வியாழன், 27 மார்ச், 2025
March 28th : Gospel 'You are not far from the kingdom of God'A reading from the Holy Gospel according to St.Mark 12: 28-34
March 28th : Responsorial PsalmPsalm 80(81):6,8-11,14,17 I am the Lord your God: listen to my warning
March 28th : First reading A call to conversion and promise of safetyA reading from the book of the Prophet Hosea 14: 2-10
மார்ச் 28 : நற்செய்தி வாசகம்நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
மார்ச் 28 : பதிலுரைப் பாடல்திபா 81: 5c-7a. 7bc-8. 9-10ab. 13,16 (பல்லவி: 10,8a)பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
மார்ச் 28 : முதல் வாசகம்எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9
புதன், 26 மார்ச், 2025
மார்ச் 27 : நற்செய்தி வாசகம் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
மார்ச் 27 : நற்செய்தி வாசகம்
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
அக்காலத்தில்
யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மார்ச் 27 : பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க) பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
மார்ச் 27 : பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி
6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். - பல்லவி
7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவே 2: 12-13
'இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,’ என்கிறார் ஆண்டவர்.
மார்ச் 27 : முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28
மார்ச் 27 : முதல் வாசகம்
தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28
ஆண்டவர் கூறியது:
நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.
அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.
நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.
ஆண்டவரின் அருள்வாக்கு.
March 27th : Gospel Know that the kingdom of God has overtaken you A reading from the Holy Gospel according to St.Luke 11:14-23
March 27th : Gospel
Know that the kingdom of God has overtaken you
A reading from the Holy Gospel according to St.Luke 11:14-23
Jesus was casting out a devil and it was dumb; but when the devil had gone out the dumb man spoke, and the people were amazed. But some of them said, ‘It is through Beelzebul, the prince of devils, that he casts out devils.’ Others asked him, as a test, for a sign from heaven; but, knowing what they were thinking, he said to them, ‘Every kingdom divided against itself is heading for ruin, and a household divided against itself collapses. So too with Satan: if he is divided against himself, how can his kingdom stand? – since you assert that it is through Beelzebul that I cast out devils. Now if it is through Beelzebul that I cast out devils, through whom do your own experts cast them out? Let them be your judges then. But if it is through the finger of God that I cast out devils, then know that the kingdom of God has overtaken you. So long as a strong man fully armed guards his own palace, his goods are undisturbed; but when someone stronger than he is attacks and defeats him, the stronger man takes away all the weapons he relied on and shares out his spoil.
‘He who is not with me is against me; and he who does not gather with me scatters.’
The Word of the Lord.