இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 25 மே, 2023

May 26th : Responsorial PsalmPsalm 102(103):1-2,11-12,19-20 The Lord has set his sway in heaven.orAlleluia!

May 26th :  Responsorial Psalm

Psalm 102(103):1-2,11-12,19-20 

The Lord has set his sway in heaven.
or
Alleluia!
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.
As far as the east is from the west
  so far does he remove our sins.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

The Lord has set his sway in heaven
  and his kingdom is ruling over all.
Give thanks to the Lord, all his angels,
  mighty in power, fulfilling his word.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:26

Alleluia, alleluia!

The Holy Spirit will teach you everything
and remind you of all I have said to you.
Alleluia!

May 26th : First Reading 'I ordered Paul to be remanded until I could send him to Caesar'A Reading from the Acts of Apostles 25:13-21

May 26th :  First Reading 

'I ordered Paul to be remanded until I could send him to Caesar'

A Reading from the Acts of Apostles 25:13-21 
King Agrippa and Bernice arrived in Caesarea and paid their respects to Festus. Their visit lasted several days, and Festus put Paul’s case before the king. ‘There is a man here’ he said ‘whom Felix left behind in custody, and while I was in Jerusalem the chief priests and elders of the Jews laid information against him, demanding his condemnation. But I told them that Romans are not in the habit of surrendering any man, until the accused confronts his accusers and is given an opportunity to defend himself against the charge. So they came here with me, and I wasted no time but took my seat on the tribunal the very next day and had the man brought in. When confronted with him, his accusers did not charge him with any of the crimes I had expected; but they had some argument or other with him about their own religion and about a dead man called Jesus whom Paul alleged to be alive. Not feeling qualified to deal with questions of this sort, I asked him if he would be willing to go to Jerusalem to be tried there on this issue. But Paul put in an appeal for his case to be reserved for the judgement of the august emperor, so I ordered him to be remanded until I could send him to Caesar.’

The Word of the Lord.

புதன், 24 மே, 2023

மே 25 : நற்செய்தி வாசகம்அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

மே 25 :  நற்செய்தி வாசகம்

அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26
அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 25 : பதிலுரைப் பாடல்திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 1)பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.அல்லது: அல்லேலூயா.

மே 25 :  பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

அல்லது: அல்லேலூயா.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 21
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 25 : முதல் வாசகம்உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11

மே 25 :    முதல் வாசகம்

உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11
அந்நாள்களில்

யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார்.

அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.

அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர்.

வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.

மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, “துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 25th : Gospel Father, may they be completely oneA Reading from the Holy Gospel according to St.John 17: 20-26

May 25th :  Gospel 

Father, may they be completely one

A Reading from the Holy Gospel according to St.John 17: 20-26
Jesus raised his eyes to heaven and said:
‘Holy Father,
I pray not only for these,
but for those also
who through their words will believe in me.
May they all be one.
Father, may they be one in us,
as you are in me and I am in you,
so that the world may believe it was you who sent me.
I have given them the glory you gave to me,
that they may be one as we are one.
With me in them and you in me,
may they be so completely one
that the world will realise that it was you who sent me
and that I have loved them as much as you loved me.
Father, I want those you have given me
to be with me where I am,
so that they may always see the glory you have given me
because you loved me before the foundation of the world.
Father, Righteous One,
the world has not known you,
but I have known you,
and these have known that you have sent me.
I have made your name known to them
and will continue to make it known,
so that the love with which you loved me may be in them,
and so that I may be in them.’

The Word of the Lord.

May 25th : Responsorial PsalmPsalm 15(16):1-2,5,7-11 Preserve me, Lord, I take refuge in you.orAlleluia, alleluia, alleluia!

May 25th :  Responsorial Psalm

Psalm 15(16):1-2,5,7-11 

Preserve me, Lord, I take refuge in you.
or
Alleluia, alleluia, alleluia!
Preserve me, God, I take refuge in you.
  I say to the Lord: ‘You are my God.
O Lord, it is you who are my portion and cup;
  it is you yourself who are my prize.’

Preserve me, Lord, I take refuge in you.
or
Alleluia, alleluia, alleluia!

I will bless the Lord who gives me counsel,
  who even at night directs my heart.
I keep the Lord ever in my sight:
  since he is at my right hand, I shall stand firm.

Preserve me, Lord, I take refuge in you.
or
Alleluia, alleluia, alleluia!

And so my heart rejoices, my soul is glad;
  even my body shall rest in safety.
For you will not leave my soul among the dead,
  nor let your beloved know decay.

Preserve me, Lord, I take refuge in you.
or
Alleluia, alleluia, alleluia!

You will show me the path of life,
  the fullness of joy in your presence,
  at your right hand happiness for ever.

Preserve me, Lord, I take refuge in you.
or
Alleluia, alleluia, alleluia!

Gospel Acclamation cf.Jn16:7,13

Alleluia, alleluia!
I will send you the Spirit of truth, says the Lord;
he will lead you to the complete truth.
Alleluia!

May 25th : First Reading'You have borne witness in Jerusalem: now you must do the same in Rome'A Reading from the Acts of Apostles 22:30, 23:6-11

May 25th :  First Reading

'You have borne witness in Jerusalem: now you must do the same in Rome'

A Reading from the Acts of Apostles 22:30, 23:6-11 
Since the tribune wanted to know what precise charge the Jews were bringing, he freed Paul and gave orders for a meeting of the chief priests and the entire Sanhedrin; then he brought Paul down and stood him in front of them. Now Paul was well aware that one section was made up of Sadducees and the other of Pharisees, so he called out in the Sanhedrin, ‘Brothers, I am a Pharisee and the son of Pharisees. It is for our hope in the resurrection of the dead that I am on trial.’ As soon as he said this a dispute broke out between the Pharisees and Sadducees, and the assembly was split between the two parties. For the Sadducees say there is neither resurrection, nor angel, nor spirit, while the Pharisees accept all three. The shouting grew louder, and some of the scribes from the Pharisees’ party stood up and protested strongly, ‘We find nothing wrong with this man. Suppose a spirit has spoken to him, or an angel?’ Feeling was running high, and the tribune, afraid that they would tear Paul to pieces, ordered his troops to go down and haul him out and bring him into the fortress.
  Next night, the Lord appeared to him and said, ‘Courage! You have borne witness for me in Jerusalem, now you must do the same in Rome.’

The Word of the Lord.

செவ்வாய், 23 மே, 2023

மே 24 : நற்செய்தி வாசகம்நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19

மே 24 :  நற்செய்தி வாசகம்

நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.

இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 24 : பதிலுரைப் பாடல்திபா 68: 28-29. 32-34a. 34b-35c (பல்லவி: 32a)பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

மே 24 :  பதிலுரைப் பாடல்

திபா 68: 28-29. 32-34a. 34b-35c (பல்லவி: 32a)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.
அல்லது: அல்லேலூயா.

28
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
29
எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். - பல்லவி

32
உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
33
வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார்.
34a
கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். - பல்லவி

34b
அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
35c
கடவுள் போற்றி! போற்றி! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, a
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.