இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 28 ஜூலை, 2026

29 ஜூலை 2026, புதன் பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன் நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய் இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10, 16-21

29 ஜூலை 2026, புதன்

பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன்

நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10, 16-21


நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.

களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர். எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!

எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம். நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு. 

July 29th : Gospel He sells everything he owns and buys the field A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 44-46

 July 29th : Gospel

He sells everything he owns and buys the field
A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 44-46
At that time: Jesus said to the crowds, “The kingdom of heaven is like treasure hidden in a field, which a man found and covered up. Then in his joy he goes and sells all that he has and buys that field. Again, the kingdom of heaven is like a merchant in search of fine pearls, who, on finding one pearl of great value, went and sold all that he had and bought it.”
The Gospel of the Lord

July 29th : Responsorial Psalm Psalm 59:2–3, 4–5a, 10–11, 17, 18 (R. 17d)

 July 29th : Responsorial Psalm

Psalm 59:2–3, 4–5a, 10–11, 17, 18 (R. 17d)
Response : God is my refuge in the day of my distress.
Rescue me from my foes, O God; protect me from those who attack me. O rescue me from those who do evil, and save me from bloodthirsty men.
R.: God is my refuge in the day of my distress.
See, they lie in wait for my life; the strong band together against me. For no offence, no sin of mine, O Lord, for no guilt of mine they rush to take their stand.
R.: God is my refuge in the day of my distress.
O my Strength, for you will I watch, for you, O God, are my stronghold, the God who shows me merciful love. Now God will proceed before me; God will let me look upon my foes.
R.: God is my refuge in the day of my distress.
As for me, I will sing of your strength, and acclaim your mercy in the morning, for you have been my stronghold, a refuge in the day of my distress.
R.: God is my refuge in the day of my distress.
O my Strength, to you I will sing praise, for you, O God, are my stronghold, the God who shows me merciful love.
R.: God is my refuge in the day of my distress.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I have called you friends, says the Lord; for all that I have heard from my Father I have made known to you.
R. Alleluia.

July 29th : First Reading They will not overcome you, because I am with you A Reading from the Book of the Prophet Jeremiah 15: 10,16-21

 July 29th : First Reading

They will not overcome you, because I am with you
A Reading from the Book of the Prophet Jeremiah 15: 10,16-21
Woe is me, my mother, that you bore me, a man of strife and contention to the whole land! I have not lent, nor have I borrowed, yet all of them curse me. Your words were found, and I ate them, and your words became to me a joy and the delight of my heart, for I am called by your name, O Lord, God of hosts. I did not sit in the company of revellers, nor did I rejoice; I sat alone, because your hand was upon me, for you had filled me with indignation. Why is my pain unceasing, my wound incurable, refusing to be healed? Will you be to me like a deceitful brook, like waters that fail? Therefore thus says the Lord: “If you return, I will restore you, and you shall stand before me. If you utter what is precious, and not what is worthless, you shall be as my mouth. They shall turn to you, but you shall not turn to them. And I will make you to this people a fortified wall of bronze; they will fight against you, but they shall not prevail over you, for I am with you to save you and deliver you, declares the Lord. I will deliver you out of the hand of the wicked, and redeem you from the grasp of the ruthless.”
The Word of the Lord.

திங்கள், 27 ஜூலை, 2026

ஜூலை 28 : நற்செய்தி வாசகம் எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

 ஜூலை 28 : நற்செய்தி வாசகம்

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:
“நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 28 : பதிலுரைப் பாடல் திபா 79: 8. 9. 11,13 (பல்லவி: 9c) பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

 ஜூலை 28 : பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11,13 (பல்லவி: 9c)
பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். - பல்லவி
9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி
11
சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.
13
அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா

ஜூலை 28 : முதல் வாசகம் நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

 ஜூலை 28 : முதல் வாசகம்

நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.
நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது!
ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.
வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.
ஆண்டவரின் அருள்வாக்கு

July 28th : Gospel As the darnel is gathered up and burnt, so it will be at the end of time A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 36-43

 July 28th : Gospel

As the darnel is gathered up and burnt, so it will be at the end of time
A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 36-43
At that time: Jesus left the crowds and went into the house. And his disciples came to him, saying, “Explain to us the parable of the weeds of the field.” He answered, “The one who sows the good seed is the Son of Man. The field is the world, and the good seed is the sons of the kingdom. The weeds are the sons of the evil one, and the enemy who sowed them is the devil. The harvest is the end of the age, and the reapers are angels. Just as the weeds are gathered and burned with fire, so will it be at the end of the age. The Son of Man will send his angels, and they will gather out of his kingdom all causes of sin and all lawbreakers, and throw them into the fiery furnace. In that place there will be weeping and gnashing of teeth. Then the righteous will shine like the sun in the kingdom of their Father. He who has ears, let him hear.”
The Gospel of the Lord

July 28th : Responsorial Psalm Psalm 79:8, 9, 11, 13 (R. see 9bc)

 July 28th : Responsorial Psalm

Psalm 79:8, 9, 11, 13 (R. see 9bc)
Response : For the sake of the glory of your name, free us O Lord.
Do not remember against us the guilt of former times. Let your compassion hasten to meet us; for we have been brought very low.
R.: For the sake of the glory of your name, free us O Lord.
Help us, O God our saviour, for the sake of the glory of your name. Free us and forgive us our sins, because of your name.
R.: For the sake of the glory of your name, free us O Lord.
Let the groans of the prisoners come before you, your strong arm reprieve those condemned to die.
R.: For the sake of the glory of your name, free us O Lord.
Then we, your people, the flock of your pasture, will give you thanks forever and ever. From age to age we will recount your praise.
R.: For the sake of the glory of your name, free us O Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. The seed is the word of God, Christ is the sower; all who come to him will live forever.
R. Alleluia.

July 28th : First Reading We confess our wickedness; you, God, are our hope A Reading from the Book of the Prophet Jeremiah 14: 17b -22

 July 28th : First Reading

We confess our wickedness; you, God, are our hope
A Reading from the Book of the Prophet Jeremiah 14: 17b -22
Let my eyes run down with tears night and day, and let them not cease, for the virgin daughter of my people is shattered with a great wound, with a very grievous blow. If I go out into the field, behold, those pierced by the sword! And if I enter the city, behold, the diseases of famine! For both prophet and priest ply their trade through the land and have no knowledge.’” Have you utterly rejected Judah? Does your soul loathe Sion? Why have you struck us down so that there is no healing for us? We looked for peace, but no good came; for a time of healing, but behold, terror. We acknowledge our wickedness, O Lord, and the iniquity of our fathers, for we have sinned against you. Do not spurn us, for your name’s sake; do not dishonour your glorious throne; remember and do not break your covenant with us. Are there any among the false gods of the nations that can bring rain? Or can the heavens give showers? Are you not he, O Lord our God? We set our hope on you, for you do all these things.
The Word of the Lord