இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 15 ஜூலை, 2026

ஜூலை 16 : நற்செய்தி வாசகம் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

 ஜூலை 16 : நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 16 : பதிலுரைப் பாடல் திபா 102: 12-14. 15-17. 18,20,19 (பல்லவி: 19b)

 ஜூலை 16 : பதிலுரைப் பாடல்

திபா 102: 12-14. 15-17. 18,20,19 (பல்லவி: 19b)
பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

12
ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
13
நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
14
அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். - பல்லவி
15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி
18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா!
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

ஜூலை 16 : முதல் வாசகம் புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9, 12, 16-19

 ஜூலை 16 : முதல் வாசகம்

புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9, 12, 16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.
என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர்.
ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.
ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.
இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.
ஆண்டவரின் அருள்வாக்கு

July 16th : Gospel My yoke is easy and my burden light A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 28-30

 July 16th : Gospel

My yoke is easy and my burden light
A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 28-30
At that time: Jesus declared, “Come to me, all who labour and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn from me, for I am gentle and lowly in heart, and you will find rest for your souls. For my yoke is easy, and my burden is light.”
The Gospel of the Lord.

July 16th : Responsorial Psalm Psalm 102:13–14ab and 15, 16–18, 19–21 (R. 20b) Response : The Lord looked down from heaven to the earth.

 July 16th : Responsorial Psalm

Psalm 102:13–14ab and 15, 16–18, 19–21 (R. 20b)
Response : The Lord looked down from heaven to the earth.
But you, O Lord, are enthroned forever, and your renown is from age to age. You will arise and take pity on Sion, for this is the time to have mercy; Behold, your servants love her very stones, are moved to pity for her dust.
R.: The Lord looked down from heaven to the earth.
The nations shall fear the name of the Lord, and all the earth’s kings your glory. When the Lord shall build up Sion, he will appear in all his glory. Then he will turn to the prayers of the helpless; he will not despise their prayers.
R.: The Lord looked down from heaven to the earth.
Let this be written for ages to come, that a people yet unborn may praise the Lord; The Lord looked down from his holy place on high, looked down from heaven to the earth, to hear the groans of the prisoners, and free those condemned to die.
R.: The Lord looked down from heaven to the earth.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Come to me, all who labour and are heavy laden, and I will give you rest, says the Lord.
R. Alleluia.

July 16th : First Reading 'Awake and exult, all you who lie in the dust' A Reading from the Book of the Prophet Isaiah 26: 7-9,12,16-19

 July 16th : First Reading

'Awake and exult, all you who lie in the dust'
A Reading from the Book of the Prophet Isaiah 26: 7-9,12,16-19
The path of the righteous is level; you make level the way of the righteous. In the path of your judgments, O Lord, we wait for you; your name and remembrance are the desire of our soul. My soul yearns for you in the night; my spirit within me earnestly seeks you. For when your judgments are in the earth, the inhabitants of the world learn righteousness. O Lord, you will ordain peace for us, for you have indeed done for us all our works. O Lord, in distress they sought you; they poured out a whispered prayer when your discipline was upon them. Like a pregnant woman who writhes and cries out in her pangs when she is near to giving birth, so were we because of you, O Lord; we were pregnant, we writhed, but we have given birth to wind. We have accomplished no deliverance in the earth, and the inhabitants of the world have not fallen. Your dead shall live; their bodies shall rise. You who dwell in the dust, awake and sing for joy! For your dew is a dew of light, and the earth will give birth to the dead.
The Word of the Lord

செவ்வாய், 14 ஜூலை, 2026

July 15th : Gospel You have hidden these things from the wise and revealed them to little children A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 25-27

 July 15th : Gospel

You have hidden these things from the wise and revealed them to little children
A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 25-27
At that time Jesus declared, “I thank you, Father, Lord of heaven and earth, that you have hidden these things from the wise and understanding and revealed them to little children; yes, Father, for such was your gracious will. All things have been handed over to me by my Father, and no one knows the Son except the Father, and no one knows the Father except the Son and anyone to whom the Son chooses to reveal him.”
The Gospel of the Lord

July 15th : Responsorial Psalm Psalm 94:5–6, 7–8, 9–10, 14–15 (R. 14a) Response : The Lord will not abandon his people.

 July 15th : Responsorial Psalm

Psalm 94:5–6, 7–8, 9–10, 14–15 (R. 14a)
Response : The Lord will not abandon his people.
They crush your people, Lord; and they humble your inheritance. They kill the widow and the stranger, and murder the fatherless child.
R.: The Lord will not abandon his people
And they say, “The Lord does not see; the God of Jacob pays no heed.” Mark this, you senseless people; fools, when will you understand?
R.: The Lord will not abandon his people
Can he who planted the ear not hear? Can he who formed the eye not see? Will he who trains the nations not punish? Will he who teaches man not have knowledge?
R.: The Lord will not abandon his people
The Lord will not abandon his people, nor forsake those who are his heritage; for judgment shall again be just, and all true hearts shall uphold it.
R.: The Lord will not abandon his people
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Blessed are you, Father, Lord of heaven and earth, that you have revealed to little children the mysteries of the kingdom.
R. Alleluia

July 15th : First Reading Assyria's arrogance and coming ruin A Reading from the Book of the Prophet Isaiah 10: 5-7,13-16

 July 15th : First Reading

Assyria's arrogance and coming ruin
A Reading from the Book of the Prophet Isaiah 10: 5-7,13-16
Thus says the Lord: Woe to Assyria, the rod of my anger; the staff in their hands is my fury! Against a godless nation I send him, and against the people of my wrath I commend him, to take spoil and seize plunder, and to tread them down like the mire of the streets. But he does not so intend, and his heart does not so think; but it is in his heart to destroy, and to cut off nations not a few; For he says: “By the strength of my hand I have done it, and by my wisdom, for I have understanding; I remove the boundaries of peoples, and plunder their treasures; like a bull I bring down those who sit on thrones. My hand has found like a nest the wealth of the peoples; and as one gathers eggs that have been forsaken, so I have gathered all the earth; and there was none that moved a wing or opened the mouth or chirped.” Shall the axe boast over him who hews with it, or the saw magnify itself against him who wields it? As if a rod should wield him who lifts it, or as if a staff should lift him who is not wood! Therefore the Lord God of hosts will send wasting sickness among his stout warriors, and under his glory a burning will be kindled, like the burning of fire.
The Word of the Lord.

ஜூலை 15 : நற்செய்தி வாசகம் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

 ஜூலை 15 : நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில்
இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.