இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 19 ஜூன், 2025

ஜூன் 20 : நற்செய்தி வாசகம் உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

 ஜூன் 20 :  நற்செய்தி வாசகம்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 20 : பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b) பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்.

 ஜூன் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b)


பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்.

1

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2

நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

ஜூன் 20 : முதல் வாசகம் எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18, 21b-30

 ஜூன் 20 :  முதல் வாசகம்

எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18, 21b-30


சகோதரர் சகோதரிகளே,

பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.

அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.

இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 20th : Gospel Store up treasure for yourselves in heaven A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 19-23

 June 20th :  Gospel 

Store up treasure for yourselves in heaven

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 19-23 

Jesus said to his disciples: ‘Do not store up treasures for yourselves on earth, where moths and woodworms destroy them and thieves can break in and steal. But store up treasures for yourselves in heaven, where neither moth nor woodworms destroy them and thieves cannot break in and steal. For where your treasure is, there will your heart be also.

  ‘The lamp of the body is the eye. It follows that if your eye is sound, your whole body will be filled with light. But if your eye is diseased, your whole body will be all darkness. If then, the light inside you is darkness, what darkness that will be!’

The Word of the Lord.

June 20th : Responsorial Psalm Psalm 33(34):2-7

 June 20th :  Responsorial Psalm

Psalm 33(34):2-7 

The Lord rescues the just in all their distress.

I will bless the Lord at all times,

  his praise always on my lips;

in the Lord my soul shall make its boast.

  The humble shall hear and be glad.

The Lord rescues the just in all their distress.

Glorify the Lord with me.

  Together let us praise his name.

I sought the Lord and he answered me;

  from all my terrors he set me free.

The Lord rescues the just in all their distress.

Look towards him and be radiant;

  let your faces not be abashed.

This poor man called, the Lord heard him

  and rescued him from all his distress.

The Lord rescues the just in all their distress.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;

anyone who follows me will have the light of life.

Alleluia!

June 20th : First Reading If I am to boast, let me boast of my own feebleness A Reading from the Second letter of St.Paul to the Corinthians 11:18,21-30

 June 20th :  First Reading

If I am to boast, let me boast of my own feebleness

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 11:18,21-30 

So many others have been boasting of their worldly achievements, that I will boast myself. But if anyone wants some brazen speaking – I am still talking as a fool – then I can be as brazen as any of them, and about the same things. Hebrews, are they? So am I. Israelites? So am I. Descendants of Abraham? So am I. The servants of Christ? I must be mad to say this, but so am I, and more than they: more, because I have worked harder, I have been sent to prison more often, and whipped many times more, often almost to death. Five times I had the thirty-nine lashes from the Jews; three times I have been beaten with sticks; once I was stoned; three times I have been shipwrecked and once adrift in the open sea for a night and a day. Constantly travelling, I have been in danger from rivers and in danger from brigands, in danger from my own people and in danger from pagans; in danger in the towns, in danger in the open country, danger at sea and danger from so-called brothers. I have worked and laboured, often without sleep; I have been hungry and thirsty and often starving; I have been in the cold without clothes. And, to leave out much more, there is my daily preoccupation: my anxiety for all the churches. When any man has had scruples, I have had scruples with him; when any man is made to fall, I am tortured.

  If I am to boast, then let me boast of my own feebleness.

The Word of the Lord.

புதன், 18 ஜூன், 2025

June 19th : Gospel How to prayA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15

June 19th :  Gospel 

How to pray

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15 

Jesus said to his disciples: ‘In your prayers do not babble as the pagans do, for they think that by using many words they will make themselves heard. Do not be like them; your Father knows what you need before you ask him. So you should pray like this:
‘Our Father in heaven,
may your name be held holy,
your kingdom come,
your will be done,
on earth as in heaven.
Give us today our daily bread.
And forgive us our debts, as we have forgiven those who are in debt to us.
And do not put us to the test,
but save us from the evil one.
‘Yes, if you forgive others their failings, your heavenly Father will forgive you yours; but if you do not forgive others, your Father will not forgive your failings either.’

The Word of the Lord.

June 19th : Responsorial PsalmPsalm 110(111):1-4,7-8 Your works, Lord, are justice and truth.orAlleluia!

June 19th :  Responsorial Psalm

Psalm 110(111):1-4,7-8 

Your works, Lord, are justice and truth.
or
Alleluia!

I will thank the Lord with all my heart
  in the meeting of the just and their assembly.
Great are the works of the Lord,
  to be pondered by all who love them.

Your works, Lord, are justice and truth.
or
Alleluia!

Majestic and glorious his work,
  his justice stands firm for ever.
He makes us remember his wonders.
  The Lord is compassion and love.

Your works, Lord, are justice and truth.
or
Alleluia!

His works are justice and truth,
  his precepts are all of them sure,
standing firm for ever and ever;
  they are made in uprightness and truth.

Your works, Lord, are justice and truth.
or
Alleluia!

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

June 19th : First ReadingI was careful not to be a burden to you in any wayA Reading from the Second Letter of St.Paul to the Corinthians 11:1-11

June 19th :  First Reading

I was careful not to be a burden to you in any way

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 11:1-11 

I only wish you were able to tolerate a little foolishness from me. But of course: you are tolerant towards me. You see, the jealousy that I feel for you is God’s own jealousy: I arranged for you to marry Christ so that I might give you away as a chaste virgin to this one husband. But the serpent, with his cunning, seduced Eve, and I am afraid that in the same way your ideas may get corrupted and turned away from simple devotion to Christ. Because any new-comer has only to proclaim a new Jesus, different from the one that we preached, or you have only to receive a new spirit, different from the one you have already received, or a new gospel, different from the one you have already accepted – and you welcome it with open arms. As far as I can tell, these arch-apostles have nothing more than I have. I may not be a polished speechmaker, but as for knowledge, that is a different matter; surely we have made this plain, speaking on every subject in front of all of you.
  Or was I wrong, lowering myself so as to lift you high, by preaching the gospel of God to you and taking no fee for it? I was robbing other churches, living on them so that I could serve you. When I was with you and ran out of money, I was no burden to anyone; the brothers who came from Macedonia provided me with everything I wanted. I was very careful, and I always shall be, not to be a burden to you in any way, and by Christ’s truth in me, this cause of boasting will never be taken from me in the regions of Achaia. Would I do that if I did not love you? God knows I do.

The Word of the Lord.

ஜூன் 19 : நற்செய்தி வாசகம்நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

ஜூன் 19 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.