இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 6 ஜூலை, 2026

July 7th : Gospel The harvest is rich but the labourers are few. A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 32-37

 July 7th : Gospel

The harvest is rich but the labourers are few.
A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 32-37
At that time: A demon-oppressed man who was mute was brought to Jesus. And when the demon had been cast out, the mute man spoke. And the crowds marvelled, saying, “Never was anything like this seen in Israel.” But the Pharisees said, “He casts out demons by the prince of demons.” And Jesus went throughout all the cities and villages, teaching in their synagogues and proclaiming the gospel of the kingdom and healing every disease and every infirmity. When he saw the crowds, he had compassion for them, because they were harassed and helpless, like sheep without a shepherd. Then he said to his disciples, “The harvest is plentiful, but the labourers are few; therefore pray earnestly to the Lord of the harvest to send out labourers into his harvest.”
The Gospel of the Lord.

July 7th : Responsorial Psalm Psalm 115:3–4. 5–6, 7ab and 8, 9–10 (R. 9a) Response : House of Israel, trust in the Lord.

 July 7th : Responsorial Psalm

Psalm 115:3–4. 5–6, 7ab and 8, 9–10 (R. 9a)
Response : House of Israel, trust in the Lord.
But our God is in the heavens; he does whatever he wills. Their idols are silver and gold, the work of human hands.
R.: House of Israel, trust in the Lord.
They have mouths but they cannot speak; they have eyes but they cannot see. They have ears but they cannot hear; they have nostrils but they cannot smell.
R.: House of Israel, trust in the Lord.
They have hands but they cannot feel; they have feet but they cannot walk. Their makers will come to be like them, as will all who trust in them.
R.: House of Israel, trust in the Lord.
House of Israel, trust in the Lord; he is their help and their shield. House of Aaron, trust in the Lord; he is their help and their shield.
R.: House of Israel, trust in the Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I am the good shepherd, says the Lord; I know my own and my own know me.
R. Alleluia

July 7th : First Reading They have sown the wind; they will reap the whirlwind. A Reading from the Book of.the Prophet Hosea 8: 4-7,11-13

 July 7th : First Reading

They have sown the wind; they will reap the whirlwind.
A Reading from the Book of.the Prophet Hosea 8: 4-7,11-13
Thus says the Lord: Israel made kings, but not through me. They set up princes, but I knew it not. With their silver and gold they made idols for their own destruction. I have spurned your calf, O Samaria. My anger burns against them. How long will they be incapable of innocence? For it is from Israel; a craftsman made it; it is not God. The calf of Samaria shall be broken to pieces. For they sow the wind, and they shall reap the whirlwind. The standing corn has no heads; it shall yield no flour; if it were to yield, strangers would devour it. Because Ephraim has multiplied altars for sinning, they have become to him altars for sinning. Were I to write for him my laws by the ten thousands, they would be regarded as a strange thing. As for my sacrificial offerings, they sacrifice meat and eat it, but the Lord does not accept them. Now he will remember their iniquity and punish their sins; they shall return to Egypt.
The Word of the Lord.

நற்செய்தி வாசகம் அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

 நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38


அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9a) பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

 பதிலுரைப் பாடல்

திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9a)

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.


3
நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
4
அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! - பல்லவி

5
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;
6
செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. - பல்லவி

7
கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8
அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். - பல்லவி

9
இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
10
ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

முதல் வாசகம் அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13

 07 ஜூலை 2026, செவ்வாய்

பொதுக்காலம் 14ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13

ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்.


எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

July 6th : Gospel 'Your faith has restored you to health'A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 18-26

July 6th :  Gospel 

'Your faith has restored you to health'

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 18-26 

At that time: While Jesus was speaking, behold, a ruler came in and knelt before him, saying, “My daughter has just died, but come and lay your hand on her, and she will live.” And Jesus rose and followed him, with his disciples. And behold, a woman who had suffered from a discharge of blood for twelve years came up behind him and touched the fringe of his garment, for she said to herself, “If I only touch his garment, I will be made well.” Jesus turned, and seeing her he said, “Take heart, daughter; your faith has made you well.” And instantly the woman was made well. And when Jesus came to the ruler’s house and saw the flute players and the crowd making a commotion, he said, “Go away, for the girl is not dead but sleeping.” And they laughed at him. But when the crowd had been put outside, he went in and took her by the hand, and the girl arose. And the report of this went through all that district.

The Gospel of the Lord.

July 6th : Responsorial PsalmPsalm 145:2–3, 4–5, 6–7, 8–9 (R. 8a)Response : The Lord is kind and full of compassion.

July 6th :  Responsorial Psalm

Psalm 145:2–3, 4–5, 6–7, 8–9 (R. 8a)

Response :  The Lord is kind and full of compassion.

I will bless you day after day, and praise your name forever and ever. The Lord is great and highly to be praised; his greatness cannot be measured. 

R. : The Lord is kind and full of compassion.

Age to age shall proclaim your works, shall declare your mighty deeds. They will tell of your great glory and splendour, and recount your wonderful works. 

R. : The Lord is kind and full of compassion.

They will speak of your awesome deeds, recount your greatness and might. They will recall your abundant goodness, and sing of your just deeds with joy. 

R.  The Lord is kind and full of compassion.

The Lord is kind and full of compassion, slow to anger, abounding in mercy. How good is the Lord to all, compassionate to all his creatures. 

R.  The Lord is kind and full of compassion.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Our Saviour Christ Jesus abolished death and brought life and immortality to light through the gospel.

R. Alleluia.

July 6th : First ReadingI will betroth you to myself and you will come to know the name of the LordA Reading from the Book of the Prophet Hosea 2:14, 15cd–16, 19–20

July 6th : First Reading

I will betroth you to myself and you will come to know the name of the Lord

A Reading from the Book of the Prophet Hosea 2:14, 15cd–16, 19–20

Thus says the Lord: “Behold, I will allure her, and bring her into the wilderness, and speak tenderly to her. And there she shall answer as in the days of her youth, as at the time when she came out of the land of Egypt. “And in that day, declares the Lord, you will call me ‘My Husband’, and no longer will you call me ‘My Baal’. And I will betroth you to me for ever. I will betroth you to me in righteousness and in justice, in steadfast love and in mercy. I will betroth you to me in faithfulness. And you shall know the Lord.”

The Word of the Lord.

ஜூலை 6 : நற்செய்தி வாசகம்என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26

ஜூலை 6 :  நற்செய்தி வாசகம்

என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.

இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.