the ruler of Tyre, “The Lord says this:

Being swollen with pride,

you have said: I am a god;

I am sitting on the throne of God,

surrounded by the seas.

Though you are a man and not a god,

you consider yourself the equal of God.

You are wiser now than Danel;

there is no sage as wise as you.

By your wisdom and your intelligence

you have amassed great wealth;

you have piles of gold and silver

inside your treasure-houses.

Such is your skill in trading,

your wealth has continued to increase,

and with this your heart has grown more arrogant.

And so, the Lord says this:

Since you consider yourself the equal of God,

very well, I am going to bring foreigners against you,

the most barbarous of the nations.

They will draw sword against your fine wisdom,

they will defile your glory;

they will throw you down into the pit

and you will die a violent death

surrounded by the seas.

Are you still going to say: I am a god,

when your murderers confront you?

No, you are a man and not a god

in the clutches of your murderers!

You will die like the uncircumcised

at the hand of foreigners.

For I have spoken – it is the Lord who speaks.”’

The Word of the Lord.

ஆகஸ்ட் 20 : நற்செய்தி வாசகம் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

 ஆகஸ்ட் 20 :  நற்செய்தி வாசகம்

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30


அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.