இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 11 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 12 : முதல் வாசகம்நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 1-8

பிப்ரவரி 12  : முதல் வாசகம்

நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 1-8

அந்நாள்களில்
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.

பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது; அதைத் தொடவும் கூடாது, மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்” என்றாள். பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.

அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday 📖GOSPEL "He makes the deaf hear and the dumb speak" A Reading from the Holy Gospel according to Mark (7, 31-37)

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday 

📖GOSPEL 

"He makes the deaf hear and the dumb speak" 

A Reading from the Holy Gospel according to  Mark (7, 31-37) 
At that time Jesus left the territory of Tire; Passing by Sidon, he took the direction of the Sea of ​​Galilee and went into full territory of the Decapolis. Some people bring to him a deaf person who also had difficulty speaking, and begged Jesus to lay his hand on him. Jesus led him aside, away from the crowd, put his fingers in his ears, and with his saliva touched his tongue. Then, his eyes raised to heaven, he sighed and said to her: “Effata! ", That is to say:" Open up! Her ears fell open; his tongue loosened, and he spoke correctly. Then Jesus commanded them not to tell anyone about it; but the more he gave them this order, the more they proclaimed it. Extremely struck, they said: "He has done all things well: he makes the deaf hear and the dumb speak. " 

The Gospel of the Lord 

I believe in God, /....

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday RESPONSORIAL Respons: Happy the man whose fault is removed! Psalm 31 (32)

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday 

RESPONSORIAL 

Respons: Happy the man whose fault is removed! 

Psalm 31 (32) 
Blessed is the man whose guilt is taken away
and sin remitted!
Blessed is the man whose offense the Lord does not restrain,
whose mind is without deceit! R 

I said, “I will give thanks to the Lord by confessing my sins. "
And you, you took offense my fault. R 

So each of yours will pray to you at the decisive hours;
even the overflowing waters cannot reach it.
You are a refuge for me, my shelter in distress;
songs of deliverance, you surrounded me. R 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! Lord, open our hearts to keep your Son's words in our minds. Alleluia!``` 

_____________

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday FIRST READING "You will be like gods, knowing good and evil" from the book of Genesis (3, 1-8)

FEBRUARY 12, 2021 General Week 5 - Friday 

FIRST READING 

"You will be like gods, knowing good and evil" 

from the book of Genesis (3, 1-8) 
The serpent was the most cunning of all the field animals that the Lord God had made. He said to the woman, “So God really said to you, 'You shall not eat of any tree in the garden'? The woman replied to the serpent: "We are eating the fruits of the trees in the garden. But, for the fruit of the tree that's in the middle of the garden, God said, “You shall not eat of it, nor touch it, or you will die.” The snake said to the woman, "Not at all!" You will not die! But God knows that the day you eat it, your eyes will be opened, and you will be like gods, knowing good and evil. The woman noticed that the fruit of the tree must be tasty, that it was pleasant to look at and that it was desirable, this tree, since it gave intelligence. She took of its fruit, and ate it. She also gave it to her husband, and he ate it. Then both of their eyes opened and they realized they were naked. They tied fig leaves together, and made loincloths out of them. They heard the voice of the Lord God walking through the garden in the breeze of the day. The man and his wife went and hid themselves from the sight of the Lord God among the trees in the garden. 

The Word of the Lord. 

__________

புதன், 10 பிப்ரவரி, 2021

11 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - வியாழன் நற்செய்தி வாசகம் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே! மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

11 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - வியாழன் 

நற்செய்தி வாசகம் 

சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே! 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30 
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, ``முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார். அதற்கு அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ``நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பிப்ரவரி 11 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!

பிப்ரவரி 11  :  பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 21

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

பிப்ரவரி 11 : முதல் வாசகம்இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25

பிப்ரவரி 11  :   முதல் வாசகம்

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25

அந்நாள்களில்
ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY 📖GOSPEL “The little dogs, under the table, eat little children's crumbs well! " A Reading from the Holy Gospel according to Mark (7, 24-30)

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY 

📖GOSPEL 

“The little dogs, under the table, eat little children's crumbs well! " 

A Reading from the Holy Gospel according to  Mark (7, 24-30) 
At that time Jesus left and came to the territory of Tire. He had entered a house, and he did not want anyone to know it, but he could not remain unnoticed: a woman immediately heard about him; she had a little daughter possessed by an unclean spirit; she came and threw herself at his feet. This woman was pagan, Syro-Phoenician by birth, and she asked her to expel the demon out of her daughter. He said to her: "First let the children get their fill, for it is not good to take the children's bread and throw it to the little dogs." "But she replied:" Lord, the little dogs, under the table, eat little children's crumbs well! "Then he said to her:" Because of this word, go: the demon has gone out of your daughter. She came home, and found the child lying on the bed: 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

_______________

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY RESPONSORIAL Respons: Blessed are those who fear the Lord! Psalm 127 (128)

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY 

RESPONSORIAL 

Respons: Blessed are those who fear the Lord! 

Psalm 127 (128) 
Blessed are those who fear the Lord
and walk in his ways!
You will nourish yourself with the work of your hands:
Happy are you! To you, happiness! R 

Your wife will be in your house
like a bountiful vine,
and your sons around the table
like olive plants. R 

This is how a
man who fears the Lord will be blessed .
From Zion, the Lord bless you!
You will see the happiness of Jerusalem every day of your life. R
____ 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! Get rid of the evil that is in you and humbly accept the word that is planted in your heart. That alone can save you. Alleluia!``` 

_____________

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY FIRST READING “God brought the woman to the man. And both will become one » "from the book of Genesis (2, 18-25)

FEBRUARY 11, 2021 General Week 5 - THURSDAY 

FIRST READING 

“God brought the woman to the man. And both will become one » 

"from the book of Genesis (2, 18-25) 
The Lord God said, “It is not good that a man is alone. I will give him a helper that will suit him. With earth, the Lord God molded all the beasts of the field and all the birds of the air, and he brought them to man to see what names he would give them. They were living things, and the man named each one. The man therefore gave their names to all the animals, to the birds of the air and to all the beasts of the field. But he couldn't find any suitable help. Then the Lord God caused a mysterious sleep to fall on him, and the man fell asleep. The Lord God took one of his ribs, then he closed the flesh in its place. With the rib he had taken from the man, he fashioned a woman and brought her to the man. The man then said: "This time, here is the bone of my bones and the flesh of my flesh!" She will be called woman - Ishsha - she who was taken from man - Ish. Because of this, the man will leave his father and his mother, he will become attached to his wife, and the two will become one. 
Both the man and his wife were naked, and they felt no shame in each other. 

The Word of the Lord 

__________