இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 4 ஜூன், 2021

ஜூன் 5. : பதிலுரைப் பாடல்தோபி 13: 2. 6. 7. 8 (பல்லவி: 2a)பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!

ஜூன் 5. :  பதிலுரைப் பாடல்

தோபி 13: 2. 6. 7. 8 (பல்லவி: 2a)

பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!
2
என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. - பல்லவி

6
நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார். - பல்லவி

7
உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள்; என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். - பல்லவி

8
நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கம் காட்டுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

ஜூன் 5. : முதல் வாசகம்என்னை அனுப்பினவரிடம் போகிறேன்; நீங்களோ கடவுளைப் போற்றுங்கள்.தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20.

ஜூன் 5. :  முதல் வாசகம்

என்னை அனுப்பினவரிடம் போகிறேன்; நீங்களோ கடவுளைப் போற்றுங்கள்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20.
அந்நாள்களில் 

திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, “மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு” என்றார்.

பின்னர் இரபேலை அழைத்து, “நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக” என்று கூறினார். அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள். “முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். “மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது” என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன். நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காதபோது, நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன். அதே போல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார். நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்.

இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றை எல்லாம் எழுதிவையுங்கள்” என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MASS READINGS, General Week 9 - Saturday , JUNE 05, 2021 📖GOSPEL "This poor widow has put in the Treasury more than all the others" A Reading From The Holy Gospel According To Mark (12, 38-44)

MASS READINGS, General Week 9 - Saturday , JUNE 05, 2021 

📖GOSPEL 

"This poor widow has put in the Treasury more than all the others" 

A Reading From The Holy Gospel According To Mark (12, 38-44) 
At that time, in his teaching, Jesus said: "Beware of the scribes, who make a point of walking around in ceremonial clothes and who like greetings in public places, seats of honor in synagogues, and places of honor at dinners. They devour the goods of widows and, for the sake of appearance, they make long prayers: they will be all the more severely judged. "
Jesus sat in the Temple in front of the treasure room, and watched how the crowd put money there. Many rich people put large sums into it. A poor widow stepped forward and put in two small coins. Jesus called his disciples and said to them: “Truly, I say to you: this poor widow has put in the treasury more than all the others. Because they all took from their superfluity, but she took from her poverty: she put everything she had, everything she had to live on. " 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, General Week 9 - Saturday , JUNE 05, 2021 RESPONSORIAL Respons : Blessed be God, the Living One, forever!

MASS READINGS, General Week 9 - Saturday , JUNE 05, 2021 

RESPONSORIAL 

Respons : 
Blessed be God, the Living One, forever! 
Song Tobias 13, 4, 2, 7, 8abc, 8defg 

It is he who chastises and takes pity,
who brings down to the depths of hell
and withdraws from great perdition:
no one escapes his hand. R 

Look at what he has done for you,
give him thanks!
Bless the Lord of righteousness,
exalt the King of ages! R 

And I, in the land of exile, give him thanks;
I show his greatness and his strength
to the people of sinners. R 

“Return, sinners,
and live before him in righteousness.
Who knows if he won't return
his love and grace to you! "R 

________________ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
Blessed are the poor in heart,
for the kingdom of Heaven is theirs!
Alleluia.

MASS READINGS, JUNE 05, 2021 FIRST READING “And now bless the Lord! Here I am going back to the one who sent me ” A Reading from the book of Tobit (12, 1.5-15.20)

MASS READINGS, JUNE 05, 2021 


FIRST READING 

“And now bless the Lord! Here I am going back to the one who sent me ” 

