இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28
அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்இச 32: 35cd-36cd. 39a-d. 41 (பல்லவி: 39c)பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்

இச 32: 35cd-36cd. 39a-d. 41 (பல்லவி: 39c)

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
35cd
அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36cd
ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். - பல்லவி

39a-d
நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்நானே; குணமாக்குபவரும் நானே! - பல்லவி

41
மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழிவாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7
‘வெற்றி! வெற்றி!’ என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான்.

இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர்.

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர்.

அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?’ என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 5th : GospelAnyone who loses his life for my sake will find itA Reading from the Holy Gospel according to St.Matthew 16: 24-28

August 5th :  Gospel

Anyone who loses his life for my sake will find it

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 24-28 
Jesus said to his disciples: ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?
  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour. I tell you solemnly, there are some of these standing here who will not taste death before they see the Son of Man coming with his kingdom.’

The Word of the Lord.

August 5th : Responsorial PsalmDeuteronomy 32:35-36,39,41 ©It is the Lord who deals death and life.

August 5th :  Responsorial Psalm

Deuteronomy 32:35-36,39,41 ©

It is the Lord who deals death and life.
It is close, the day of their ruin;
  their doom comes at speed.
For the Lord will see his people righted,
  he will take pity on his servants.

It is the Lord who deals death and life.

See now that I, I am He,
  and beside me there is no other god.
It is I who deal death and life;
  when I have struck it is I who heal.

It is the Lord who deals death and life.

When I have whetted my flashing sword
  I will take up the cause of Right,
I will give my foes as good again,
  I will repay those who hate me.

It is the Lord who deals death and life.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

August 5th : First ReadingIsrael restored; Nineveh ruinedA Reading from the Book of Nahum 2: 1,3,3:1-3,6-7

August 5th : First Reading

Israel restored; Nineveh ruined

A Reading from the Book of Nahum 2: 1,3,3:1-3,6-7 
See, over the mountains the messenger hurries!
‘Peace!’ he proclaims.
Judah, celebrate your feasts,
carry out your vows,
for Belial will never pass through you again;
he is utterly annihilated.
Yes, the Lord is restoring the vineyard of Jacob
and the vineyard of Israel.
For the plunderers had plundered them,
they had broken off their branches.
Woe to the city soaked in blood,
full of lies,
stuffed with booty,
whose plunderings know no end!
The crack of the whip!
The rumble of wheels!
Galloping horse,
jolting chariot,
charging cavalry,
flash of swords,
gleam of spears...
a mass of wounded,
hosts of dead,
countless corpses;
they stumble over the dead.
I am going to pelt you with filth,
shame you, make you a public show.
And all who look on you will turn their backs on you and say,
‘Nineveh is a ruin.’
Could anyone pity her?
Where can I find anyone to comfort her? 

The Word of the Lord.

புதன், 3 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-23

ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-23
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 4 : பதிலுரைப் பாடல்திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10a)பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

ஆகஸ்ட் 4 : பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10a)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஆகஸ்ட் 4 : முதல் வாசகம்புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

ஆகஸ்ட் 4 : முதல் வாசகம்

புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத் தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச் செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 4th : GospelYou are Peter and on this rock I will build my ChurchA Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-23

August 4th : Gospel

You are Peter and on this rock I will build my Church

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-23 
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said, ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’ Then he gave the disciples strict orders not to tell anyone that he was the Christ.
  From that time Jesus began to make it clear to his disciples that he was destined to go to Jerusalem and suffer grievously at the hands of the elders and chief priests and scribes, to be put to death and to be raised up on the third day. Then, taking him aside, Peter started to remonstrate with him. ‘Heaven preserve you, Lord;’ he said ‘this must not happen to you.’ But he turned and said to Peter, ‘Get behind me, Satan! You are an obstacle in my path, because the way you think is not God’s way but man’s.’

The Word of the Lord.