இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

ஆகஸ்ட்  10  : நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 10 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.

ஆகஸ்ட்  10  : பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! 

என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 10 : புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழாமுதல் வாசகம்முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

ஆகஸ்ட்  10 :  புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா

முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10
சகோதரர் சகோதரிகளே,

குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 10th : Gospel If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvest.A Reading from the Holy Gospel according to St.John 12:24-26

August 10th : Gospel 

If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvest.

A Reading from the Holy Gospel according to St.John 12:24-26 
Jesus said to his disciples:
‘I tell you, most solemnly,
unless a wheat grain falls on the ground and dies,
it remains only a single grain;
but if it dies,
it yields a rich harvest.
Anyone who loves his life loses it;
anyone who hates his life in this world
will keep it for the eternal life.
If a man serves me, he must follow me,
wherever I am, my servant will be there too.
If anyone serves me, my Father will honour him.’

The Word of the Lord.

August 9th : Responsorial PsalmPsalm 147:12-15,19-20 O praise the Lord, Jerusalem!

August 9th :  Responsorial Psalm

Psalm 147:12-15,19-20 

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!
O praise the Lord, Jerusalem!
  Zion, praise your God!
He has strengthened the bars of your gates
  he has blessed the children within you.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

He established peace on your borders,
  he feeds you with finest wheat.
He sends out his word to the earth
  and swiftly runs his command.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

He makes his word known to Jacob,
  to Israel his laws and decrees.
He has not dealt thus with other nations;
  he has not taught them his decrees.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

Gospel Acclamation Ps147:12,15
Alleluia, alleluia!

O praise the Lord, Jerusalem!
He sends out his word to the earth.
Alleluia!

August 10th : First ReadingGod loves a cheerful giver.A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 9 :6-10.

August 10th :  First Reading

God loves a cheerful giver.

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 9 :6-10. 
Do not forget: thin sowing means thin reaping; the more you sow, the more you reap. Each one should give what he has decided in his own mind, not grudgingly or because he is made to, for God loves a cheerful giver. And there is no limit to the blessings which God can send you – he will make sure that you will always have all you need for yourselves in every possible circumstance, and still have something to spare for all sorts of good works. As scripture says: He was free in almsgiving, and gave to the poor: his good deeds will never be forgotten.
  The one who provides seed for the sower and bread for food will provide you with all the seed you want and make the harvest of your good deeds a larger one.

The Word of the Lord.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 9 : நற்செய்தி வாசகம்மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27

ஆகஸ்ட் 9 :  நற்செய்தி வாசகம்

மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27.
அக்காலத்தில்

கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார்.

பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.

இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 9 : பதிலுரைப் பாடல்திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)பல்லவி: எருசலேமே! கடவுளாம் ஆண்டவரைப் புகழ்வாயாக!

ஆகஸ்ட் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)

பல்லவி: எருசலேமே! கடவுளாம் ஆண்டவரைப் புகழ்வாயாக!
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா!

 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 9 : முதல் வாசகம்அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 12-22.

ஆகஸ்ட்  9 :  முதல் வாசகம்

அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 12-22.
மோசே மக்களை நோக்கிக் கூறியது:

இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர்மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?

விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன. இருப்பினும், உங்கள் மூதாதையர்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப் பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்கள் இனங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்து கொண்டார்.

ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்தசேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள். அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே. உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Gospel of Jesus Christ according to Saint Matthew 17, 22-27

GOSPEL 

“They will kill him, and on the third day he will be resurrected. The sons are free from taxes ” 
Alleluia. Alleluia.
By proclaiming the Gospel,
God calls you to share in
the glory of our Lord Jesus Christ.
Alleluia. (cf. 2 Th 2:14) 

Gospel of Jesus Christ according to Saint Matthew 17, 22-27 
At that time,
    as Jesus and the disciples were gathered in Galilee,
he said to them:
“The Son of man is going to be delivered into the hands of men;
    they will kill him,
and on the third day he will be resurrected. "
And they were greatly distressed.
    As they reached Capernaum,
those who collect the royalty of the two drachmas for the Temple
came to find Peter and said to him:
“Your master pays the two drachmas well, doesn't he? "
    He replied:
" Yes. "
When Peter came into the house,
Jesus spoke first:
" Simon, what is your opinion?
The kings of the earth,
who do they collect taxes from?
Of their sons, or of other people? "
    Pierre answered him:
" Others. "
And Jesus continued:
" So the sons are free.
    But, so as not to scandalize the people,
go therefore as far as the sea,
cast the hook,
and catch the first fish that will bite;
open your mouth,
and there you will find a four-drachma coin.
Take it, you will give it for me and for yourself. " 

    - Let us acclaim the Word of God.