A Reading from the book of Tobit (12, 1.5-15.20) 
In those days, when the wedding was over, Tobith called his son Tobias and said to him, “My child, consider giving your traveling companion his salary, and add a supplement. Tobith called Raphael and said to him, "Take half of what you brought as wages, and go, be well!" Then the angel took them both aside and said to them, "Bless God and praise him before all living for the good he has done to you." Bless him and sing his name. Announce to all men the actions of God as they deserve, and do not hesitate to celebrate it. While it is good to keep the secrets of a king hidden, it is necessary to reveal the works of God and celebrate them as they deserve. Do good, and evil will not get to you. Better to pray in truth and give alms in righteousness, than to be rich with injustice. Better to give alms than to collect gold. Almsgiving delivers from death and cleanses from all sin. Those who give alms will be filled with life, while the sinner and the unjust are their own enemies. I want to reveal the whole truth to you, without hiding anything from you. I just told you that, if it is good to keep the secrets of a king hidden, it is necessary to reveal the works of God as they deserve. Well ! When you prayed at the same time as Sarra, it was I who presented your prayer before the glory of God, so that he would remember it, and I did the same when you buried the dead. When you did not hesitate to get up, to leave your meal and to go and bury a dead person, it is then that I was sent to you to test you, but God also sent me to heal you, as well as Sarra, your daughter-in-law. I am Raphael, one of the seven angels who stand or present themselves before the glory of the Lord. And now bless the Lord on earth! Celebrate God! Here I am going back to the one who sent me. Write down everything that has happened to you. Then the angel went back to heaven.   

- Word of the Lord.
_________________________________.

ஜூன் 4 : நற்செய்தி வாசகம்மெசியா தாவீதின் மகன்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37.

ஜூன் 4 :   நற்செய்தி வாசகம்

மெசியா தாவீதின் மகன்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37.
அக்காலத்தில்

இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 4 : பதிலுரைப் பாடல்திபா 146: 1-2. 6c-7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.அல்லது: அல்லேலூயா.

ஜூன் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 146: 1-2. 6c-7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.
1
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். - பல்லவி

6c
என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!
7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜுன் 4 : முதல் வாசகம்நீரே என்னைத் தண்டித்தீர், நீரே என்னை மீட்டீர்; இதோ! நான் என் மகனைக் காணப்பெற்றேன்.தோபித்து நூலிலிருந்து வாசகம் 11: 5-17.

ஜுன் 4 :   முதல் வாசகம்

நீரே என்னைத் தண்டித்தீர், நீரே என்னை மீட்டீர்; இதோ! நான் என் மகனைக் காணப்பெற்றேன்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 11: 5-17.
அந்நாள்களில்

அன்னா தம் மகன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், “உம் மகன் வருகிறான்; அவனுடன் சென்றவரும் வருகிறார்” என்றார்.

தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், “உன் தந்தை பார்வை பெறுவது உறுதி. அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார்” என்றார். அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்” என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.

தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார். தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, “கலங்காதீர்கள், அப்பா” என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு, தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார். தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, “என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்” என்றார். “கடவுள் போற்றி. அவரது மாபெரும் பெயர் போற்றி! அவருடைய தூய வானதூதர் அனைவரும் போற்றி! அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக! எல்லா வானதூதரும் என்றென்றும் போற்றி! கடவுள் என்னைத் தண்டித்தார். இப்போதோ என் மகன் தோபியாவை நான் காண்கிறேன்” என்று கடவுளைப் போற்றினார். தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்; தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.

தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்துகொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார். தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். “மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி! மருமகளே, உன் தந்தை வாழ்க! என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழ்த்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக!” என்று வரவேற்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வியாழன், 3 ஜூன், 2021

MASS READINGS, General Week 9 - FRIDAY , JUNE 04, 2021 RESPONSORIAL Respons : Sing, O my soul, the praise of the Lord! Or Hallelujah! Psalm (145 (146), 2.5, 6c-7, 8-9a, 9bc-10),

MASS READINGS, General Week 9 - FRIDAY , JUNE 04, 2021 

RESPONSORIAL 

Respons : 
Sing, O my soul, the praise of the Lord! Or Hallelujah! 

Psalm (145 (146), 2.5, 6c-7, 8-9a, 9bc-10), 
I want to praise the Lord as long as I live,
sing my hymns for my God as long as I last.
Happy is he who leans on the God of Jacob,
who puts his hope in the Lord his God. R 

He keeps his faithfulness forever;
he does justice to the oppressed,
to the hungry, he gives bread;
the Lord looses the chained. R 

The Lord opens the eyes of the blind,
the Lord raises the weighed down,
the Lord loves the righteous,
the Lord protects the stranger. R 

He supports the widow and the fatherless,
he leads astray in the steps of the wicked.
From age to age the Lord will reign:
your God, O Zion, forever! R 

________________ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
If anyone loves me, he will keep my word,
says the Lord;
my Father will love him, and we will come to him.
Alleluia. 

MASS READINGS, General Week 9 - FRIDAY , JUNE 04, 2021 FIRST READING "God hit me, but here I see my son again" A Reading from the book of Tobit (11, 5-17)

MASS READINGS, General Week 9 - FRIDAY , JUNE 04, 2021 

FIRST READING 

"God hit me, but here I see my son again" 

A Reading from the book of Tobit (11, 5-17) 
In those days, Anna sat at the entrance to the courtyard and watched the route her son had taken. She recognized him coming and called out to Tobith, "Here is your son coming back, and also his traveling companion." Raphael said to Tobias, before the latter approached his father: "I am sure his eyes will open. Spread the gall of the fish on them; the remedy will cause the eyes to contract and loosen the whitish veil. Your father will regain his sight and see the light. Anna ran to throw herself on her son's neck and said: "I see you again, my child." Now I can die! And she began to cry. As for Tobith, he got up and stumbled through the entrance to the courtyard. Tobias came to him with the gall of the fish in his hand. He breathed in his eyes, grabbed him and said, "Trust, father!" Then he applied the remedy to her and added more. Then, with both hands, he removed the dandruff from the corner of her eyes. Tobith threw himself on his son's neck and said to him, weeping: "I see you again, my child, you, the light of my eyes!" "And he added:" Blessed be God! Blessed be his great name! Blessed be all his holy angels! May his great name be upon us! Blessed be all the angels for all ages! For God had struck me, but here I see my son Tobias again. Tobias walked into the house, all joyful and blessing God with a loud voice. He told his father that he had had a good trip, that he was bringing back the money and how he had married Sarra, Ragouël's daughter: "Here she comes," he added; it is at the gates of Nineveh. Tobith set out to meet his daughter-in-law at the gates of Nineveh; he was very happy and blessed God. Seeing him walk steadily through town without anyone leading him by the hand, the locals were amazed, and Tobith proclaimed that God had taken pity on him and opened his eyes again. When he arrived near Sarra, the wife of his son Tobias, he blessed her by saying: “Welcome, my daughter! Blessed be your God for bringing you to us! Blessed be your father! Blessed be my son Tobias and blessed be you, my daughter! Welcome to your home, be filled with blessing and joy. Come in, my daughter! That day was a day of joy for the Jews who lived in Nineveh. and Tobith proclaimed that God had taken pity on him and opened his eyes again. When he arrived near Sarra, the wife of his son Tobias, he blessed her by saying: “Welcome, my daughter! Blessed be your God for bringing you to us! Blessed be your father! Blessed be my son Tobias and blessed be you, my daughter! Welcome to your home, be filled with blessing and joy. Come in, my daughter! That day was a day of joy for the Jews who lived in Nineveh. and Tobith proclaimed that God had taken pity on him and opened his eyes again. When he arrived near Sarra, the wife of his son Tobias, he blessed her by saying: “Welcome, my daughter! Blessed be your God for bringing you to us! Blessed be your father! Blessed be my son Tobias and blessed be you, my daughter! Welcome to your home, be filled with blessing and joy. Come in, my daughter! That day was a day of joy for the Jews who lived in Nineveh. Welcome to your home, be filled with blessing and joy. Come in, my daughter! That day was a day of joy for the Jews who lived in Nineveh. Welcome to your home, be filled with blessing and joy. Come in, my daughter! That day was a day of joy for the Jews who lived in Nineveh. 

- Word of the Lord.
_________________________________.