இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 13 மார்ச், 2021

மார்ச் 14 : முதல் வாசகம்ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன.குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16, 19-23

மார்ச் 14 :  முதல் வாசகம்

ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன.

குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16, 19-23
அந்நாள்களில்

குருக்களின் தலைவர்களும் மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின்மீதும், தம் உறைவிடத்தின்மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்ப முடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. க

கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை, அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். “நாடு, ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்” என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின.

பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

14 March 2021, Sunday 📖GOSPEL "God sent his Son that through him the world may be saved" A Reading From The Holy Gospel According To John (3, 14-21)

14 March 2021, Sunday 

📖GOSPEL 

"God sent his Son that through him the world may be saved" 

A Reading From The Holy Gospel According To John (3, 14-21) 
At that time, Jesus said to Nicodemus: "As the bronze serpent was lifted up by Moses in the wilderness, so must the Son of man be lifted up, that in him every man who believes have eternal life. For God so loved the world that he gave his only begotten Son, so that whoever believes in him will not be lost, but obtain eternal life. For God sent his Son into the world, not to judge the world, but to save the world through him. Whoever believes in him escapes Judgment, whoever does not believe is already judged, because he did not believe in the name of the Only Begotten of God. And Judgment, here it is: light came into the world, and men preferred darkness to light, because their works were evil. He who does evil hates light: he does not come to the light, lest his works be denounced; but he who does the truth comes to the light, so that it may be manifested that his works were done in union with God. " 

I believe in God, /...

14 March 2021, Sunday SECOND READING "Dead as a result of faults, it is by grace that you are saved" Reading from the letter of Saint Paul the apostle to the Ephesians (2, 4-10)

14 March 2021, Sunday 

SECOND READING 

"Dead as a result of faults, it is by grace that you are saved" 

Reading from the letter of Saint Paul the apostle to the Ephesians (2, 4-10) 
Brothers, God is rich in mercy; because of the great love with which he loved us, we who were dead as a result of our faults, he gave us life with Christ: it is indeed by grace that you are saved. With him he resuscitated us and made us sit in heaven, in Christ Jesus. He wanted in this way to show, throughout future ages, the superabundant richness of his grace, by his goodness for us in Christ Jesus. It is indeed by grace that you are saved, and by means of faith. It doesn't come from you, it's the gift of God. It does not come from actions: no one can take pride in it. It is God who made us, he created us in Christ Jesus, with a view to carrying out good works which he prepared in advance for us to practice. 

The Word of the Lord.

14 March 2021, Sunday RESPONSORIAL Respons: May my tongue attach to my palate if I lose your memory! Psalm 136 (137)

14 March 2021, Sunday 

RESPONSORIAL 

Respons: May my tongue attach to my palate if I lose your memory! 

Psalm 136 (137) 

By the rivers of Babylon we sat and wept,
remembering Zion; we had hung our harps
from the willows in the neighborhood
. R 
It was there that our overcomers asked us for songs,
and our executioners for joyful tunes:
“Sing to us,” they said, “
some song of Zion. R 

How would we sing a song of the Lord
in a foreign land?
If I forget you, Jerusalem,
may my right hand forget me! R 

I want my tongue to stick to my palate
if I lose your memory,
if I do not raise Jerusalem
to the height of my joy. R

14 March 2021, Sunday FIRST READING The Lord's anger and mercy manifested by the exile and deliverance of the people Reading from the second book of Chronicles (36, 14-16. 19-23)

14 March 2021, Sunday 

FIRST READING 

The Lord's anger and mercy manifested by the exile and deliverance of the people 

Reading from the second book of Chronicles (36, 14-16. 19-23) 
In those days all the chief priests and the people multiplied their infidelities, imitating all the abominations of the heathen nations, and they profaned the House which the Lord had consecrated in Jerusalem. The Lord, the God of their fathers, without delay and without tiring, sent them messengers, for he had mercy on his people and on his home. But they mocked the messengers of God, despised his words, and mocked his prophets; finally, there was no longer a remedy for the Lord's growing fury against his people. The Babylonians burned down the House of God, destroyed the rampart of Jerusalem, set fire to all its palaces, and reduced all their valuables to nothing. Nebuchadnezzar deported to Babylon those who had escaped the massacre; they became slaves to the king and his sons until the time of the Persian rule. Thus is fulfilled the word of the Lord proclaimed by Jeremiah: The earth will be desolate and it will rest for 70 years, until it has made up for all the desecrated Sabbaths with this rest.
Now, in the first year of the reign of Cyrus, king of Persia, for the fulfillment of the word of the Lord proclaimed by Jeremiah, the Lord inspired Cyrus, king of Persia. And he had his kingdom published - and even recorded in writing -: “Thus saith Cyrus king of Persia: The Lord, the God of heaven, has given me all the kingdoms of the earth; and he commissioned me to build him an house in Jerusalem in Judah. Whoever among you is of his people, the Lord his God be with him, and let him go up to Jerusalem! " 

The Word of the Lord.
__________

வெள்ளி, 12 மார்ச், 2021

மார்ச் 13 : நற்செய்தி வாசகம்பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

மார்ச் 13 :  நற்செய்தி வாசகம்

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 13 : பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்

மார்ச் 13 : பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

18
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19ab
அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 7b, 8b காண்க

'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 13 : முதல் வாசகம்உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

மார்ச் 13 :  முதல் வாசகம்

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

13 March 2021, Saturday 📖GOSPEL "The tax collector had become a righteous man, rather than the other" A Reading From The Holy Gospel According To Luke (18, 9-14)

13 March 2021, Saturday 

📖GOSPEL 

"The tax collector had become a righteous man, rather than the other" 

A Reading From The Holy Gospel According To Luke (18, 9-14) 
At that time, to some who were convinced that they were righteous and who despised others, Jesus told the following parable: “Two men went up into the temple to pray. One was a Pharisee, and the other a tax collector (that is, a tax collector). The Pharisee stood and prayed within himself: “My God, I give you thanks because I am not like other men - they are thieves, unjust, adulterers - or even like this tax collector. I fast twice a week and pay a tenth of whatever I earn. ” The tax collector stood at a distance and did not even dare to raise his eyes to the sky; but he was beating his chest, saying: “My God, show yourself favorable to the sinner that I am!” I tell you: when the latter came down to his house, it was he who had become a righteous man, rather than the other. He who rises will be humbled who lowers will be high. " 

I believe in God, /....
___

13 March 2021, Saturday RESPONSORIAL Respons: You want fidelity, Lord, not sacrifice. Psalm 50 (51)

13 March 2021, Saturday 

RESPONSORIAL 

Respons: You want fidelity, Lord, not sacrifice. 

Psalm 50 (51) 
Have
mercy on me, my God, in your love, according to your great mercy, blot out my sin.
Wash me entirely from my fault,
cleanse me from my offense. R 

If I offer a sacrifice, you don't want it,
you don't accept a holocaust.
The sacrifice that pleases God is a broken spirit;
you do not reject, O my God, a broken and crushed heart. R 

Grant happiness to Zion,
raise up the walls of Jerusalem.
Then you will accept righteous sacrifices,
oblations and burnt offerings on your altar. R 

_______ 

🌿Gospel Acclamation 

Psalm 95: 7b, 8b 

‘Do not harden your heart. Instead, listen to his voice, 'says the Lord.