இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 9 ஜூன், 2025

ஜூன் 10 : நற்செய்தி வாசகம் நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

 ஜூன் 10 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!

அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 10. : பதிலுரைப் பாடல் திபா 119: 129-130. 131-132. 133,135 (பல்லவி: 135a) பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!

 ஜூன் 10. :  பதிலுரைப் பாடல்

திபா 119: 129-130. 131-132. 133,135 (பல்லவி: 135a)


பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!

129

உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

130

உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி

131

வாயை ‘ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.

132

உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்! - பல்லவி

133

உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ள விடாதேயும்!

135

உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! 

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

ஜூன் 10 : முதல் வாசகம் இயேசு கிறிஸ்து ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22

 ஜூன் 10 :  முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22


சகோதரர் சகோதரிகளே,

நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.

கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 10th : Gospel Your light must shine in the sight of men A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

 June 10th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 

Jesus said to his disciples: ‘You are the salt of the earth. But if salt becomes tasteless, what can make it salty again? It is good for nothing, and can only be thrown out to be trampled underfoot by men.

  ‘You are the light of the world. A city built on a hill-top cannot be hidden. No one lights a lamp to put it under a tub; they put it on the lamp-stand where it shines for everyone in the house. In the same way your light must shine in the sight of men, so that, seeing your good works, they may give the praise to your Father in heaven.’

The Word of the Lord.

June 10th : Responsorial Psalm Psalm 118(119):129-133,135

 June 10th :  Responsorial Psalm

Psalm 118(119):129-133,135 

Let your face shine on your servant.

Your will is wonderful indeed;

  therefore I obey it.

The unfolding of your word gives light

  and teaches the simple.

Let your face shine on your servant.

I open my mouth and I sigh

  as I yearn for your commands.

Turn and show me your mercy;

  show justice to your friends.

Let your face shine on your servant.

Let my steps be guided by your promise;

  let no evil rule me.

Let your face shine on your servant

  and teach me your decrees.

Let your face shine on your servant.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars

because you are offering it the word of life.

Alleluia!

June 10th : First Reading God himself has anointed us and given us his Spirit A Reading from the Second letter of St.Paul to the Corinthians 1:18-22

 June 10th :  First Reading 

God himself has anointed us and given us his Spirit

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 1:18-22

I swear by God’s truth, there is no Yes and No about what we say to you. The Son of God, the Christ Jesus that we proclaimed among you – I mean Silvanus and Timothy and I – was never Yes and No: with him it was always Yes, and however many the promises God made, the Yes to them all is in him. That is why it is ‘through him’ that we answer Amen to the praise of God. Remember it is God himself who assures us all, and you, of our standing in Christ, and has anointed us, marking us with his seal and giving us the pledge, the Spirit, that we carry in our hearts.

The Word of the Lord.


ஞாயிறு, 8 ஜூன், 2025

ஜூன் 9 : நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

ஜூன் 9  :  நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 9 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.

ஜூன் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.

1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

ஜூன் 9 : முதல் வாசகம்உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

ஜூன் 9  : முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 9th : Gospel 'Behold your son. Behold your mother.'A Reading from the Holy Gospel according to St.John 19: 25-34

June 9th :  Gospel 

'Behold your son. Behold your mother.'

A Reading from the Holy Gospel according to St.John 19: 25-34 

Near the cross of Jesus stood his mother and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary of Magdala. Seeing his mother and the disciple he loved standing near her, Jesus said to his mother, ‘Woman, this is your son.’ Then to the disciple he said, ‘This is your mother.’ And from that moment the disciple made a place for her in his home.
  After this, Jesus knew that everything had now been completed, and to fulfil the scripture perfectly he said, ‘I am thirsty.’
  A jar full of vinegar stood there, so putting a sponge soaked in the vinegar on a hyssop stick they held it up to his mouth. After Jesus had taken the vinegar he said, ‘It is accomplished’; and bowing his head he gave up his spirit.
  It was Preparation Day, and to prevent the bodies remaining on the cross during the sabbath – since that sabbath was a day of special solemnity – the Jews asked Pilate to have the legs broken and the bodies taken away. Consequently the soldiers came and broke the legs of the first man who had been crucified with him and then of the other. When they came to Jesus, they found he was already dead, and so instead of breaking his legs one of the soldiers pierced his side with a lance; and immediately there came out blood and water.

The Word of the Lord.