இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 22 ஜூலை, 2021

July 23 : GospelMatthew 13:18-23 The man who hears the word and understands it yields a rich harvest

July 23 : Gospel

Matthew 13:18-23 

The man who hears the word and understands it yields a rich harvest
Jesus said to his disciples: ‘You are to hear the parable of the sower. When anyone hears the word of the kingdom without understanding, the evil one comes and carries off what was sown in his heart: this is the man who received the seed on the edge of the path. The one who received it on patches of rock is the man who hears the word and welcomes it at once with joy. But he has no root in him, he does not last; let some trial come, or some persecution on account of the word, and he falls away at once. The one who received the seed in thorns is the man who hears the word, but the worries of this world and the lure of riches choke the word and so he produces nothing. And the one who received the seed in rich soil is the man who hears the word and understands it; he is the one who yields a harvest and produces now a hundredfold, now sixty, now thirty.’

The word of the Lord

Responsorial Psalm – Psalms 19:8, 9, 10, 11R. (John 6:68c) Lord, you have the words of everlasting life.

Responsorial Psalm – Psalms 19:8, 9, 10, 11

R. (John 6:68c) Lord, you have the words of everlasting life.
8 he law of the LORD is perfect,
refreshing the soul;
The decree of the LORD is trustworthy,
giving wisdom to the simple.
R. Lord, you have the words of everlasting life.

9 The precepts of the LORD are right,
rejoicing the heart;
The command of the LORD is clear,
enlightening the eye.
R. Lord, you have the words of everlasting life.

10 The fear of the LORD is pure,
enduring forever;
The ordinances of the LORD are true,
all of them just.
R. Lord, you have the words of everlasting life.

11 They are more precious than gold,
than a heap of purest gold;
Sweeter also than syrup
or honey from the comb.
R. Lord, you have the words of everlasting life.

Alleluia – SEE Luke 8:15

R. Alleluia, alleluia.
15 Blessed are they who have kept the word with a generous heart
and yield a harvest through perseverance.
R. Alleluia, alleluia.

July 23 : First reading Exodus 20:1-17 The Law given at Sinai

July 23 : First reading

 Exodus 20:1-17 ©

The Law given at Sinai
God spoke all these words. He said, ‘I am the Lord your God who brought you out of the land of Egypt, out of the house of slavery.
  ‘You shall have no gods except me.
  ‘You shall not make yourself a carved image or any likeness of anything in heaven or on earth beneath or in the waters under the earth; you shall not bow down to them or serve them. For I, the Lord your God, am a jealous God and I punish the father’s fault in the sons, the grandsons, and the great-grandsons of those who hate me; but I show kindness to thousands of those who love me and keep my commandments.
  ‘You shall not utter the name of the Lord your God to misuse it, for the Lord will not leave unpunished the man who utters his name to misuse it.
  ‘Remember the sabbath day and keep it holy. For six days you shall labour and do all your work, but the seventh day is a sabbath for the Lord your God. You shall do no work that day, neither you nor your son nor your daughter nor your servants, men or women, nor your animals nor the stranger who lives with you. For in six days the Lord made the heavens and the earth and the sea and all that these hold, but on the seventh day he rested; that is why the Lord has blessed the sabbath day and made it sacred.
  ‘Honour your father and your mother so that you may have a long life in the land that the Lord your God has given to you.
  ‘You shall not kill.
  ‘You shall not commit adultery.
  ‘You shall not steal.
  ‘You shall not bear false witness against your neighbour.
  ‘You shall not covet your neighbour’s house. You shall not covet your neighbour’s wife, or his servant, man or woman, or his ox, or his donkey, or anything that is his.’

The word of the Lord

ஜூலை 23 : நற்செய்தி வாசகம்இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23

ஜூலை 23 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.

பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 23 : பதிலுரைப் பாடல்திபா 19: 8. 9. 10. 11 (பல்லவி: யோவா 6: 68)பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

ஜூலை 23 : பதிலுரைப் பாடல்

திபா 19: 8. 9. 10. 11 (பல்லவி: யோவா 6: 68)

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

11
அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

ஜூலை 23 : முதல் வாசகம்மோசே வழியாகத் திருச்சட்டம் அருளப்படுகிறது.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17

ஜூலை 23 : முதல் வாசகம்

மோசே வழியாகத் திருச்சட்டம் அருளப்படுகிறது.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.

பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப் பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்கு உரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 21 ஜூலை, 2021

ஜூலை 22 : நற்செய்தி வாசகம்ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18

ஜூலை 22 :   நற்செய்தி வாசகம்

ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.

இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்’ எனச் சொல்” என்றார்.

மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 22 : பதிலுரைப் பாடல்திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

ஜூலை 22 :  பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

7
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே; உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா.

ஜூலை 22 : புனித மகதலா மரியா விழாமுதல் வாசகம்கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a.

ஜூலை 22 :  புனித மகதலா மரியா விழா

முதல் வாசகம்

கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a.
தலைவியின் கூற்று:

இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! “எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!

ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன். அவர்களை விட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

THURSDAY JULY 22, 2021, General Week 16 📖GOSPEL "Woman, why are you crying? Who are you looking for? " Gospel of Jesus Christ according to Saint John (20, 1. 11-18)

THURSDAY JULY 22, 2021, General Week 16 

📖GOSPEL 

"Woman, why are you crying? Who are you looking for? " 

Gospel of Jesus Christ according to Saint John (20, 1. 11-18) 
Alleluia. Alleluia.
“Tell us, Marie Madeleine,
what did you see on the way?
- I saw the tomb of the living Christ,
I saw the glory of the Risen One. "
Alleluia. 

On the first day of the week, Marie Madeleine goes to the tomb early in the morning; it was still darkness. She notices that the stone has been removed from the tomb. She was standing by the tomb outside, crying. And weeping, she leaned towards the tomb. She sees two angels dressed in white, sitting one at the head and the other at the feet, where the body of Jesus had rested. They ask her: "Woman, why are you crying? "She answers them:" My Lord has been taken away, and I do not know where they have deposited him. Having said that, she turned around; she sees Jesus standing there, but she didn't know it was Jesus. Jesus said to her, “Woman, why are you weeping? Who are you looking for? "Taking him for the gardener, she replies:" If it was you who took it, tell me where you left it, and me, I'll go take it. "Jesus then said to her:" Mary! "Turning around, she said to him in Hebrew:" Rabbuni! », That is to say: Master. Jesus continues: “Do not hold me back, for I have not yet ascended to the Father. Go find my brothers to tell them that I am ascending to my Father and your Father, to my God and your God. Mary Magdalene therefore goes to announce to the disciples: "I have seen the Lord!" And she related what he had told her. “I have seen the Lord! And she related what he had told her. “I have seen the Lord! And she related what he had told her. 

  - Let us acclaim the Word of God.