இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 9 மார்ச், 2021

மார்ச் 10 : முதல் வாசகம்நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9

மார்ச் 10  :   முதல் வாசகம்

நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10 March 2021, Wednesday 📖GOSPEL "Whoever observes them and teaches them, that one will be declared great" A Reading From The Holy Gospel According To Matthew (5, 17-19)

10 March 2021, Wednesday 

📖GOSPEL 

"Whoever observes them and teaches them, that one will be declared great" 

A Reading From The Holy Gospel According To Matthew (5, 17-19) 
At that time, Jesus said to his disciples: “Do not think that I have come to abolish the Law or the Prophets: I have not come to abolish, but to fulfill. Amen, I say to you: Before heaven and earth disappear, not a single iota, not a single stroke will disappear from the Law until it all comes true. So whoever rejects one of these smaller commandments, and teaches men to do so, will be declared the least in the kingdom of Heaven. But whoever observes them and teaches them, that one will be declared great in the kingdom of Heaven. " 

I believe in God, /...

10 March 2021, Wednesday RESPONSORIAL Respons: Glorify the Lord, Jerusalem! Celebrate your God, O Zion! Psalm 147 (147B)

10 March 2021, Wednesday 

RESPONSORIAL 

Respons: Glorify the Lord, Jerusalem! Celebrate your God, O Zion! 

Psalm 147 (147B) 
Glorify the Lord, Jerusalem!
Celebrate your God, O Zion!
He has strengthened the bars of your gates;
in your walls he has blessed your children. R 

He sends his word to the earth:
fast, his word travels through it.
He spreads a fleece of snow,
he sows a dust of frost. R 

He reveals his word to Jacob,
his will and his laws to Israel.
Not a people he has treated like this;
no one else knew his wishes. R 

_______ 

🌿Gospel Acclamation 

Joh 6: 63b, 68b 

Lord! The words you say give life-giving spirit; Provide sustainability. 

_____________

10 March 2021, Wednesday FIRST READING "You will keep my decrees, you will put them into practice" Reading from the book of Deuteronomy (4, 1.5-9)

10 March 2021, Wednesday 

FIRST READING 

"You will keep my decrees, you will put them into practice" 

Reading from the book of Deuteronomy (4, 1.5-9) 
Moses was saying to the people, “Now, Israel, listen to the decrees and ordinances that I am teaching you so that you may put them into practice. So you will live, you will enter to take possession of it in the land which the Lord, the God of your fathers, has given you. See, I am teaching you the decrees and ordinances that the Lord my God has given me for you, so that you may put them into practice in the land where you are going to enter to take possession of them. You will keep them, you will put them into practice; they will be your wisdom and intelligence in the eyes of all peoples. When they hear about all these decrees, they will cry out: “There is not a wise and intelligent people like this great nation! What is indeed the great nation whose gods are as near as the Lord our God is near to us every time we call upon him? And what great nation is there whose decrees and ordinances are as righteous as all this Law that I am giving you today? But take care: take care never to forget what your eyes have seen; don't let it go out of your heart for a single day. Teach it to your sons, and to your sons' sons. " 

The Word of the Lord.
__________

திங்கள், 8 மார்ச், 2021

மார்ச் 9 : நற்செய்தி வாசகம்உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

மார்ச் 9 :   நற்செய்தி வாசகம்

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35
அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------

மார்ச் 9 : பதிலுரைப் பாடல்திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 6a)பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.

மார்ச் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

"இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்," என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 9 : முதல் வாசகம்நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19

மார்ச் 9 :  முதல் வாசகம்

நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19
அந்நாள்களில்

அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.

ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

09 March 2021, Tuesday 📖GOSPEL "This is how my heavenly Father will treat you, if each of you does not forgive your brother" A Reading From The Holy Gospel According To Matthew (18, 21-35)

09 March 2021, Tuesday 

📖GOSPEL 

"This is how my heavenly Father will treat you, if each of you does not forgive your brother" 

A Reading From The Holy Gospel According To Matthew (18, 21-35) 
At that time, Peter approached Jesus to ask him: “Lord, when my brother commits sins against me, how many times must I forgive him? Up to seven times? "Jesus answered him:" I do not tell you up to seven times, but up to 70 times seven times. Thus, the kingdom of Heaven is comparable to a king who wanted to settle accounts with his servants. He was beginning when someone brought him someone who owed him ten thousand talents (that is, sixty million pieces of silver). As this man did not have enough to repay, the master ordered to sell him, with his wife, his children and all his goods, in repayment of his debt. Then, falling at his feet, the servant remained prostrate and said: "Be patient with me, and I will repay you for everything." Seized with compassion,
But, on leaving, this servant found one of his companions who owed him a hundred pieces of silver. He threw himself on him to strangle him, saying: “Pay off your debt!” Then, falling at his feet, his companion begged him: "Be patient with me, and I will reimburse you." But the other refused and had him thrown in jail until he paid back what he owed. His companions, seeing this, were deeply saddened and went to tell their master all that had happened. So the latter called him and said to him: “Evil servant! I forgave you all this debt because you begged me. Should you not, in your turn, have pity on your companion, as I myself had had pity on you? ” In his anger, his master handed him over to the executioners until he had repaid all he owed.
This is how my heavenly Father will treat you, if each of you does not forgive your brother from the bottom of your heart. " 

I believe in God,

09 March 2021, Tuesday RESPONSORIAL Respons: Remember, Lord, your tenderness. Psalm 24 (25)

09 March 2021, Tuesday 

RESPONSORIAL 

Respons: Remember, Lord, your tenderness. 

Psalm 24 (25) 
Lord, teach me your ways,
let me know your way.
Guide me through your truth, teach me,
for you are the God who saves me. R 

Remember, Lord, your tenderness,
your love that is forever.
In your love, do not forget me,
because of your goodness, Lord. R 

The Lord is righteous, he is good,
he who shows sinners the way.
His righteousness directs the humble,
he teaches the humble his way. R
_______

🌿Gospel Acclamation 

Joel 2: 12-13 

"Come back to me now with all your heart, for I am gracious and merciful," says the Lord. 

_____________

09 March 2021, Tuesday FIRST READING "With our hearts broken, our minds humiliated, receive us" Reading from the book of the prophet Daniel (3, 25.34-43)

09 March 2021, Tuesday 

FIRST READING 

"With our hearts broken, our minds humiliated, receive us" 

Reading from the book of the prophet Daniel (3, 25.34-43) 
In those days, Azarias, standing, prayed thus; in the midst of the fire, opening his mouth, he said: "For the sake of your name, do not surrender to us forever, and do not break your covenant. Do not take away your mercy from us, because of Abraham your friend, Isaac your servant, and Israel whom you have consecrated. You said that you would make their descendants as numerous as the stars of the sky, as the sand on the shore of the seas.
Now here we are, O Master, the fewest of all peoples, humbled today over all the earth, because of our sins. At this time, there is no longer any prince or chief or prophet, no more holocaust or sacrifice, no more oblation or incense offering, no more place to offer you our firstfruits to obtain your mercy. . But, with our hearts broken, our minds humbled, receive us, like a burnt offering of rams, bulls, fat lambs by the thousands. May our sacrifice on this day find favor before you, for there is no shame for those who hope in you.
And now, with all our hearts, we follow you, we fear you and we seek your face. Do not leave us ashamed, deal with us according to your indulgence and the abundance of your mercy. Deliver us by renewing your wonders, glorify your name, Lord. " 

The Word of the Lord.
__________