இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

செப்டம்பர் 12 : நற்செய்தி வாசகம் நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49 அக்காலத்தில்

 செப்டம்பர் 12 : நற்செய்தி வாசகம்

நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49

அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”
ஆண்டவரின் அருள்வாக்கு

செப்டம்பர் 12 : பதிலுரைப் பாடல் திபா 116: 12-13. 17-18 (பல்லவி: 17a) பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

 செப்டம்பர் 12 : பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 17-18 (பல்லவி: 17a)
பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா!
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 12 : முதல் வாசகம் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22

 செப்டம்பர் 12 :  முதல் வாசகம்

நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22


என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?

எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

ஆண்டவரின் அருள்வாக்கு. 

September 12th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 43–49

 September 12th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 43–49
At that time: Jesus said to his disciples, “No good tree bears bad fruit, nor again does a bad tree bear good fruit, for each tree is known by its own fruit. For figs are not gathered from thorn bushes, nor are grapes picked from a bramble bush. The good person out of the good treasure of his heart produces good, and the evil person out of his evil treasure produces evil, for out of the abundance of the heart his mouth speaks. Why do you call me ‘Lord, Lord’, and not do what I tell you? Everyone who comes to me and hears my words and does them, I will show you what he is like: he is like a man building a house, who dug deep and laid the foundation on the rock. And when a flood arose, the stream broke against that house and could not shake it, because it had been well built. But the one who hears and does not do them is like a man who built a house on the ground without a foundation. When the stream broke against it, immediately it fell, and the ruin of that house was great.”
The Gospel of the Lord.

September 12th : Responsorial Psalm Psalm 116:12–13, 17–18 (R. see 17a)

 September 12th : Responsorial Psalm

Psalm 116:12–13, 17–18 (R. see 17a)
Response : A thanksgiving sacrifice I make to you, O Lord.
How can I repay the Lord for all his goodness to me? The cup of salvation I will raise; I will call on the name of the Lord.
R.: A thanksgiving sacrifice I make to you, O Lord.
A thanksgiving sacrifice I make; I will call on the name of the Lord. My vows to the Lord I will fulfil before all his people.
R.: A thanksgiving sacrifice I make to you, O Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. If anyone loves me, he will keep my word, says the Lord; and my Father will love him, and we will come to him.
R. Alleluia.

September 12th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 10:14–22

 September 12th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 10:14–22
My beloved, flee from idolatry. I speak as to sensible people; judge for yourselves what I say. The cup of blessing that we bless, is it not a participation in the blood of Christ? The bread that we break, is it not a participation in the body of Christ? Because there is one bread, we who are many are one body, for we all partake of the one bread. Consider the people of Israel: are not those who eat the sacrifices participants in the altar? What do I imply then? That food offered to idols is anything, or that an idol is anything? No, I imply that what pagans sacrifice they offer to demons and not to God. I do not want you to be participants with demons. You cannot drink the cup of the Lord and the cup of demons. You cannot partake of the table of the Lord and the table of demons. Shall we provoke the Lord to jealousy? Are we stronger than he?
The Word of the Lord

வியாழன், 10 செப்டம்பர், 2026

September 11th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 39–42

 September 11th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 39–42
At that time: Jesus told them a parable: “Can a blind man lead a blind man? Will they not both fall into a pit? A disciple is not above his teacher, but everyone when he is fully trained will be like his teacher. Why do you see the speck that is in your brother’s eye, but do not notice the log that is in your own eye? How can you say to your brother, ‘Brother, let me take out the speck that is in your eye’, when you yourself do not see the log that is in your own eye? You hypocrite, first take the log out of your own eye, and then you will see clearly to take out the speck that is in your brother’s eye.”
The Gospel of the Lord.

September 11th : Responsorial Psalm Psalm 84:3, 4, 5–6, 12 (R. 2)

 September 11th : Responsorial Psalm

Psalm 84:3, 4, 5–6, 12 (R. 2)
Response : How lovely is your dwelling place, O Lord of hosts!
My soul is longing and yearning for the courts of the Lord. My heart and my flesh cry out to the living God.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Even the sparrow finds a home, and the swallow a nest for herself in which she sets her young, at your altars, O Lord of hosts, my king and my God.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Blessed are they who dwell in your house, forever singing your praise. Blessed the people whose strength is in you, whose heart is set on pilgrim ways.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
For the Lord God is a sun, a shield; the Lord will give us his favour and glory. he will not withhold any good to those who walk without blame.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Your word, O Lord, is truth; sanctify us in the truth.
R. Alleluia.

September 11th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 9: 16–19, 22b–27

 September 11th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 9: 16–19, 22b–27
Brethren: If I preach the gospel, that gives me no ground for boasting. For necessity is laid upon me. Woe to me if I do not preach the gospel! For if I do this of my own will, I have a reward, but if not of my own will, I am still entrusted with a stewardship. What then is my reward? That in my preaching I may present the gospel free of charge, so as not to make full use of my right in the gospel. For though I am free from all, I have made myself a servant to all, that I might win more of them. I have become all things to all people, that by all means I might save some. I do it all for the sake of the gospel, that I may share with them in its blessings. Do you not know that in a race all the runners run, but only one receives the prize? So run that you may obtain it. Every athlete exercises self-control in all things. They do it to receive a perishable wreath, but we an imperishable. So I do not run aimlessly; I do not box as one beating the air. But I discipline my body and keep it under control, lest after preaching to others I myself should be disqualified.
The Word of the Lord

செப்டம்பர் 11 : நற்செய்தி வாசகம் பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

 செப்டம்பர் 11 : நற்செய்தி வாசகம்

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில்
இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.