இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 15 மார்ச், 2021

16 March 2021, Tuesday FIRST READING I saw the water that gushed out of the Temple: all those it touched were saved Reading from the book of the prophet Ezekiel (47, 1-9.12)

16 March 2021, Tuesday 

FIRST READING 

I saw the water that gushed out of the Temple: all those it touched were saved 

Reading from the book of the prophet Ezekiel (47, 1-9.12) 
In those days, during a vision received from the Lord, the man brought me back to the entrance of the House, and behold, under the threshold of the House water was gushing towards the east, since the facade of the House was on the east side.
The water was coming down from under the right side of the House, south of the altar. The man took me out the north door and walked me around the outside, to the east door, and again the water was flowing on the right side. The man went eastward, a line in his hand, and he measured a distance of a thousand cubits; then he made me cross the water: I was up to my ankles. He measured another thousand cubits and made me cross the water: I was up to my knees. He measured another thousand cubits and took me across: I was up to my kidneys. He measured a thousand more: it was a torrent that I could not cross; the water had swelled, it would have been necessary to swim: it was an impassable torrent. So he said to me: "Have you seen, son of man? Then he led me back to the edge of the stream. When he brought me back
He said to me: “This water flows towards the region of the East, it goes down into the Jordan Valley, and flows into the Dead Sea, whose waters it cleanses. In any place where the torrent arrives, all the animals will be able to live and flourish. The fish will be very abundant, for this water cleanses everything it enters, and life appears wherever the torrent arrives. At the edge of the torrent, on both banks, all kinds of fruit trees will grow; their foliage will not wither and their fruit will not fail. Each month they will bear new fruit, for this water comes from the sanctuary. The fruits will be food, and the leaves will be medicine. " 

The Word of the Lord.
__________

ஞாயிறு, 14 மார்ச், 2021

மார்ச் 15: நற்செய்தி வாசகம்நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

மார்ச் 15: 
நற்செய்தி வாசகம்

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில்

இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 15:பதிலுரைப் பாடல்திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

மார்ச் 15:
பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்

மார்ச் 15:தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்முதல் வாசகம்இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

மார்ச் 15:
தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
முதல் வாசகம்

இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

ஆண்டவர் கூறுவது:
இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

15 March 2021, Monday 📖GOSPEL "Go, your son is alive" A Reading From The Holy Gospel According To John (4, 43-54)

15 March 2021, Monday 

📖GOSPEL 

"Go, your son is alive" 

A Reading From The Holy Gospel According To John (4, 43-54) 
At that time, after spending two days with the Samaritans, Jesus left there for Galilee. - He himself had testified that a prophet is not considered in his own country. So he came to Galilee; the Galileans welcomed him, for they had seen all that he had done in Jerusalem during the Passover feast, since they too had been to that feast. So Jesus returned to Cana in Galilee, where he had turned the water into wine. Now, there was a royal official, whose son was ill in Capernaum. Having heard that Jesus was coming from Judea to Galilee, he went to find him; he asked him to go down to Capernaum to heal his son who was dying. Jesus said to her, “If you do not see signs and wonders, then you will not believe! "The royal official said to him:" Lord, come down, before my child dies! "Jesus answered him:" Go, your son is alive. The man believed the word Jesus had spoken to him and left. As he was going down, his servants came to meet him and told him that his child was alive. He wanted to know what time he was better off. They said to him: “It was yesterday at the seventh hour (early afternoon) that the fever left him. "The father realized that it was just the hour when Jesus had said to him:" Your son is alive. So he and all the people in his household believed. He wanted to know what time he was better off. They said to him: “It was yesterday at the seventh hour (early afternoon) that the fever left him. "The father realized that it was just the hour when Jesus had said to him:" Your son is alive. So he and all the people in his household believed. He wanted to know what time he was better off. They said to him: “It was yesterday at the seventh hour (early afternoon) that the fever left him. "The father realized that it was just the hour when Jesus had said to him:" Your son is alive. So he and all the people in his household believed.
This was the second sign Jesus performed when he returned from Judea to Galilee. 

I believe in God, /....

15 March 2021, Monday RESPONSORIAL Respons: I exalt you, Lord: you lifted me up. Psalm 29 (30)

15 March 2021, Monday 

RESPONSORIAL 

Respons: I exalt you, Lord: you lifted me up. 

Psalm 29 (30) 
I exalt you, Lord: you lifted me up.
When I cried out to you, Lord.
Lord, you brought me up from the abyss
and come alive when I came down to the pit. R 

Praise the Lord, you, his faithful,
give thanks by remembering his most holy name.
His anger lasts only a moment, his kindness, all life;
with the evening, come the tears, but in the morning, the cries of joy. R 

And I cried out to you, Lord,
I begged my God.
You turned my mourning into a dance.
May I, Lord, my God, endlessly give you thanks! R
___ 

🌿Gospel Acclamation 

Amos 5:14 

Seek good, do not seek evil; Then the Lord God of hosts will be with you.
_____________

15 March 2021, Monday FIRST READING "We will no longer hear crying or screaming" Reading from the book of the prophet Isaiah (65, 17-21)

15 March 2021, Monday 

FIRST READING 

"We will no longer hear crying or screaming" 

Reading from the book of the prophet Isaiah (65, 17-21) 
Thus says the Lord: Yes, behold: I am going to create a new heaven and a new earth, the past will no longer be remembered, it will never come to mind. Rather be in joy, exult endlessly for what I am creating. For I am going to recreate Jerusalem, so that it may be exultation, and that its people may become joy. I will exult in Jerusalem, I will find my joy in my people. We won't hear any more weeping or screaming. There, no more infant carried away in a few days, nor any man who does not reach the end of his old age; the youngest will die a hundred years old, not reaching a hundred years will be a curse. We will build houses, we will live there; vines will be planted and their fruit will be eaten. 

The Word of the Lord.
__________

சனி, 13 மார்ச், 2021

மார்ச் 14 : நற்செய்தி வாசகம்தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 14-21

மார்ச் 14 : நற்செய்தி வாசகம்

தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 14-21
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமுக்குக் கூறியது: “பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------

மார்ச் 14 : இரண்டாம் வாசகம்குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-10

மார்ச் 14 : இரண்டாம் வாசகம்

குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-10
சகோதரர் சகோதரிகளே,

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப் பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்.

நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப் பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

மார்ச் 14 : பதிலுரைப் பாடல்திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6a)பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக

மார்ச் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6a)

பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
1
பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். - பல்லவி

3
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். - பல்லவி

4
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! - பல்லவி

6
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! - பல்லவி