இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 7 செப்டம்பர், 2026

செப்டம்பர் 8 : பதிலுரைப் பாடல் திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a) பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

 செப்டம்பர் 8 : பதிலுரைப் பாடல்

திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)
பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

5
நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். - பல்லவி
6
நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!
புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

செப்டம்பர் 8 : தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா முதல் வாசகம் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

 செப்டம்பர் 8 : தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

முதல் வாசகம்
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

ஆண்டவர் கூறுவது:
நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

 செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 7 : பதிலுரைப் பாடல் திபா 5: 4-5a. 5b-6. 11 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

 செப்டம்பர் 7 : பதிலுரைப் பாடல்

திபா 5: 4-5a. 5b-6. 11 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

4
நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5a
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். - பல்லவி
5b
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி
11
ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா!
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா
S

செப்டம்பர் 7 : முதல் வாசகம் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

 செப்டம்பர் 7 : முதல் வாசகம்

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8
சகோதரர் சகோதரிகளே,

உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன். நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.
நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
ஆண்டவரின் அருள்வாக்கு

September 7th : GospelA Reading from the Holy Gospel according to St.Luke 6: 6–11

September 7th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 6–11

On another Sabbath, Jesus entered the synagogue and was teaching, and a man was there whose right hand was withered. And the scribes and the Pharisees watched him, to see whether he would heal on the Sabbath, so that they might find a reason to accuse him. But he knew their thoughts, and he said to the man with the withered hand, “Come and stand here.” And he rose and stood there. And Jesus said to them, “I ask you, is it lawful on the Sabbath to do good or to do harm,to save life or to destroy it?” And after looking around at them all he said to him, “Stretch out your hand.” And he did so, and his hand was restored. But they were filled with fury and discussed with one another what they might do to Jesus.

The Gospel of the Lord.

September 7th : Responsorial PsalmPsalm 5:5–6, 7, 12 (R. 9a)Response : Lead me, Lord, in your justice

September 7th :  Responsorial Psalm

Psalm 5:5–6, 7, 12 (R. 9a)

Response : Lead me, Lord, in your justice.

You are no God who delights in evil; no sinner is your guest. The boastful shall not stand their ground before your eyes. 

R.: Lead me, Lord, in your justice.

All who do evil you despise; all who lie you destroy. The deceitful and those who shed blood, the Lord detests. 

R.: Lead me, Lord, in your justice.

All who take refuge in you shall be glad, and ever cry out their joy. You shelter them; in you they rejoice, those who love your name. 

R.: Lead me, Lord, in your justice.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. My sheep hear my voice, says the Lord; and I know them, and they follow me. 

R. Alleluia.

September 7th : First ReadingA Reading from the first letter of St.Paul to the Corinthians 5: 1–8

September 7th :  First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 5: 1–8

Brethren: It is actually reported that there is sexual immorality among you, and of a kind that is not tolerated even among Gentiles, for a man has his father’s wife. And you are arrogant! Ought you not rather to mourn? Let him who has done this be removed from among you. For though absent in body, I am present in spirit; and as if present, I have already pronounced judgment on the one who did such a thing. When you are assembled in the name of the Lord Jesus and my spirit is present, with the power of our Lord Jesus, you are to deliver this man to Satan for the destruction of the flesh, so that his spirit may be saved in the day of the Lord. Your boasting is not good. Do you not know that a little leaven leavens the whole lump? Cleanse out the old leaven that you may be a new lump, as you really are unleavened. For Christ, our Passover lamb, has been sacrificed. Let us therefore celebrate the festival, not with the old leaven, the leaven of malice and evil, but with the unleavened bread of sincerity and truth.

The Word of the Lord.

சனி, 5 செப்டம்பர், 2026

September 6th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 18: 15–20

September 6th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 18: 15–20

At that time: Jesus said to his disciples, “If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. But if he does not listen, take one or two others along with you, that every charge may be established by the evidence of two or three witnesses. If he refuses to listen to them, tell it to the church. And if he refuses to listen even to the church, let him be to you as a Gentile and a tax collector. Truly, I say to you, whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven. Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven. For where two or three are gathered in my name, there am I among them.”

The Gospel of the Lord.

September 6th : Second ReadingA Reading from the letter of St.Paul to the Romans 13: 8–10

September 6th : Second Reading

A Reading from the letter of St.Paul to the Romans 13: 8–10

Brethren: Owe no one anything, except to love each other, for the one who loves another has fulfilled the law. For the commandments, “You shall not commit adultery, You shall not murder, You shall not steal, You shall not covet”, and any other commandment, are summed up in this word: “You shall love your neighbour as yourself.” Love does no wrong to a neighbour; therefore love is the fulfilling of the law.

The Word of the Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. In Christ, God was reconciling the world to himself, and entrusting to us the message of reconciliation.

R. Alleluia.