இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 17 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 18 : முதல் வாசகம்உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26

பிப்ரவரி 18 :  முதல் வாசகம்

உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால், அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? “ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.

எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. உயிர் இல்லாத உடல் போல, செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 18th : Gospel Anyone who loses his life for my sake will save it.A Reading from the Holy Gospel according to St.Mark 8: 34-9:1

February 18th :  Gospel 

Anyone who loses his life for my sake will save it.

A Reading from the Holy Gospel according to St.Mark 8: 34-9:1 
Jesus called the people and his disciples to him and said:
  ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake, and for the sake of the gospel, will save it. What gain, then, is it for a man to win the whole world and ruin his life? And indeed what can a man offer in exchange for his life? For if anyone in this adulterous and sinful generation is ashamed of me and of my words, the Son of Man will also be ashamed of him when he comes in the glory of his Father with the holy angels.’ And he said to them, ‘I tell you solemnly, there are some standing here who will not taste death before they see the kingdom of God come with power.’

The Word of the Lord.

February 18th : Responsorial PsalmPsalm 111(112):1-6 Happy the man who takes delight in the commands of the Lord.

February 18th :  Responsorial Psalm

Psalm 111(112):1-6 

Happy the man who takes delight in the commands of the Lord.
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who takes delight in the commands of the Lord.

Riches and wealth are in his house;
  his justice stands firm for ever.
He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.

Happy the man who takes delight in the commands of the Lord.

The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.
The just man will never waver:
  he will be remembered for ever.

Happy the man who takes delight in the commands of the Lord.

Gospel Acclamation 1Jn2:5
Alleluia, alleluia!
Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

February 18th : First ReadingA body dies without spirit; faith without good works is not aliveJames 2: 14-24, 26

February 18th : First Reading

A body dies without spirit; faith without good works is not alive

James 2: 14-24, 26 
Take the case, my brothers, of someone who has never done a single good act but claims that he has faith. Will that faith save him? If one of the brothers or one of the sisters is in need of clothes and has not enough food to live on, and one of you says to them, ‘I wish you well; keep yourself warm and eat plenty’, without giving them these bare necessities of life, then what good is that? Faith is like that: if good works do not go with it, it is quite dead.
  This is the way to talk to people of that kind: ‘You say you have faith and I have good deeds; I will prove to you that I have faith by showing you my good deeds – now you prove to me that you have faith without any good deeds to show. You believe in the one God – that is creditable enough, but the demons have the same belief, and they tremble with fear. Do realise, you senseless man, that faith without good deeds is useless. You surely know that Abraham our father was justified by his deed, because he offered his son Isaac on the altar? There you see it: faith and deeds were working together; his faith became perfect by what he did. This is what scripture really means when it says: Abraham put his faith in God, and this was counted as making him justified; and that is why he was called ‘the friend of God.’
  You see now that it is by doing something good, and not only by believing, that a man is justified. A body dies when it is separated from the spirit, and in the same way faith is dead if it is separated from good deeds.

The Word of the Lord.

புதன், 16 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 17 : நற்செய்தி வாசகம்`மெசியா'வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

பிப்ரவரி 17 : நற்செய்தி வாசகம்

`மெசியா'வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33
அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 17 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 6a)பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

பிப்ரவரி 17 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 6a)

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

பிப்ரவரி 17 : முதல் வாசகம்ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9

பிப்ரவரி 17 :  முதல் வாசகம்

ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9
என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 17th : Gospel The way you think is not God's way, but man's.A Reading from the Holy Gospel according to St.Mark 8: 27-33

February 17th : Gospel 

The way you think is not God's way, but man's.

A Reading from the Holy Gospel according to St.Mark 8: 27-33 
Jesus and his disciples left for the villages round Caesarea Philippi. On the way he put this question to his disciples, ‘Who do people say I am?’ And they told him. ‘John the Baptist,’ they said ‘others Elijah; others again, one of the prophets.’ ‘But you,’ he asked ‘who do you say I am?’ Peter spoke up and said to him, ‘You are the Christ.’ And he gave them strict orders not to tell anyone about him.
  And he began to teach them that the Son of Man was destined to suffer grievously, to be rejected by the elders and the chief priests and the scribes, and to be put to death, and after three days to rise again; and he said all this quite openly. Then, taking him aside, Peter started to remonstrate with him. But, turning and seeing his disciples, he rebuked Peter and said to him, ‘Get behind me, Satan! Because the way you think is not God’s way but man’s.’

The Word of the Lord.

February 17th : Responsorial PsalmPsalm 33(34):2-7 This poor man called; the Lord heard him.

February 17th : Responsorial Psalm

Psalm 33(34):2-7 

This poor man called; the Lord heard him.
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

This poor man called; the Lord heard him.

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

This poor man called; the Lord heard him.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

This poor man called; the Lord heard him.

Gospel Acclamation James1:18

Alleluia, alleluia!

By his own choice the Father made us his children
by the message of the truth,
so that we should be a sort of first-fruits
of all that he created.
Alleluia!

February 17th : First Reading God chose the poor but you do not respect themJames 2: 1-9

February 17th : First Reading 

God chose the poor but you do not respect them

James 2: 1-9 
My brothers, do not try to combine faith in Jesus Christ, our glorified Lord, with the making of distinctions between classes of people. Now suppose a man comes into your synagogue, beautifully dressed and with a gold ring on, and at the same time a poor man comes in, in shabby clothes, and you take notice of the well-dressed man, and say, ‘Come this way to the best seats’; then you tell the poor man, ‘Stand over there’ or ‘You can sit on the floor by my foot-rest.’ Can’t you see that you have used two different standards in your mind, and turned yourselves into judges, and corrupt judges at that?
  Listen, my dear brothers: it was those who are poor according to the world that God chose, to be rich in faith and to be the heirs to the kingdom which he promised to those who love him. In spite of this, you have no respect for anybody who is poor. Isn’t it always the rich who are against you? Isn’t it always their doing when you are dragged before the court? Aren’t they the ones who insult the honourable name to which you have been dedicated? Well, the right thing to do is to keep the supreme law of scripture: you must love your neighbour as yourself; but as soon as you make distinctions between classes of people, you are committing sin, and under condemnation for breaking the Law.

The Word of the Lord.