இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 25 மே, 2022

மே 26 : முதல் வாசகம்கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

மே 26   :  முதல் வாசகம்

கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8
அந்நாள்களில்

பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், “யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; ‘இயேசுவே மெசியா’ என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, “உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று கூறினார்;

அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 26th : GospelYou will be sorrowful, but your sorrow will turn to joy.A Reading from the Holy Gospel according to St. John 16:16-20

May 26th :  Gospel

You will be sorrowful, but your sorrow will turn to joy.

A Reading from the Holy Gospel according to St. John 16:16-20
Jesus said to his disciples:
‘In a short time you will no longer see me,
and then a short time later you will see me again.’
Then some of his disciples said to one another, ‘What does he mean, “In a short time you will no longer see me, and then a short time later you will see me again” and, “I am going to the Father”? What is this “short time”? We do not know what he means.’ Jesus knew that they wanted to question him, so he said, ‘You are asking one another what I meant by saying: In a short time you will no longer see me, and then a short time later you will see me again.
‘I tell you most solemnly,
you will be weeping and wailing
while the world will rejoice;
you will be sorrowful,
but your sorrow will turn to joy.’

The Gospel of the Lord.

May 26th : Responsorial PsalmPsalm 97(98):1-4The Lord has shown his salvation to the nations.or Alleluia!

May 26th :   Responsorial Psalm

Psalm 97(98):1-4

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!
Sing a new song to the Lord
for he has worked wonders.
His right hand and his holy arm
have brought salvation.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

The Lord has made known his salvation;
has shown his justice to the nations.
He has remembered his truth and love
for the house of Israel.

The Lord has shown his salvation to the nations.
orAlleluia!

All the ends of the earth have seen
the salvation of our God.
Shout to the Lord, all the earth,
ring out your joy.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

Gospel Acclamation Rm6:9

Alleluia, alleluia!
Christ, having been raised from the dead, will never die again.
Death has no power over him any more.
Alleluia

May 26th : First ReadingPaul lodged with them and worked, and held debates in the synagogues.A Reading from the Acts of Apostles 18:1-8.

May 26th :  First Reading

Paul lodged with them and worked, and held debates in the synagogues.

A Reading from the Acts of Apostles 18:1-8.
Paul left Athens and went to Corinth, where he met a Jew called Aquila whose family came from Pontus. He and his wife Priscilla had recently left Italy because an edict of Claudius had expelled all the Jews from Rome. Paul went to visit them, and when he found they were tentmakers, of the same trade as himself, he lodged with them, and they worked together. Every sabbath he used to hold debates in the synagogues, trying to convert Jews as well as Greeks.
After Silas and Timothy had arrived from Macedonia, Paul devoted all his time to preaching, declaring to the Jews that Jesus was the Christ. When they turned against him and started to insult him, he took his cloak and shook it out in front of them, saying, ‘Your blood be on your own heads; from now on I can go to the pagans with a clear conscience.’ Then he left the synagogue and moved to the house next door that belonged to a worshipper of God called Justus. Crispus, president of the synagogue, and his whole household, all became believers in the Lord. A great many Corinthians who had heard him became believers and were baptised.

The Word of the Lord

செவ்வாய், 24 மே, 2022

மே 25 : நற்செய்தி வாசகம்உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

மே 25 :  நற்செய்தி வாசகம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 25 : பதிலுரைப் பாடல்திபா 148: 1-2. 11-12. 13. 14 (பல்லவி: )பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.

மே 25 :  பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-12. 13. 14 (பல்லவி: )

பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
அல்லது: அல்லேலூயா.

1
விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். - பல்லவி

11
உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். - பல்லவி

13
அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. - பல்லவி

14
அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா!

 உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.

மே 25 : முதல் வாசகம்நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1

மே 25 :  முதல் வாசகம்

நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1
அந்நாள்களில்

பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது ‘அறியாத தெய்வத்துக்கு’ என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, ‘நாம் அவருடைய பிள்ளைகளே.’

நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.”

‘இறந்தவர் உயிர்த்தெழுதல்’ என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 25th : Gospel The Spirit of truth will lead you to the complete truthA Reading from the Holy Gospel according to St.John 16: 12-15

May 25th :  Gospel 

The Spirit of truth will lead you to the complete truth

A Reading from the Holy Gospel according to St.John 16: 12-15 
Jesus said to his disciples:
‘I still have many things to say to you
but they would be too much for you now.
But when the Spirit of truth comes
he will lead you to the complete truth,
since he will not be speaking as from himself
but will say only what he has learnt;
and he will tell you of the things to come.
He will glorify me,
since all he tells you
will be taken from what is mine.
Everything the Father has is mine;
that is why I said:
All he tells you
will be taken from what is mine.’

The Word of the Lord.

May 25th : Responsorial PsalmPsalm 148:1-2,11-14 ©Your glory fills all heaven and earth.orAlleluia!

May 25th :  Responsorial Psalm

Psalm 148:1-2,11-14 ©

Your glory fills all heaven and earth.
or
Alleluia!
Praise the Lord from the heavens,
  praise him in the heights.
Praise him, all his angels,
  praise him, all his host.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

All earth’s kings and peoples,
  earth’s princes and rulers,
young men and maidens,
  old men together with children.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

Let them praise the name of the Lord
  for he alone is exalted.
The splendour of his name
  reaches beyond heaven and earth.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

He exalts the strength of his people.
  He is the praise of all his saints,
of the sons of Israel,
  of the people to whom he comes close.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

Gospel Acclamation Col3:1

Alleluia, alleluia!
Since you have been brought back to true life with Christ,
you must look for the things that are in heaven, where Christ is,
sitting at God’s right hand.
Alleluia!

May 25th : First ReadingI proclaim the God you already worship without knowing itA Reading from the Acts of Apostles 17: 15,22-18:1

May 25th :  First Reading

I proclaim the God you already worship without knowing it

A Reading from the Acts of Apostles 17: 15,22-18:1 
Paul’s escort took him as far as Athens, and went back with instructions for Silas and Timothy to rejoin Paul as soon as they could.
  So Paul stood before the whole Council of the Areopagus and made this speech:
  ‘Men of Athens, I have seen for myself how extremely scrupulous you are in all religious matters, because I noticed, as I strolled round admiring your sacred monuments, that you had an altar inscribed: To An Unknown God. Well, the God whom I proclaim is in fact the one whom you already worship without knowing it.
  ‘Since the God who made the world and everything in it is himself Lord of heaven and earth, he does not make his home in shrines made by human hands. Nor is he dependent on anything that human hands can do for him, since he can never be in need of anything; on the contrary, it is he who gives everything – including life and breath – to everyone. From one single stock he not only created the whole human race so that they could occupy the entire earth, but he decreed how long each nation should flourish and what the boundaries of its territory should be. And he did this so that all nations might seek the deity and, by feeling their way towards him, succeed in finding him. Yet in fact he is not far from any of us, since it is in him that we live, and move, and exist, as indeed some of your own writers have said:
“We are all his children.”
‘Since we are the children of God, we have no excuse for thinking that the deity looks like anything in gold, silver or stone that has been carved and designed by a man.
  ‘God overlooked that sort of thing when men were ignorant, but now he is telling everyone everywhere that they must repent, because he has fixed a day when the whole world will be judged, and judged in righteousness, and he has appointed a man to be the judge. And God has publicly proved this by raising this man from the dead.’
  At this mention of rising from the dead, some of them burst out laughing; others said, ‘We would like to hear you talk about this again.’ After that Paul left them, but there were some who attached themselves to him and became believers, among them Dionysius the Areopagite and a woman called Damaris, and others besides.
  After this, Paul left Athens and went to Corinth.

The Word of the Lord.