இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 5 டிசம்பர், 2024

December 6th : First Reading In a very short time, the deaf will hear and the eyes of the blind will seeA Reading from the Book of Isaiah 29:17-24

December 6th :  First Reading 

In a very short time, the deaf will hear and the eyes of the blind will see

A Reading from the Book of Isaiah 29:17-24 
The Lord says this:
In a short time, a very short time,
shall not Lebanon become fertile land
and fertile land turn into forest?
The deaf, that day,
will hear the words of a book
and, after shadow and darkness,
the eyes of the blind will see.
But the lowly will rejoice in the Lord even more
and the poorest exult in the Holy One of Israel;
for tyrants shall be no more, and scoffers vanish,
and all be destroyed who are disposed to do evil:
those who gossip to incriminate others,
those who try at the gate to trip the arbitrator
and get the upright man’s case dismissed for groundless reasons.
Therefore the Lord speaks,
the God of the House of Jacob,
Abraham’s redeemer:
No longer shall Jacob be ashamed,
no more shall his face grow pale,
for he shall see what my hands have done in his midst,
he shall hold my name holy.
They will hallow the Holy One of Jacob,
stand in awe of the God of Israel.
Erring spirits will learn wisdom
and murmurers accept instruction.

The Word of the Lord.

டிசம்பர் 6 : நற்செய்தி வாசகம்இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

டிசம்பர் 6 : நற்செய்தி வாசகம்

இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
அக்காலத்தில்

இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 6 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

டிசம்பர் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

டிசம்பர் 6 : முதல் வாசகம்ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

டிசம்பர் 6 :  முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24
இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 4 டிசம்பர், 2024

December 5th : Gospel The wise man built his house on a rock A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27

 December 5th :  Gospel

The wise man built his house on a rock

A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27 


Jesus said to his disciples: ‘It is not those who say to me, “Lord, Lord,” who will enter the kingdom of heaven, but the person who does the will of my Father in heaven. Therefore, everyone who listens to these words of mine and acts on them will be like a sensible man who built his house on rock. Rain came down, floods rose, gales blew and hurled themselves against that house, and it did not fall: it was founded on rock. But everyone who listens to these words of mine and does not act on them will be like a stupid man who built his house on sand. Rain came down, floods rose, gales blew and struck that house, and it fell; and what a fall it had!’

The Word of the Lord.

December 5th : Responsorial Psalm Psalm 117(118):1,8-9,19-21,25-27

 December 5th :  Responsorial Psalm

Psalm 117(118):1,8-9,19-21,25-27 


Blessed in the name of the Lord is he who comes.

or

Alleluia.

Give thanks to the Lord for he is good,

  for his love has no end.

It is better to take refuge in the Lord

  than to trust in men;

it is better to take refuge in the Lord

  than to trust in princes.

Blessed in the name of the Lord is he who comes.

or

Alleluia.

Open to me the gates of holiness:

  I will enter and give thanks.

This is the Lord’s own gate

  where the just may enter.

I will thank you for you have answered

  and you are my saviour.

Blessed in the name of the Lord is he who comes.

or

Alleluia.

O Lord, grant us salvation;

  O Lord, grant success.

Blessed in the name of the Lord

  is he who comes.

We bless you from the house of the Lord;

  the Lord God is our light.

Blessed in the name of the Lord is he who comes.

or

Alleluia.

Gospel Acclamation Is40:9-10

Alleluia, alleluia!

Shout with a loud voice, joyful messenger to Jerusalem.

Here is the Lord God coming with power.

Alleluia!

December 5th : First reading Open the gates; let the upright nation come in A reading from the book of Isaiah 26:1-6

 December 5th :  First reading 

Open the gates; let the upright nation come in

A reading from the book of Isaiah 26:1-6 


That day, this song will be sung in the land of Judah:

We have a strong city;

to guard us he has set

wall and rampart about us.

Open the gates! Let the upright nation come in,

she, the faithful one

whose mind is steadfast, who keeps the peace,

because she trusts in you.

Trust in the Lord for ever,

for the Lord is the everlasting Rock;

he has brought low those who lived high up

in the steep citadel;

he brings it down, brings it down to the ground,

flings it down in the dust:

the feet of the lowly, the footsteps of the poor

trample on it.

The Word of the Lord.

டிசம்பர் 5 : நற்செய்தி வாசகம் என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27

 டிசம்பர் 5 :  நற்செய்தி வாசகம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 5 : பதிலுரைப் பாடல் திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a) பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

 டிசம்பர் 5 : பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.



அல்லது: அல்லேலூயா.

1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

8

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9

உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! - பல்லவி

19

நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20

ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

25

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!

26

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27a

ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

டிசம்பர் 5 : முதல் வாசகம் மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

 டிசம்பர் 5 :  முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6


நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.