இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 28 நவம்பர், 2025

நவம்பர் 29 : நற்செய்தி வாசகம்மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

நவம்பர் 29 :  நற்செய்தி வாசகம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------------------------------
உங்கள் உள்ளம் குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

I தானியேல் 7: 15-27
II லூக்கா 21: 34-36

உங்கள் உள்ளம் குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்

குடிகாரனும் இயேசுவும்:

நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த குடிகாரன் ஒருவன், ஒரு குளத்தில் போதகர் ஒருவர் முழுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருபதைக் கண்டான். அவரிடம் முழுக்குத் திருமுழுக்குப் பெற பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். முழுக்குத் திருமுழுக்கு என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் குடிகாரன் அவர்களோடு வரிசையில் நின்றான்.

அவனுடைய முறை வந்தது. போதகர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, “இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்றார். அவன் இல்லை என்றதும், மீண்டுமாக அவர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, முன்புகேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் அவன் அதே பதிலைச் சொன்னதால், மூன்றாம் முறையாக அவனை அவர் நீருக்குள் முக்கி எடுத்தார். இந்த முறை அவர் அவனை, அவனுக்கு மூச்சுமுட்டுகிற வரை முக்கி எடுத்ததால், அவன் சற்றே பதறிப்போனான். “இந்த முறையாவது நீ இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்று போதகர் அவனிடம் தன் குரலை உயர்த்திக் கேட்டபோது, அவன் மிகவும் அப்பாவியாய், “இங்குதான் இயேசு விழுந்தாரா?” என்றான்.

வேடிக்கையான நிகழ்வாக இது இருந்தாலும், குடிக்கு அடிமையான ஒருவருடைய வாழ்க்கை எப்படிப் பாழாய்ப்போகிறது என்பதை உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, குடிக்கு அடிமையாகிவிடாமல் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகின்ற இயேசு, அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், உங்கள் உள்ளம் குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை ஆகியவற்றால் மந்த மடைந்துவிடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்.

குடிவெறியர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள முடியாது (1 கொரி 6:10; கலா 5:21). அதனால் இயேசு, குடிவேறியினாலும், இன்ன பிறவற்றாலும் உள்ளம் மந்தமடைந்திடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார். மேலும், மானிட மகனை எதிர்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாய் இருக்க விழிப்பாய் இருந்து மன்றாடுங்கள் என்கிறார்.

இவ்வாறு எவர் ஒருவர் குடிவேறியினால் மந்தமடைந்துவிடாது, விழிந்திருந்து மன்றாடுகின்றாரோ, அவர் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, ஆட்சியையும் அரசுரிமையையும் பெறுவார். நாம் உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, இறையாட்சியைப் பெறத் தயாரா?

சிந்தனைக்கு:

 குடியினால் மூளையை அடகு வைத்தவன், எல்லாவற்றையும் அடகு வைப்பான்.

 குடி ஒருவனுடைய மூளையை மழுங்கடித்து, அவனை முன்னேற விடாமல் செய்துவிடுகின்றது.

 குடிக்கு அடிமையாய் இருப்பதைவிட, ஆண்டவருக்கு அடிமையாய் இருப்போருக்கு ஆசிகள் பல.

ஆன்றோர் வாக்கு:

‘மனிதர்களிடம் இருக்கும் மிக வலிமையான ஆயுதம் இறைவேண்டல்’ என்பார் காந்தியடிகள். ஆகையால், நமது இறைவேண்டலால் சோதனைகளை முறியடித்து, இறைவனின் அன்பு மக்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

நவம்பர் 29 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.

நவம்பர் 29 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)

பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.
59
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
60
இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

61
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
62
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

63
நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
64
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா!

 மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நவம்பர் 29 : முதல் வாசகம்ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27

நவம்பர் 29 :  முதல் வாசகம்

ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27
தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, ‘இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?’ என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழிஊழிக்காலமும் கொண்டிருப்பர்.

அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றை விடப் பெரிதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது.

அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்ற இருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்; அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 29th : Gospel That day will be sprung on you suddenly, like a trapA reading from the Holy Gospel according to St.Luke 21:34-36

November 29th :  Gospel  

That day will be sprung on you suddenly, like a trap

A reading from the Holy Gospel according to St.Luke 21:34-36

At that time: Jesus said to his disciples, “Watch yourselves lest your hearts be weighed down with dissipation and drunkenness and cares of this life, and that day come upon you suddenly like a trap. For it will come upon all who dwell on the face of the whole earth. But stay awake at all times, praying that you may have strength to escape all these things that are going to take place, and to stand before the Son of Man.”

The Gospel of the Lord.

November 29th : Responsorial PsalmDaniel 3:82, 83, 84, 85, 86, 87 (R. 59b)Response : Sing praise to him and highly exalt him forever.

November 29th : Responsorial Psalm

Daniel 3:82, 83, 84, 85, 86, 87 (R. 59b)

Response : Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, you sons of men, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, O Israel, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, you priests, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, you servants of the Lord sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, spirits and souls of the righteous, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, you who are holy and humble in heart, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Stay awake at all times, praying that you may have strength to stand before the Son of Man.

R. Alleluia.

November 29th : First reading His sovereignty will be an eternal sovereigntyA reading from the book of the prophet Daniel 7:15-27

November 29th :  First reading 

His sovereignty will be an eternal sovereignty

A reading from the book of the prophet Daniel 7:15-27 

As for me, Daniel, my spirit within me was anxious, and the visions of my head alarmed me. I approached one of those who stood there and asked him the truth concerning all this. So he told me and made known to me the interpretation of the things. “These four great beasts are four kings who shall arise out of the earth. But the saints of the Most High shall receive the kingdom and possess the kingdom for ever, for ever and ever.’” Then I desired to know the truth about the fourth beast,

which was different from all the rest, exceedingly terrifying, with its teeth of iron and claws of bronze, and which devoured and broke in pieces and stamped what was left with its feet and about the ten horns that were on its head, and the other horn that came up and before which three of them fell, the horn that had eyes and a mouth that spoke great things, and that seemed greater than its companions. As I looked, this horn made war with the saints and prevailed over them, until the Ancient of Days came, and judgment was given for the saints of the Most High, and the time came when the saints possessed the kingdom. Thus he said: “As for the fourth beast, there shall be a fourth kingdom on earth, which shall be different from all the kingdoms, and it shall devour the whole earth, and trample it down, and break it to pieces. As for the ten horns, out of this kingdom ten kings shall arise, and another shall arise after them; he shall be different from the former ones, and shall put down three kings. He shall speak words against the Most High, and shall wear out the saints of the Most High, and shall think to change the times and the law; and they shall be given into his hand for a time, times, and half a time. But the court shall sit in judgment, and his dominion shall be taken away, to be consumed and destroyed to the end.

And the kingdom and the dominion and the greatness of the kingdoms under the whole heaven shall be given to the people of the saints of the Most High; his kingdom shall be an everlasting kingdom, and all dominions shall serve and obey him.”

The word of the Lord.

வியாழன், 27 நவம்பர், 2025

நவம்பர் 28 : நற்செய்தி வாசகம் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

 நவம்பர் 28 :  நற்செய்தி வாசகம்

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33


அக்காலத்தில்

இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 28 : பதிலுரைப் பாடல் தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b) பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

 நவம்பர் 28 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

52

மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி


53

நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;

54

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

55

நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;

56

திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

57

வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;

58

காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.


நவம்பர் 28 : முதல் வாசகம் வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

 நவம்பர் 28 :  முதல் வாசகம்

வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14


இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின. அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப் போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.

அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது. இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறொரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது.

இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன.

நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரிநெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.

இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 28th : Gospel My words will never pass away A reading from the Holy Gospel according to St.Luke 21:29-33

 November 28th  :  Gospel 

My words will never pass away

A reading from the Holy Gospel according to St.Luke 21:29-33 

At that time: Jesus told his disciples a parable: “Look at the fig tree, and all the trees. As soon as they come out in leaf, you see for yourselves and know that the summer is already near. So also, when you see these things taking place, you know that the kingdom of God is near. Truly, I say to you, this generation will not pass away until all has taken place. Heaven and earth will pass away, but my words will not pass away.”

The Gospel of the Lord.