இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 24 ஜூலை, 2026

ஜூலை 25 : நற்செய்தி வாசகம் என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28 அக்காலத்தில்

 ஜூலை 25 : நற்செய்தி வாசகம்

என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28

அக்காலத்தில்
செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.
அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள், “எங்களால் இயலும்” என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர்.
இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 25 : பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5) பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

 ஜூலை 25 : பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி
2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி
4
ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி
6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா!
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர்.

ஜூலை 25 : புனித யாக்கோபு - திருத்தூதர் விழா முதல் வாசகம் இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15

 ஜூலை 25 : புனித யாக்கோபு - திருத்தூதர் விழா

முதல் வாசகம்
இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15
சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடு இருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.
“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

July 25th : Gospel 'Can you drink the cup that I am going to drink?' A Reading from the Holy Gospel according to St.Matthew 20: 20-28

 July 25th : Gospel

'Can you drink the cup that I am going to drink?'
A Reading from the Holy Gospel according to St.Matthew 20: 20-28
At that time: The mother of the sons of Zebedee came up to Jesus with her sons, and kneeling before him she asked him for something. And he said to her, “What do you want?” She said to him, “Say that these two sons of mine are to sit, one at your right hand and one at your left, in your kingdom.” Jesus answered, “You do not know what you are asking. Are you able to drink the chalice that I am to drink?” They said to him, “We are able.” He said to them, “You will drink my chalice, but to sit at my right hand and at my left is not mine to grant, but it is for those for whom it has been prepared by my Father.” And when the ten heard it, they were indignant at the two brothers. But Jesus called them to him and said, “You know that the rulers of the Gentiles lord it over them, and their great ones exercise authority over them. It shall not be so among you. But whoever would be great among you must be your servant, and whoever would be first among you must be your slave, even as the Son of Man came not to be served but to serve, and to give his life as a ransom for many.”
The Gospel of the Lord.

July 25th : Responsorial Psalm Psalm 126:1–2ab, 2cd–3, 4–5, 6 (R. see 5)

 July 25th : Responsorial Psalm

Psalm 126:1–2ab, 2cd–3, 4–5, 6 (R. see 5)
Response : Those who are sowing in tears will sing when they reap.
When the Lord brought back the exiles of Sion, we thought we were dreaming. Then was our mouth filled with laughter; on our tongues, songs of joy.
R.: Those who are sowing in tears will sing when they reap
Then the nations themselves said, “What great deeds the Lord worked for them!” What great deeds the Lord worked for us! Indeed, we were glad.
R.: Those who are sowing in tears will sing when they reap
Bring back our exiles, O Lord, as streams in the south. Those who are sowing in tears will sing when they reap.
R.: Those who are sowing in tears will sing when they reap
They go out, they go out, full of tears, bearing seed for the sowing; they come back, they come back with a song, bearing their sheaves.
R.: Those who are sowing in tears will sing when they reap
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I chose you and appointed you that you should go and bear fruit and that your fruit should abide, says the Lord.
R. Alleluia.

July 25th : First reading Such an overwhelming power comes from God and not from us. A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15

 July 25th : First reading

Such an overwhelming power comes from God and not from us.
A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15
Brethren: We have this treasure in jars of clay, to show that the surpassing power belongs to God and not to us. We are afflicted in every way, but not crushed; perplexed, but not driven to despair; persecuted, but not forsaken; struck down, but not destroyed; always carrying in the body the death of Jesus, so that the life of Jesus may also be manifested in our bodies. For we who live are always being given over to death for Jesus’ sake, so that the life of Jesus also may be manifested in our mortal flesh. So death is at work in us, but life in you. Since we have the same spirit of faith according to what has been written, “I believed, and so I spoke”, we also believe, and so we also speak, knowing that he who raised the Lord Jesus will raise us also with Jesus and bring us with you into his presence. For it is all for your sake, so that as grace extends to more and more people it may increase thanksgiving, to the glory of God.
The Word of the Lord

வியாழன், 23 ஜூலை, 2026

July 24th : Gospel The man who hears the word and understands it yields a rich harvest. A Reading from the Holy Gospel according to St.Matthew 13:18-23

 July 24th : Gospel

The man who hears the word and understands it yields a rich harvest.
A Reading from the Holy Gospel according to St.Matthew 13:18-23
At that time: Jesus said to his disciples, “Hear then the parable of the sower: When anyone hears the word of the kingdom and does not understand it, the evil one comes and snatches away what has been sown in his heart. This is what was sown along the path. As for what was sown on rocky ground, this is the one who hears the word and immediately receives it with joy, yet he has no root in himself, but endures for a while, and when tribulation or persecution arises on account of the word, immediately he falls away. As for what was sown among thorns, this is the one who hears the word, but the cares of the world and the deceitfulness of riches choke the word, and it proves unfruitful. As for what was sown on good soil, this is the one who hears the word and understands it. He indeed bears fruit and yields, in one case a hundredfold, in another sixty, and in another thirty.”
The Gospel of the Lord.

July 24th : Responsorial Psalm Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d) Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

 July 24th : Responsorial Psalm

Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d)
Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.
“Hear the word of the Lord, O nations, and declare it in the coastlands far away; say, ‘He who scattered Israel will gather him, and will keep him as a shepherd keeps his flock.
R. : The Lord will keep us, as a shepherd keeps his flock.
For the Lord has ransomed Jacob and has redeemed him from hands too strong for him. They shall come and sing aloud on the height of Sion, and they shall be radiant over the goodness of the Lord.
R.: The Lord will keep us, as a shepherd keeps his flock.
Then shall the young women rejoice in the dance, and the young men and the old shall be merry. I will turn their mourning into joy; I will comfort them, and give them gladness for sorrow.
R.: The Lord will keep us, as a shepherd keeps his flock.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Blessed are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bear fruit with patience.
R. Alleluia.

July 24th : First reading Come back, my disloyal children. A Reading frim the book of the Prophet Jeremiah 3:14-17

 July 24th : First reading

Come back, my disloyal children.
A Reading frim the book of the Prophet Jeremiah 3:14-17
Return, O faithless children, declares the Lord; for I am your master; I will take you, one from a city and two from a family, and I will bring you to Sion. “‘And I will give you shepherds after my own heart, who will feed you with knowledge and understanding. And when you have multiplied and been fruitful in the land, in those days, declares the Lord, they shall no more say, “The ark of the covenant of the Lord.” It shall not come to mind or be remembered or missed; it shall not be made again. At that time Jerusalem shall be called the throne of the Lord, and all nations shall gather to it, to the presence of the Lord in Jerusalem, and they shall no more stubbornly follow their own evil heart.
The Word of the Lord

ஜூலை 24 : நற்செய்தி வாசகம் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23

 ஜூலை 24 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23

அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.
பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு