இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 10 மார்ச், 2021

மார்ச் 11 : முதல் வாசகம்தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28ஆண்டவர் கூறியது:

மார்ச் 11   :  முதல் வாசகம்

தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது:
நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

11 March 2021, Thursday 📖GOSPEL "Whoever is not with me is against me" A Reading From The Holy Gospel According To Luke (11, 14-23)

11 March 2021, Thursday 

📖GOSPEL 

"Whoever is not with me is against me" 

A Reading From The Holy Gospel According To Luke (11, 14-23) 
At that time, Jesus was casting out a demon that made a man dumb. When the demon was out, the mute began to speak, and the crowds were in awe. But some of them said: "It is by Beelzebub, the leader of the demons, that he expels the demons. Others, in order to test him, sought to obtain a sign from him from heaven. Jesus, knowing their thoughts, said to them: “Every kingdom divided against itself becomes desert, its houses crumble on top of each other. If Satan, too, is divided against himself, how will his kingdom stand? You say indeed that it is by Béelzéboul that I expel the demons. But if it is by Beelzebub that I expel them, your disciples, by whom do they expel them? From then on, they will themselves be your judges. On the other hand, if it is by the finger of God that I expel demons, then the kingdom of God has come to you. When the strong, well-armed man guards his palace, all that belongs to him is safe. But if a stronger one comes along and triumphs over him, he takes away his armament, which he trusted, and he distributes all that he has robbed him of. He who is not with me is against me; he who does not gather with me scatters. " he who does not gather with me scatters. " he who does not gather with me scatters. " 

I believe in God, /...

11 March 2021, Thursday RESPONSORIAL Respons: Today do not close your heart, but listen to the voice of the Lord. Psalm 94 (95)

11 March 2021, Thursday 

RESPONSORIAL 

Respons: Today do not close your heart, but listen to the voice of the Lord. 

Psalm 94 (95) 
Come, let us shout for joy to the Lord,
let us acclaim our Rock, our salvation!
Let us go to him by giving thanks,
by our festive hymns let us acclaim him! R 

Come in, bow down, bow down,
worship the Lord who made us.
Yes, he is our God;
we are the people he leads. R 

Today will you listen to his word?
“Do not close your heart as in the desert,
as in the day of temptation and challenge,
when your fathers tempted and challenged me. "R

_______ 

🌿Gospel Acclamation 

Joel 2: 12-13 

'Come back to me with all your heart now. For I am gracious and merciful, saith the Lord. 

_____________

11 March 2021, Thursday FIRST READING "This is the nation that did not listen to the voice of the Lord his God" Reading from the book of the prophet Jeremiah (7, 23-28)

11 March 2021, Thursday 

FIRST READING 

"This is the nation that did not listen to the voice of the Lord his God" 

Reading from the book of the prophet Jeremiah (7, 23-28) 
Thus says the Lord: This is the command I gave to your fathers: “Hear my voice, I will be your God, and you will be my people; you will follow all the paths that I have prescribed for you, so that you may be happy. But they did not listen, they did not listen, they followed the evil inclinations of their hardened hearts; they turned their backs and not their faces. From the day that your fathers left the land of Egypt until this day, I have tirelessly sent all my servants the prophets to you. But they didn't listen to me, they didn't listen, they stiffened their necks, they were worse than their fathers. You will say all these words to them, and they will not listen to you. You will call them, and they will not answer you. So you will tell them: “This is the nation that did not listen to the voice of the Lord their God, and did not accept a lesson! The truth has been lost, it has disappeared from their mouths. " 

The Word of the Lord.
__________

செவ்வாய், 9 மார்ச், 2021

மார்ச் 10 : நற்செய்தி வாசகம்கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

மார்ச் 10  :  நற்செய்தி வாசகம்

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு..

மார்ச் 10 : பதிலுரைப் பாடல்திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.

மார்ச் 10  :  பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
16
அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b

ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

மார்ச் 10 : முதல் வாசகம்நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9

மார்ச் 10  :   முதல் வாசகம்

நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10 March 2021, Wednesday 📖GOSPEL "Whoever observes them and teaches them, that one will be declared great" A Reading From The Holy Gospel According To Matthew (5, 17-19)

10 March 2021, Wednesday 

📖GOSPEL 

"Whoever observes them and teaches them, that one will be declared great" 

A Reading From The Holy Gospel According To Matthew (5, 17-19) 
At that time, Jesus said to his disciples: “Do not think that I have come to abolish the Law or the Prophets: I have not come to abolish, but to fulfill. Amen, I say to you: Before heaven and earth disappear, not a single iota, not a single stroke will disappear from the Law until it all comes true. So whoever rejects one of these smaller commandments, and teaches men to do so, will be declared the least in the kingdom of Heaven. But whoever observes them and teaches them, that one will be declared great in the kingdom of Heaven. " 

I believe in God, /...

10 March 2021, Wednesday RESPONSORIAL Respons: Glorify the Lord, Jerusalem! Celebrate your God, O Zion! Psalm 147 (147B)

10 March 2021, Wednesday 

RESPONSORIAL 

Respons: Glorify the Lord, Jerusalem! Celebrate your God, O Zion! 

Psalm 147 (147B) 
Glorify the Lord, Jerusalem!
Celebrate your God, O Zion!
He has strengthened the bars of your gates;
in your walls he has blessed your children. R 

He sends his word to the earth:
fast, his word travels through it.
He spreads a fleece of snow,
he sows a dust of frost. R 

He reveals his word to Jacob,
his will and his laws to Israel.
Not a people he has treated like this;
no one else knew his wishes. R 

_______ 

🌿Gospel Acclamation 

Joh 6: 63b, 68b 

Lord! The words you say give life-giving spirit; Provide sustainability. 

_____________

10 March 2021, Wednesday FIRST READING "You will keep my decrees, you will put them into practice" Reading from the book of Deuteronomy (4, 1.5-9)

10 March 2021, Wednesday 

FIRST READING 

"You will keep my decrees, you will put them into practice" 

Reading from the book of Deuteronomy (4, 1.5-9) 
Moses was saying to the people, “Now, Israel, listen to the decrees and ordinances that I am teaching you so that you may put them into practice. So you will live, you will enter to take possession of it in the land which the Lord, the God of your fathers, has given you. See, I am teaching you the decrees and ordinances that the Lord my God has given me for you, so that you may put them into practice in the land where you are going to enter to take possession of them. You will keep them, you will put them into practice; they will be your wisdom and intelligence in the eyes of all peoples. When they hear about all these decrees, they will cry out: “There is not a wise and intelligent people like this great nation! What is indeed the great nation whose gods are as near as the Lord our God is near to us every time we call upon him? And what great nation is there whose decrees and ordinances are as righteous as all this Law that I am giving you today? But take care: take care never to forget what your eyes have seen; don't let it go out of your heart for a single day. Teach it to your sons, and to your sons' sons. " 

The Word of the Lord.
__________